Author Topic: ~ # ஏஞ்சல் .. ~  (Read 2123 times)

Offline MysteRy

~ # ஏஞ்சல் .. ~
« on: October 01, 2016, 09:31:04 AM »
Written by Rajesh

# ஏஞ்சல் ..



"இறை தேடி பறக்கும் இவ்வுலகில்..
உறவு தேடி அலையும் சில பிஞ்சுகள் மனம்..
சாக்லேட் பிஸ்கட்களுக்கு ஏங்காமல்
பாசம் ஏதேனும் ஒரு பெயரில் கிடைக்காதோ என்று..
இவ்வுலகில் எனக்கும் ஒர் சொந்தம் கிடைக்காதோ?
இவ்வுலகை நானும் சிறகடித்து சுற்றிதிரய இயலாதோ?"

#####

மழைகால இரவு.
ஆனால் அந்நேரம் மழை இல்ல.
காற்று மட்டும் வீசிக்கொண்டிருந்தது மழை வரும் அறிகுறியை காட்டிக்கொண்டு.

இருண்ட வானில். ஆங்காங்கு வெண்பஞ்சு மேகத்தை வெளிபடுத்தும் மின்னலை சற்றும் கண் சிமிட்டாமலும் பயமில்லா மனதுடனும் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டு இருந்தாள் இலக்கியா.

பிரயாயம் 8தானே.
ஆனால் அவளுக்குள் இருக்கும் எண்ணங்களும் கற்பனைகளும் மூவெட்டென இருக்கும்..

மின்வெட்டு.
மின்னல் ஒலி மட்டுமே அவள் முகத்தை இவ்வுலகிற்கு காண்பித்துக்கொண்டிருந்தது விட்டு விட்டு.

"இலக்கியா இந்த இருட்டில் என்ன செய்யுற வந்து ப்ரேயர் ஹால்ல எல்லோரோடவும் கதை கேட்டுகிட்டு உட்காறலமில்ல" என்ன குறளுடன் லட்சுமியம்மா உள்ளே வந்தார்.

"இல்லமா. நான் இங்கயே இருக்கேன் நீங்க போங்க. எல்லோரும் சாப்பிடும் போது என்ன வந்து கூட்டிகிட்டு போங்க" என்று திரும்பாமல் ஜன்னலை பார்த்தபடி பதிலளித்தால்.

லட்சுமியம்மா இலக்கியா தலையை மெல்ல வருடிவிட்டால் பின்னிருந்து.

இலக்கியா அவள் முகத்தை லட்சுமி பக்கம் திருப்பி ஒரு மென் புன்னகை பூத்தால்.
மின்னல் ஒளி தோற்றுவிடும் அவளின் அந்த சிரிப்பில்.

லட்சுமியின் கையை பிடித்து உள்ளங்கையில் முத்தமிட்டு பின் அந்த கையை அவள் கண்ணதோடு வைத்து அழுத்தி பிடித்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள் இலக்கியா.
பதிலுக்கு லட்சுமி தன்னுடைய மறுகையை இலக்கியாவின் மற்றொரு கண்ணத்தில் வைத்து அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டாள்.

அந்நேரம் மெல்ல சாரல் மழை பொழிந்தது.

"மா"

"என்ன இலக்கியா?"

"நான் மத்த பசங்க மாதிரி மழையில ஓடி ஆடி விளையாட முடியாதாமா?" ஏக்கத்தோடு கேட்டாள் இலக்கியா.

முடியாது என்கிற பதிலை சொல்ல முடியாமல் லட்சுமி இலக்கியாவின் முன் வந்து மண்டியிட்டு சக்கர நாற்காலியில் இருக்கும் இலக்கியாவை கட்டி அணைத்துக்கொண்டாள்.

மெதுவாக ரோசைய்யாவின் குறள் தூரத்தில் கேட்க லட்சுமி இதோ வந்துடேன் ஐய்யா என்றபடி எழுந்து செல்ல தயாராகி இலக்கியாவின் சக்கரநாற்காலியை பிடித்தால் லட்சுமி.

"நான் இங்கையே இருக்கேன்மா. நீங்க போங்க. சாப்பிடறபோ வறேன்"

லட்சுமி அறையிலிருந்து சென்றாள்.

சில நொடிக்கு பின் ஏதோ பரபரப்புடன் தன் கைகளால் நாற்காலியை உருட்டி ஜன்னலில் இருந்து நகர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றியிருந்த மேசை அருகே சென்றாள் இலக்கியா.

அந்த அறை வாயிலில் யாரோ நிற்பதைபோல் உணர்ந்தால்.

சற்று குறளை உயர்த்தி "யார் அது வெளிய நிற்கிறது" என்றாள்

பதில் வரவில்லை.
அதற்கு பதிலாக அந்த உருவமே மெல்ல உள்ளே வர ஆரம்பித்தது.

அந்த உருவத்தின் மீது வரும் வாசனையை இதுவரை அவள் உணர்ந்ததில்லை. அது ஏதோ காலை பனியில் இருக்கும் புல்லின் வாசனையுடம் ஏதோ ஒரு மலரின் மணமும் கலந்தாற்போல் இருந்தது.

அவள் மறுபடியும் பதற்றத்துடன் "யார்னு கேக்குறேன்ல. யார்?" என்று இன்னும் சத்தமா கேட்டாள்.

கதவு கடந்து உள்ளே வந்த உருவம் அந்த இருட்டிலும் அவ்வளவு சுலபமாக முகம் உடையெல்லாம் அடுத்தவர் காணும் அளவுக்கு பிரகாசமாக இருந்தது.

சிரித்தமுகம்.
வெள்ளைநிற முழுகை பனியனில் வரி வரி கோடுகளாகவும்.
நீல நிற ஜீன்ஸூம் அணிந்த அந்த தேஜஸ் நிறைந்த முகத்தை பார்த்தபின் இலக்கியாவிற்க்கு பதற்றம் குறைந்தது.
இனம் புரியாத சந்தோஷம் அவளுள்.

