Author Topic: கோபத்தை அறவே குறையுங்கள்  (Read 1007 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
* அடக்கம் இன்றி ஒழுக்கம் கெட்டு நூறு ஆண்டுகள்
வாழ்வதைக் காட்டிலும், தியானம் செய்து ஒழுக்கத்துடன்
ஒருநாள் வாழ்பவனின் வாழ்வு சிறப்புடையது.

-
-* வழி தவறிச் செல்லும் ரதம் போலப் பொங்கி வரும்
கோபத்தினை அடக்கி ஆள்பவனையே நான் சரியான
சாரதி என்று சொல்வேன், மற்றவர்கள் கடிவாளக் கயிற்றைக்
கையில் வைத்திருப்பவர்களே.



-* எவன் ஒருவன் அடக்க அரிதான கொடிய ஆசையை
அடக்கி வெல்கிறானோ, அவனுடைய துயரங்கள் தாமரை
இலை மீது விழுந்த தண்ணீர் துளிகள் போல, அவனை விட்டு
அகலும்.
-

* வயது முதிர்ந்த பெரியோரை வணங்கி மரியாதை செய்து
வருபவனுக்கு ஆயுள், அழகு, இன்பம், வலிமை என்னும்
பயன்கள் அதிகரிக்கும்.

-
-* உடம்பின் எரிச்சலை அடக்கிக் காக்க வேண்டும்.
உடலை அடக்கிப் பழக வேண்டும்.
ஆசையை அடியோடு
வேரறுத்து, நல்லொழுக்கத்தை பேணி வரவேண்டும்.
-

* பொறாமை, பேராசை, தீய ஒழுக்கம் இவைகளை எவன்
அழித்துவிட்டானோ, அவனே குற்றமற்ற மேதாவி. அவனே
உண்மையான அழகு உடையவன்.
-

- புத்தர்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Yousuf

Re: கோபத்தை அறவே குறையுங்கள்
« Reply #1 on: February 17, 2012, 07:54:17 PM »
நல்ல தகவல் ஸ்ருதி!

கோபம் இல்லை என்றாலே நிறைய பிரச்சனைகளை தவிர்க்கலாம்!

நன்றி!

Offline Global Angel

Re: கோபத்தை அறவே குறையுங்கள்
« Reply #2 on: February 23, 2012, 04:02:03 AM »
புத்தர் என்னமோ நல்லத்தான் சொல்லி இருகாரு ... புத்த மான்களோ .. தலை கீழா பண்றாங்க ....