Author Topic: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி  (Read 1055 times)

Offline RemO

பூவாக பொறந்திருந்தா
பூமியில எடமிருக்கும்
பொண்ணாக பொறந்ததால
போய் வாடி கன்னுக்குட்டி.

திண்ணையில எடுத்துவச்ச
கள்ளிபால குடிச்சுபுட்டு
சின்ன மூச்சே நின்னுபோடி.
சீக்கிரமா செத்துபோடி.

மூணுமணிநேரமுன்னே
பூமிக்கு வந்தவளே!
மூணுகிலோ எடையிருக்க
மொடமின்றி பொறந்திருக்க.

மொகராசி பரவால்ல
மூக்குநுனியூம் பரவால்ல
மகராசி நீ பொறந்த
நேரந்தான் நல்லால்ல

பொட்டக்கோழி பொறந்துச்சுன்னா-கூடை
போட்டு பொத்தி வப்போம்.
பொட்டமாடு பொறந்துச்சுன்னா
பொங்க வச்சு பூச வப்போம்.

வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?

வேறேது கிரத்தில்
பொறந்திருக்க கூடாதா?
நம்ம வீட்டு நாயாக - நீ
இருந்திருக்க கூடாதா?

எறும்பாக புழுவாக
எதுவாக பொறந்தாலும்
நல்லாத்தான் பொளச்சிருப்ப
நாயாக இருந்தாலும்.

அடுத்தமுறை பூமி வந்தா
ஆம்பளயா வந்து சேரு.
அப்படியூம் முடியலன்னா
ஆடுமாடா வரப்பாரு.


Naan rasitha kavithai

Offline Yousuf

இந்த கவிதையை படிக்கும் போது எனக்கு நான் அடிக்கடி வாசிக்கும் ஒரு திருகுர்'ஆண் வசனம் நினைவு வந்தது இதோ அந்த வசனம்...

“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; இறைவன் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் - கொலை செய்யாதீர்கள் - இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான். (திருகுர்'ஆண்:-6:151.)

எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு இறைவன் உண்ண அனுமதித்திருந்ததை இறைவனின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை. (திருகுர்'ஆண்:-6:140.)



நல்ல கவிதை ரெமோ பகிவிர்க்கு நன்றி!

Offline RemO

Nantri Usf

kadavul sonatha sonakuda thiruntha matanga

Offline Global Angel

பெண்களை இன்னுமா சிசு கொலை செய்கின்றார்கள் ....
                    

Offline RemO

inum sila idangalil nadaka than seikirathu