மறுபடியும் கேட்டாள் "யார் நீங்க?? விசிட்டறா??"

"ஹாஹாஹா ம்ம்ம் விசிட்டர்தான். :) ஆனா உன்ன பார்க்க. உனக்காக வந்திருக்க விசிட்டர்"

"என்ன பார்க்கவா?" என்று வியப்புடன் "யார் நீங்க?" என்றால்

"ஹம்ம்ம். உனக்கு என்ன பெயர் பிடிக்கும் ஆம்பளை பெயர்ல?"

புரியாமல் பார்த்தால் இலக்கியா.

"செல்லுமா. உனக்கு பிடிச்ச பேரு என்ன?"

"ஜேக்கிசான்" என்று நக்கலா பதில் சொல்லிட்டு இப்போ உங்க பேரு சொல்லுங்கனு கேட்ட.

அதுக்கு "ஹா ஹா ஹா.. என் பேரு ஜேக்கி"

"விளையாடம நீங்க யாருனு சொல்லுங்க அங்கிள்"

அதுகுள்ள இலக்கியாவோட குறள் கேட்டு ரோசைய்யாவும் லட்சுமி அம்மாவும் கூட ரெண்டு பசங்களும் வந்தாங்க அங்க.

ரோசைய்யா அவன பார்த்து "யார் நீங்க? இங்க என்ன பண்ணுறீங்க?" என்றார்

"சார். என் பெயர் ஜேக்கி.(சிரித்துக்கொண்டேஒரு நொடி ஓர பார்வை பார்த்தான் இலக்கியாவை. இலக்கிய புரியாமலே பார்த்தால் உண்மையா பொய்யா என்று) நான் இங்க சுற்றிபார்க்க வந்தேன். மழை வரவே இங்க ஒதுங்கி நின்னேன். இந்த பாப்பா உள்ள இருந்து பயந்து யார்னு கேட்டுச்சு. சோ அதான் நான் பேய்யோ பூதமோ இல்ல மனுசன்தான்னு சொல்ல உள்ள வந்தேன்"

"ஓ! உங்க கூட யாரும் வரலையா தம்பி?"

"இல்ல ஐய்யா. நான் தனியாதான் சுத்துவேன். 11மாதம் வேலை ஒரு மாதம் முழுசா இப்படி ஊர் ஊரா சுத்துவேன். பிடிச்ச இடங்களுக்கெல்லாம் போவேன்"

"நல்லதுபா" என்ற ரோசைய்யா அவனையே பார்த்தார். அவருக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத நல்ல உணர்வாக இருந்தது.

மேலே தொடர்ந்து "சாப்பிட்டியா இல்லையாபா?" என்றார்

"இல்லைங்க இனிமேதான் எங்க தங்குறதுனு பார்த்துட்டு அப்புறம் சாப்பிடனும்"

"அப்படியா. இதுக்கு மேல மழை விட்டு இந்நேரத்தில நீ எங்க போய் சாப்பிட்டு படுப்ப. உனக்கு சிரமம் இல்லனா இங்கையேகூட தங்கிக்கபா"

இல்லைங்க ஐய்யா என்றவனை கை பிடித்து இழுத்து சென்றார் வாபா சாப்பிடுவோம் என்று.

ஜாக்கி கையை பிடித்த நேரம் ரோசையாவிற்க்கு புத்துணர்வு கிடைத்தது அவரது உடலில். அவருக்கு ஜாக்கியை காண காண நம்பிக்கை அதிகமாகிக்கொண்டே போனது.

ஜேக்கி இலக்கியாவை பார்த்து சிரித்தபடியே ரோசையாவின் இழுப்புக்கு அவர் பின் சென்றான்.

இலக்கியாவின் நாற்காலியை லட்சுமி அம்மா தள்ளிக்கொண்டு வந்தார்.

துண்டிக்கபட்ட மின்சாரம் மீண்டும் வந்தது.
ஜேக்கி தன் முதுகில் இருந்த பையை கழட்டி ஒரு மூலையில் வைத்து உணவு உண்ண கீழே குழந்தைகளோடு அமர்ந்தான்.
எல்லோ குழந்தைகளும் ஜேக்கியை ஒரு புன்னகையுடன் பார்த்தன. காரணம் அவனும் அவ்வாறே அவர்களை பார்த்தான்.

ரோசைய்யா பேச தொடங்கினார் அனைவருக்கும் கேட்கும் வகையில் "குழந்தைகளா. இவர் பெயர் ஜேக்கி. இவர் ஒரு சுற்றுலா பயணி. இன்று இந்த இரவு இவர் இங்கு நம்மோடுதான் தங்க போகிறார். எல்லோரும் ஜேக்கி அண்ணாக்கு வணக்கம் சொல்லுங்க"

வணக்கம் அண்ணா ங்கிற வார்த்த சத்தமா கூட்டமா சொன்னாங்க பசங்க.
பதிலுக்கு ஜேக்கி அழகாக சிரித்தான்.

பிறகு உணவு உண்ட பின் அனைவரும் ப்ரேயர் ஹால் சென்று கடவுளை வணங்கிவிட்டு அவர்களை கவனித்துக்கொண்டிருந்த ஜேக்கியை அனுகினார்கள்.

ஜேக்கி அதில் முதலில் வந்த சிறுவனை அவன் மடியில் அமர்த்திக்கொண்டு அவன் கண்ணத்தை கிள்ளியவாறே அவன் பெயரை கேட்டான்.

"கண்ணன்"

"வாவ்! உனக்கு பெரிய பெரிய கண்ணு இருக்கற்தால உனக்கு இந்த பேரு வச்சிடாங்களா?"

"ஹாா.. இல்ல இல்ல நான் குட்டியா இருக்கும்போதே ரோஸ் வச்சாரு எனக்கு அப்படி. அப்போ என் கண்ணு குட்டி குட்டியாதான் இருந்திச்சு"

"ரோஸ்?"

எல்லோ பசங்களும் "ரோஸ் அப்பாவதான் அப்படி சொல்லுறான்" என்றார்கள்.

"ஓ ரோசைய்யா‍! அவர்தான் ரோஸ்?"

"ம்ம்ம்.. ஆமா" என்று அவன் சட்டையின் அடிபகுதியை சுருட்டியவாறே சொன்னான் கண்ணன்.

பிறகு அனைவரின் பெயரையும் கேட்டான் ஜேக்கி.
பிறகு கூட்டத்தில் ஒரு சிறுமி "நீங்க என்ன செய்யுறீங்க அண்ணா" என்றாள்.

"நான் ஊர் சுத்துவேன். குட்டி பசங்களுக்கு கதை சொல்லுவேன்

ம்ம்ம்
மேஜிக் பன்னுவேன்" என்று சொல்லிக்கொண்டு தன் தலையை முன் கொண்டுவந்து அவனிடம் அதை கேட்ட சிறுமின் தலையுடன் மோதி பின் கண்ணடித்தான்.

எல்லோ சிறார்களும் கொக்களித்தனர்.
சிலர் ஜேக்கியின் கண்ணத்தை கிள்ளி கொஞ்சி கெஞ்சி "ப்ளீஸ்
ப்ளிஸ்
ப்ளீஸ் அங்கிள். ஒரே ஒரு மேகஜிக் செஞ்சி காட்டுங்க" என்று கேட்டார்கள்

அதற்குள் சிலர் அவன் முதுகின் பின்புறமும் முதுகின் மேலும் நின்றனர்.

"சரி சரி. நான் மேஜிக் பன்னுறேன். நீங்க எல்லோரும் அமைதியா உட்காருங்க" என்று ஜேக்கி சொன்னதும் அனைவரும் அமைதியாக அமர்ந்தனர்.

மடியிலிருந்த கண்ணன் ஜேக்கியின் கையை பிடித்துக்கொண்டி பெருமித சிரிப்பு ஒன்றை காட்டியவாரு இருந்தான்.

இதையெல்லாம் தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்தால் இலக்கியா.

இலக்கியாவிற்கு கொஞ்சம் பின் ரோசைய்யாவும் லட்சுமியும் சமையல்காரரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

ஜேக்கி அவன் உள்ளங்கையை காட்டி ஏதேனும் இருக்கிறதா என்றான்.
அனைவரும் உற்றுபார்த்து. சில வாண்டுகள் ஜேக்கி கையை பிடித்து கீறி பார்த்தும் எதுவும் இல்லை என்றார்கள்.

ஜேக்கி தன் இரு கையையும் பக்கவாட்டில் மேல் உயர்த்தி கைகளை தட்டி அதை மூடியவாறே கீழ் கொண்டுவந்து அனைவரையும் பார்த்தான்.

அனைவரின் கண்களிலும் ஒரு பரபரப்பு. இமைக்காமல் பார்த்தனர்.
ரோசைய்யா முதற்கொண்டு எல்லோரும்.

ஜேக்கி கையை திறந்தான்.
கையில் ஓன்றுமே இல்ல.
நக்கலாக சிரித்தான். எல்லோ வாண்டுகளும் அவனை அடித்தும் அவன் கழுத்தை நெருக்கவும் செய்தன.
ஜேக்கி இன்னும் சத்தமாக சிரித்தான்.

ரோசைய்யா சிரித்துக்கொண்டே அவர் அறைக்கு சென்றார்.
இலக்கியாவும் சலிப்புடன் தன் நாற்காலியின் திசையை திருப்பினாள்.
சக்கரத்தை உருட்டி நகர்ந்தாள் அங்கிருந்து.
இதை கவனித்தான் ஜேக்கி.

சரி சரி இப்போ நிஜமா பன்னுறேன் என்றான்.
வாண்டுகள் நம்பவில்லை.
பொய் பொய்னு அவன அடிச்சதுங்க.

ஜேக்கி மீண்டும் அதேபோல் செய்து கைகளை திறந்தான். ஒரு வெள்ளை புறா இருந்தது.

எல்லோ வாண்டுகளும் மகிழ்ச்சியில் கை தட்டியது. அதை கேட்டு இலக்கியா திரும்பி பார்த்தாள்.

ஜேக்கி தன் கையிலிருந்த வெள்ளை புறாவை தூக்கி பறக்கவிட்டான். அது மேல் இருந்த பாலகனி வழியாக பறந்து வெளியே சென்றது.

அதை எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்த நேரம் ஜேக்கி கண்ணனின் சட்டைனுள் இருந்து ஒரு புறாவை எடுத்து பறக்கவிட்டான்.
எல்லோரும் வியந்து ஆனந்த கூச்சலிட்டனர்.

பின் ஒரு சிறுமியின் தலையில் இருந்து மயில் இறகை எடுத்தான். அதை அவள் கண்ணத்தில் தடவி பின் அதை ஊதினான். அது வண்ண வண்ண ஒளிகளாக பறந்த மறைந்தது.

பின் இன்னு பல கண்கட்டி வித்தைகளை காட்டிகொண்டு சிறார்களை பரவசபடுத்திக்கொண்டிருந்தான்.

சத்தம் கேட்டு ரோசைய்யா வந்து இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார்.

சிறிது நேரத்திற்க்கு பின் ரோசைய்யா அனைவரையும் உறங்க செல்ல அழைத்தார்.
அனைவரும் மகிழ்ச்சியாகவும் அறைமனதாகவும் உறங்க சென்றனர்.

ஜேக்கி இலக்கியவின் எதிரில் போய் நின்றான்.

ரோசைய்யா அவனை அழைத்தார் உறங்க இடம் காட்டுவதாக.. உடனே இலக்கிய தொடர்ந்தாள் "ரோஸ்..
அண்ணா என்கூடவே தங்கட்டுமே இன்னிக்கி" என்றால் பாவமாக.

ரொசைய்யாவும் சரி என்று சென்றுவிட்டார்.

ஜேக்கி இலக்கியாவின் நாற்காலியை அவள் அறை நோக்கி தள்ளினான்.

"அப்போ உங்க நிஜ பெயரே ஜேக்கிதானா?"

மௌனமாக புன்னகைத்தான்.

திரும்பி அவன் முகம் பார்த்தாள்

"சொல்லுங்க

நீங்க என்ன பார்க்கதான் வந்தீங்களா?"

அதற்குள் அவள் அறை வந்துவிட்டது.

கதவை தாழிட்டுவிட்டு அவள் முன்வந்து மண்டியிட்டான்.

"நான் உனகாகதான் வந்தேன்"

"என்ன உங்களுக்கு தெரியுமா?"

"ம்ம்ம் தெரியும்"

"எப்படி தெரியும். என் அப்பா உங்களுக்கு தெரிஞ்சவரா இல்ல என் அம்மாவ உங்களுக்கு தெரியுமா?"

"உன்ன மட்டும்தான் தெரியும்"

இலக்கியா புரியாதவளாக பார்த்தாள் அவனை.

"பலமுறை பார்த்திருகிறேன் நான் உன்ன இருட்டிலிருந்து. உன் சோகங்கள். உன் வருத்தங்களை.

நீ எப்பொழுதெல்லாம் தனியா இருக்கியோ அப்பொழுதெல்லாம் நான் உன்னருகில்தான் இருந்தேன்"

"என்ன சொல்லுறீங்க?"

"இது எனக்கு கிடைத்த வாய்ப்பு. இதை நான் உன்னோடு கழிக்கனும்னு இருக்கேன்"

"என்ன வாய்ப்பு. என்னனா நீங்க பேசுறீங்க? எனக்கு புரியல"

"என்ன எல்லோரும் ஏஞ்சல்னு சொல்லுவாங்க" கண்ணடித்தான்.

"ஏஞ்சலா. ஹா ஹா ஹா ஹா. நல்லா ஜோக் பன்னுங்க"

ஜேக்கி சிரிச்சுகிட்டே அவள பார்த்துகிட்டு இருந்த. அவ சந்தோசமா தன்னை மறந்து சிரித்துக்கொண்டிருந்தால்.

"ஏஞ்சல்னா றெக்கை இருக்கும். தலையில வைட்கலர் ரிங் இருக்கும். அப்புறம் பிரைட்டா இருப்பாங்க. மின்னுவாங்க" சொல்லிவிட்டு தொடர்ந்து சிரித்தாள்.

"ஏன் ஏஞ்சல்னா டீசர்ட் ஜின்ஸ் பேண்ட் போட்டுகிட்டு இருக்க கூடாதா?" என்றான் சிரித்துக்கொண்டே.

"அப்படி இருந்தாதான் அழகா இருக்கும் பார்க்க"

ஜேக்கி நாற்காலியில் வைத்திருந்த இலக்கியாவின் கையை பிடித்து மூடி. பின் திறந்தான்.

அவள் உள்ளங்கையில் அவள் சொன்னதை போலவே ஒரு கட்டைவிரல் அளவுள்ள ஏஞ்சல் ஓன்று பறந்தது. அது சிறகடிக்க சிறகடிக்க அதன் சிறகிலிருந்து நட்சத்திரம் போன்று சிதறின சிறுசிறு ஒளிகள்.

இலக்கிய விரிந்த கண்களுடன் இன்ப அதிர்ச்சி அடைந்தவளாக அவள் வாயை பிளந்தவாரு அவள் கையை அவள் கண்முன் கொண்டு சென்றாள்.
அவள் கையிலிருந்து எகிறி பறந்து அவள் கண்ணத்தில் முத்தம் கொடுத்தது எந்த குட்டி ஏஞ்சல்.
அவள் பதிலுக்கு அதற்க்கு முத்தம் கொடுத்தாள்.

அந்நேரம் கதவு தட்டும் ஓசை கேட்கவே இலக்கிய வாயிற் பக்கம் பார்த்தாள். குட்டி ஏஞ்சல் மறைந்தது.
ஜேக்கி கதவை திறந்தான்.

ரோசைய்யா "என்னபா இந்த அறை வசதியா இருக்க படுக்கை இங்க போடவா இல்லை வேறு அறையில் போடவா" என்றார்.

"இல்ல இல்ல இதுவே போதும் அய்யா" என்று அவரிடமிருந்து படுக்கையை வாங்கிக்கொண்டான்.

படுக்கையை விரித்து படுத்தான். இலக்கியாவை கட்டிலில் படுக்கவைத்துவிட்டு.

"நீங்க நிஜமாவே ஏஞ்சலா??"

"ஹா ஹா ஹா

(சொடக்கு போட்டான் அறையின் விளக்கு அணைந்தது)

ஸ்வீ்ட் ட்ரீம்ஸ்"

இலக்கியாவிற்க்கு அளவில்லாத சந்தோஷம் புரண்டு படுத்தாள். முகம் மலர்ந்தாள்.

அந்த அறையின் விட்டம் முழுவதும் காணாமல் போய் வெட்ட வெளியாய் இருந்தது.
ஆகாயம் முழுவதும் நட்சத்திரங்கள்.

அவள் மலர்ந்த முகத்துடனும்.
விரிந்த கண்ணுடனும் அதை பார்த்தவாறே தன்னை மறந்து உறங்கினாள்.

விடிந்தது.
கண்ணை திறந்து பார்த்தாள் எதிரில் மேஜை மீது சாய்ந்தவாரு கை கட்டி ஒரு சிறு புன்னகையின் நின்றுகொண்டிருந்தான் ஜேக்கி.

"ஹேப்பி மார்னிங்" கண்ணடித்தான்.

"குட் மார்னிங் ஜேக்கி" முகம் மலர்ந்து எழுந்தாள்.

அவளை அப்படியே தூக்கி நாற்காலியில் வைத்து வெளியில் தள்ளி சென்றான்.

காலை பனி.
புள்வெளி முழுவதும் படரிகிடக்க அதன் மீது ஓட்டிச்சென்றான் நாற்காலியை.
அவள் கால் முழுவதும் பனியால் நனைந்தது.

இதை கண்ட மற்ற வாண்டுகளும் இவர்கள் பின்னால் ஓடி வந்தன.

ஜேக்கி பக்கத்தில் மலை சரிவில் உள்ள பூங்காவிற்க்கு கூட்டிச்சென்றான்.

அங்கே அவளை நிறுத்தினான்.
சுற்றி பார்த்தாள்.
அழகழகாக பூந்திருந்தன பல வண்ண மலர்கள்.
எதிரில் அந்த பள்ளதாக்கை மூடிகிடக்கும் பனி. அதை கடந்து எதிரே இருக்கு மலைக்கு மேல் ஒரு பிரகாசம்.

சூர்யோதையம்.
அவ்வளவு ரம்யமாக இருந்தது.
இலக்கியா அவள் வாழ்நாளில் இதுபோல் கண்டதில்லை உதயத்தை.

இவர்களை பின்தொடர்ந்து ரோசைய்யாவும் வந்தார் அங்கு.
அவருக்கும் இது ஒரு புது அனுபவமாக இருந்தது.

அங்கு அனைவருக்கும் யோகா பயிற்சி கொடுத்தான் ஜேக்கி.
பின் திரும்பினர் விடுதிக்கு.

சமையல் நடக்கும்வரை பிள்ளைகள் ஓடி விளையாடிக்கொண்டிருந்தனர் ஜேக்கியுடன்.
இலக்கியா ஒரு ஓரமாக நின்று பார்த்து கொண்டிருந்தாள்.

சாப்பாடு சாப்பிட வாங்க என்று அழைத்தார் ரோஸ்.
வாண்டுகள் மறுத்தன.
பிற்பாடு விளையாடலாம் என்று சமாதானம் சொல்லி சாப்பிட அழைத்து வந்தான் ஜேக்கி.

வந்தவன் இலக்கியா தலையில் கை வைத்து வருடி பின் அவள் நாற்காலியை தள்ளிக்கொண்டு ஒரு மரத்தின் அடியில் நிறுத்தினான்.

ஒரு சிறுமி கையில் இரண்டு தட்டுடன் வந்தாள்.
அதில் ஒன்றை வாங்கி இலக்கியாவிற்கு ஊட்டி விட்டான்.
இலக்கியாவின் கண்கள் கலங்கின. அவனை அணைத்துக்கொண்டாள்.
பின் இருவரும் மாறிமாறி ஊட்டிவிட்டனர்.

பின் அந்த இடத்திற்கே எல்லோ வாண்டுகளும் வந்துவிட்டன உணவு உண்ண.
கலகலப்பாக போனது அந்த காலை உணவு.

பின் மறுபடியும் விளையாட்டு.
இம்முறை அவர்களுடன் ரோசைய்யாவும் கலந்து கொண்டார்.
கண்ணாம்பூச்சி விளையாடினர்.
இடையில் மழையும் வந்தது.
அனைவரும் அதில் நனைந்து ஆட்டம் போட்டனர்.

இலக்கியாவிற்குள் இருந்த சந்தோசம் போனது.
மீண்டும் ஏக்கங்கள் வந்தது.
முகம் தொங்கியது.
ஜேக்கி இதை கவனித்தான்.

அனைவரும் மதிய உணவு உண்ண சென்றனர்..

இலக்கிய அவள் அறைக்குள் சென்று மீண்டும் அதே ஜன்னல் வழி வானத்தை பார்த்துக்கொண்டிருந்தாள். ஜேக்கி அவள் பின்னால் வந்து நின்று அவள் தலை மீது கை வைத்தான்.

ஜன்னல் வழி பார்த்தபடியே "ஜாக்கி"

"சொல்லு இலக்கியா"

"என்னால மத்தவங்க போல ஓடி ஆட முடியாதா??"

ஜாக்கி இலக்கியாவின் நாற்காலியை திருப்பி அவ முகத்த நேருக்கு நேரா பார்த்து "முடியும். உன்னால முடியும்னு நினச்சா முடியும்"

"நீ ஏஞ்சல்தானே. உன் மேஜிக் பவர் வச்சு என்ன நடக்க வைக்கலாம்ல. எனக்கு கால்கள் கொடுக்கலாமில்ல"

ஜாக்கி மௌனமா அவ கைய இறுக்கமா பிடிச்சி கைக்கு முத்தம் கொடுத்திட்டு சாப்பிட கூட்டிகிட்டு போனான்.

இலக்கியா உம்முனே இருந்த. அவளோட கலகலப்பு தற்காலிகமாகதான் வந்து போச்சு போல.

ஜாக்கி அவளுக்கு ஊட்டி விட்டான்.
சாப்பிட்டு முடிச்ச பின்ன ஜாக்கி இலக்கியாவ மைதானத்தோட மத்தியில கொண்டுபோய் விட்டான்.
இவன் கொஞ்சம் தள்ளி நின்னுகிட்டான்.

"இலக்கிய. என் கிட்ட வா"

இலக்கிய நாற்காலியோட சக்கரத்த சுத்துனா.

"அப்படி இல்ல இப்படி" நடந்து காட்டினான்.

இலக்கியா முறச்சா.

"இலக்கியா
உன்னோட ரெண்டு கையையும் உன் நாற்காலியோட கைபிடியில நல்ல ஊனி எம்பி நிக்க முயற்சி செய்"

இலக்கியா அதேபோல செஞ்சா.

"இப்போ உன் கைகள் மெல்ல தளரவிடு, கால்கள் உணரு.. கால்களுக்கு உன் பலத்த குடுக்க முயற்சி பன்னு"

இலக்கியா அப்படியே பன்னா. கால்கள் ஆடுச்சு இவ கைய தளரவிட விட.
ஆனாலும் ஜாக்கி சொன்னதால அவன நம்பி கைய முழுமையா தளரவிட்டா.
அவளோட ஒரு கால் தள்ளாடினபடி நின்னா யார் துணையும் இல்லாம.

இதெல்லாம் தூரத்துல இருந்து பார்த்துகிட்டு இருந்த ரோஸ் கண் கலங்க இவங்கள நோக்கி வந்தாரு.

எல்லோரும் சந்தோஷமா இலக்கியா பேர சொல்லி கை தட்டினாங்க.

இலக்கியா கண்ணீர் கலந்த சந்தோஷதோட ஒரு அடி எடுத்து வச்சா வெற்றிகரமா.
அடுத்த அடி எடுத்து வச்சு சரிஞ்சு விழ போனா.
ஜேக்கி அவள தாங்கி பிடிச்சுகிட்டான்.
அவ அவன கட்டிபிச்சுகிட்ட அழுதுகிட்டு.

அதோட அவளுக்குள்ள புது புத்துணர்ச்சியும் பலமும் வந்ததுபோல உணர்ந்தால்.
ஜாக்கி கைய புடிச்சுகிட்டு அந்த மைதானத்தை வலம் வந்தா. அப்புறம் மெல்ல ஓட ஆரம்பிச்சா.

சந்தோசமா சத்தம் போட்டு கத்திகிட்டே அங்க இங்கனு ஓடுனா.
ஜாக்கி சட்டுனு நின்னுடான்.
இலக்கிய அவன திரும்பி பார்த்தா.
அவன் கண் அடிச்சான்.
அவ சிரிச்சுகிட்டே அவன பார்த்தா. அவ கண்ணதுல ஈரமா உணர்ந்தா..
கைய வச்சு பார்த்தா.

ஜேக்கி வானத்த பார்த்தான்.
அவளும் வானத்த பார்த்தா. அவ பார்த்த நேரம் மழை துளிகள் அவ முகத்துலையே விழுந்துச்சு.
அவ சந்தோஷத்துல துள்ளி குதிச்சா.
ரெண்டு கையையும் நீ்ட்டி வானத்த பார்த்து வட்டம் போட்டா..

லட்சுமியம்மா ஓடி வந்து இலக்கியா கட்டி அணைத்து தூக்கி சுத்துனாங்க.

மாலை நேரம் ஆச்சு..
இருட்டுற நேரம் மின்மினி பூச்சிகள் அங்க இங்கனு பறந்துச்சு.
அதெல்லாம் அந்த ஜன்னல் வழியா பார்த்துகிட்டு இருந்தான் ஜேக்கி.
அவனோட கை அசைவுக்கு ஏத்தமாதிரி அதுங்கெல்லாம் பறந்துகிட்டு இருந்துச்சுங்க.

எல்லோரோடவும் விளையாடிட்டு உள்ள வந்த இலக்கியா ஜேக்கிய பின்னாடி இருந்து கட்டிபிடிச்சுகிட்டா.

"டாங்யூ ஜாக்கி"

அவன் திரும்பாமல் "ஏன் எதுக்கு??"

"என்ன நடக்க வச்சதுக்கு"

"நீயாதானே நடந்த.. அதுக்கு எதுக்கு எனக்கு தேங்ஸ் சொல்லுற" அந்த மின்மினி பூச்சிகள பார்த்துக்கிட்டே சொன்னான்.

இலக்கிய அவளோட பிடியை தளர்த்துவிட்டு அவனுக்கு முன்னாள் வந்து நின்னு ஜன்னல் பார்த்தா.
மின்மினி பூச்சிகள்.
பார்க்க அழகா இருந்துச்சு.

"இதுங்கள ஏன் இப்படி பார்க்குறீங்க னா??"

"அவங்க என் ப்ரண்ட்ஸ்"

"இதுங்கலா??"

"நல்லா உத்துபாரு"

இலக்கியா பறக்கும் பூச்சிகளை உற்றுபார்த்தால்.
அதில் ஒன்றை மட்டும் குறி வைத்து பார்த்தாள்.
அசந்துபோனாள்.

அது குட்டி ஏஞ்சல்.
அது இவள் பார்த்த அந்த கணமே அவள் கண்களில் வந்து மோதியது.
அவள் கண்களை மூடிக்கொண்டாள். ஆனால் இமைகள் வெளுத்து காணபட்டது எனவே அது தன் கண் மீதுதான் அமர்ந்திருக்கும் என எண்ணி மெல்ல
கண்ணை திறந்து பார்த்தாள்.

இன்னும் பிரம்மிப்புக்குள்ளானாள்.
வெள்ளை நிற உலகம்.
பேசும் விளங்குள் பூக்கள்.
தொட்ட இடமெல்லாம் ஒளிர்கிறது.

அங்குமிங்கும் பறக்குற குட்டி ஏஞ்சல்கள் ஒரு படையென இவள் மேல் அமர்ந்தது. இவள் மெல்ல மிதக்க ஆரம்பித்தாள்.
திரும்பி பார்த்தால் ஜேக்கி சிரித்துக்கொண்டிருந்தான் இவளை பார்த்து.

அவனை பார்த்து பின் அவள் அவளை சுற்றி இருந்த ஏஞ்சல்களை பார்த்தாள் அவைகள் இல்லை. ஆனால் அவள் அந்திரத்தில் மிதந்தால்.
அவள் அதிர்ச்சியுடன் அவள் கை கால் உடலை தடவி பார்த்தாள். வெள்ளை நிற தேவதை உடை. தலையில் கிரிடம்.
தொட்டு பார்த்து ஆச்சர்யம் கலந்த பெருமிதம் அடைந்தாள்.

ஜேக்கியை திரும்பி பார்த்தாள் அவன் அங்கு இல்லை சுற்றும் முற்றும் பார்த்து இவளுக்கு நேர் எதிராக பார்த்தாள்.
ஜாக்கியின் முதுகில் வெள்ள இறக்கைகளும் தலையில் கிரிடமும் கையில் பெரிய செங்கோலும் இருந்தது.

அவனைஅவள் பார்த்ததும் பறந்து சென்றான். இவளும் பின்னாடியே பறந்து சென்றாள்.

பறப்பது எவ்வளவு சந்தோஷத்தை கொடுக்கிறதென உணர்ந்தால்..
சிறிது தொலைவில் திண்பண்டங்களால் ஆன இடத்தை அடந்தனர்.
அவள் அவளுக்கு பிடித்தவற்றை உண்டு கலித்தாள்.

பின் ஒரு மஞ்சள் நிற ஒளிகற்றைக்குள் அவளை கூட்டிச்சென்றான்.
அது ஒரு கண்ணாடியாம்.
முகத்தை காட்டாமல் அகத்தில் நினைப்பவற்றை காட்டுமாம்.
அதன்வழி பார்க்கையில் இலக்கியாவின் அம்மா அப்பா முகம் தெரிந்தது.
அதோடு அவள் அழ தொடங்கிவிட்டாள்.

அந்த மஞ்சள் ஒலி அதிகமாக ஒளிர்ந்தது கண் கூசும் அளவிற்கு.
இலக்கியா கண்மூடி திறந்து பார்த்தாள் மீண்டும் அதே ஜன்னல் அருகே.
மின்மினிகள் இல்ல.
அவள் கண்களில் கண்ணீர் மட்டும் இருந்தது.
ஜாக்கி அவள் கண்ணீரை துடைத்தான்.

"அம்மா..அப்பா" தேம்பியபடி சொன்னால்.

ஜாக்கி மண்டியிட்டு அவளை அணைத்துக்கொண்டான்.

"நாங்க மூணு பேரும் மோட்டர் சைக்கிள்ல ஒன்னாதான் போனோம். ஒரு டர்னிங் எதிரில் லாரி. அம்மா அப்பா சொத்துடதா சொன்னாங்க. நான் பள்ளதுல விழுந்துடனாம். ரோஸ் அப்பாதான் என்ன இங்க கொண்டு வந்து பார்த்துகிட்டு இருகாரு அப்போதிருந்து"

"என் அம்மா அப்பாதான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்கு அப்புறம் இப்போ நீ. அவங்க போய்டாங்க. நீயாசும் என் கூடவே இரு" பாவமா கேட்டா அழுதுகிட்டே

ஜாக்கி எதுவுமே பேசல.
அமைதியா படுத்துடான்.
இலக்கியா ஜன்னலையே பார்த்துகிட்டு இருந்தா.

ஜாக்கி படு தூங்குனு சொன்னான்.
அவ இவன் பக்கதுல வந்து கண்ணதுல முத்தம் கொடுத்துட்டு பக்கத்துலையே படுத்துகிட்டு அவன் மேல கைய போட்டுகிட்டா.
ஜாக்கி கலங்கின கண்ணோடு அவ தலையில கைய வச்சான் அவ அப்படியே தூங்கிட்டா.
விடிஞ்சது.

விடிஞ்சது.
எழுந்து பார்த்தா ஜாக்கி காணும்.
சுத்தும்முத்தும் பார்த்தா இல்ல.
அந்த படுக்கையிலேயே ஜாக்கிபோலவே ஒரு பொம்மை இருந்துச்சு.
அவளுக்கு புரிஞ்சது
ஜாக்கி போயிட்டானு.
இலக்கிய அழ ஆரம்பிச்சுட்டா.
"எனக்கு ஜாக்கி வேணும். எனக்கு கால் கூட வேணா. எனக்கு ஜாக்கி வேணும் ப்ளீஸ் வா ஜாக்கி திரும்பவும்" சத்தம்போட்டு அழுதா.
இவ குறள் கேட்டு லட்சுமியம்மா வந்து இலக்கிய தோள்மேல கை வச்சு உலுக்கினாங்க.
இலக்கிய கலங்கின கண்ண துடச்சிகிட்டு பார்த்தா லட்சுமியம்மா "என்னாச்சுமா. தூங்கிட்டியா அதுகுள்ள சாப்பிடாமலே. வா போய் சாப்பிடுவோம்"
இலக்கியா ஜன்னல் வழயா வெளிய பார்த்தா மழை பெஞ்சிகிட்டு இருந்துச்சு. நாட்காட்டிய பார்த்தா. அது சீக்கிய பார்த்த நாள்ல இருந்துச்சு.
எல்லாம் கனவா.
சாப்பிட்டு வந்து அவ கனவு அப்படியே காகிதத்தில் எழுதுனா.
அதை ஒரு கண்ணாடி பாட்டிலுக்குள் போட்டு மூடினாள்.
கனவை காகிதத்தில் எழுது பாட்டிலில் அடச்சி கடல்ல போட்ட அந்த கனவு பலிக்கும்னு அப்பா சொல்லியிருகார்ல.
அடுத்த வாரம் மெட்ராஸ் டூர் போகும் போது இத கடல்ல போடுறேன். அப்போதான் இதுல உள்ளது நடக்கும்.
என் கனவு நிஜமாகி ஏஞ்சல் வந்த நான் விடவேமாட்டேன் நீ என்னோடவே இருக்கனும்னு ஒரு விஷ் கேட்பேன்.. கால் கூட வேணாம் எனக்கு.. :(
நாட்கள் கடந்தது..
சென்னை சுற்றுலா..
லட்சுமி அம்மாவும் மற்றொரு இளைஞசரும் இலக்கியாவில் சக்கரநாற்காலியை தள்ளிக்கொண்டு வந்து கடல் ஓரம் நிறுத்தினர்.
இலக்கியா கடவுளை வேண்டிக்கொண்டு அந்த கனவடங்கிய பாட்டிலை கடலினுள் தூக்கிபோட்டாள்.
குடுவை கடலில் விழுந்தது.
மீண்டும் கண்ணை மூடி வேண்டிக்கொண்டிருந்தாள்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு இளைஞன் திடுகிட்டு கீழே பார்த்தான் ஏதோ தட்டியதே என்று.
அந்த பாப்பா வீசிய அதே பாட்டில்.
புன்னகைத்தவாறே அதை தூக்கி வீச முயன்றான்.. பின் அதில் என்ன உள்ளதென்று பார்க்க ஆவல் வந்து அதை திறந்து பார்த்தான்.
இதை பற்றி கேட்க அந்த சக்கரநாற்காலியில் இருந்த இலக்கியாவை நாடினான்.
அச்சிறுமியின் தோள்மேல் கை வைத்தான்.
திரும்பி பார்த்த இலக்கியா ஒரு நொடி பிரமித்துபோய் அந்த இளைஞனை இருக்க அனைத்துக்கொண்டால்.
"ஜேக்கி நீ வந்துட்டியா..
எனக்கு தெரியும், அப்பா சொன்னபடி செஞ்சா நீ வருவனு. அதே டீசர்ட் அதே பேண்ட். அதே சிரிப்பு.
என் ஏஞ்சல்" கண்ணிரோட சிரிச்சிகிட்டு கட்டிபிடிச்ச அந்த மழலையோட அணைப்பள் உறைந்து அந்த பாட்டிலை அவளுக்கே தெரியாமல் கடலில் தூக்கி வீசிவிட்டு மௌனமாய் நின்றான்.
இதை பார்த்து நெருங்கிவந்த லட்சுமி ரோஸ் இருவரிடமும் இவர் நம்முடன் வரட்டும்னு கெஞ்சலோட கேட்க ரோஸ் மௌனமா அந்த இளைஞன பார்த்தாரு.
அவன் அவள அணைத்துக்கொண்டிருப்பதும். அவள் அவனை கண்ட சந்தோஷத்தின் உச்சியிலிருப்பதையும் பார்த்து அவரும் ஓர் மௌன புன்னகையை பூத்தார்.
அவனும் ஓர் மென் புன்னகை பூத்தான்.
#ராஜேஷ்..
((அன்பை போன்றும் தன்னம்பிக்கை போன்றும் சிறந்த மருந்து வேறு இல்லை உலகில்.
நம்மீது அன்பு கொண்டவர் நம்முடன் நமக்கு நம்பிக்கை கொடுக்க இருக்கிறார் எனில் ஊனம் வெரும் வார்த்தையாக மாறிபோகும்.
பணம் என்பதை கடந்த பின்பு நாம் உண்மையாக எதிர் பார்ப்பது உண்மையான பாசம் காட்ட ஓர் உறவை மட்டும்தான்.
அன்பை காட்டி நமக்காக எதையும் செய்யும்
நமக்காக எதையும் இழக்கும் அனைவரும் ஏஞ்சல் தான்..
#அனைத்தின்மீதும்_அனைவரின்மீதும்_அன்பு_செலுத்துங்கள்.
#வாழ்க்கை_இனிக்கும்)
{கடைசியாக வந்த இளைஞசர் சில வருடங்களுக்கு முன் தன் பெற்றோரை இழந்து அச்சிழந்த சக்கரம்போல் வாழ்க்கையை வாழ்ந்தவர்.
இப்படி ஓர் உறவு கிடைக்கையில் வேண்டாம் என மறுக்க மனம் வரவே இல்லை}
« Last Edit: October 01, 2016, 10:02:39 AM by MysteRy »

Offline SweeTie

Re: ~ # ஏஞ்சல் .. ~
« Reply #1 on: October 03, 2016, 05:56:26 PM »
Nice to read a fairy tale after a long time and bring back good old memories.   Thanks my friend..

Offline MysteRy

Re: ~ # ஏஞ்சல் .. ~
« Reply #2 on: October 04, 2016, 05:37:23 PM »

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: ~ # ஏஞ்சல் .. ~
« Reply #3 on: December 15, 2016, 07:30:39 PM »
சகோதரி அலேயா வணக்கம்,

ஏஞ்சல்/   தேவதை

உங்கள் கதை, நீண்ட சிறுகதை சிரித்து விடுங்கள்,
படித்ததில் பிடித்ததென சொன்னீர்கள் அழகாக
பிரசுரித்தீர்கள், சினம்வராதபடி தொடர்ந்து படிக்க
ஆவலாய் இருந்தது.

இறுதிவரை தங்கிவிட முடியாத வானக தூதுவன்
போலவே, உறவுகள் நடுவேயும் பலபல இழப்புக்கள்
வலிகள், இதுவே மனிதவாழ்வின் நியதி.

ஆழகான பதிவு, வலியிலும் ஆனந்தமே சகோதரி.

எழுத்து பிழைகள் பற்றிச் சொன்னீர்கள், நேரம்
இருக்கையில் மாற்றத்தை செய்யுங்கள்,
குறையென கொண்டால் பொறுத்திடுக.

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன், நன்றி.
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline MysteRy

Re: ~ # ஏஞ்சல் .. ~
« Reply #4 on: December 21, 2016, 05:01:53 PM »

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: ~ # ஏஞ்சல் .. ~
« Reply #5 on: January 12, 2017, 07:02:43 PM »
sagothari Alea vanakkam,

Angel - thevathai

ungkal kathai, neenda sirukathai siriththu vidunkal.
padithathil pidithathena sonnerkal, alakaaka pathivu
seithirkal, verupu illamal thodarnthu padikka aavalai
irunthathu.

iruthi varai thangki vida mudiyatha vanaka thuthuvan
poola, uravukal naduveyum pala pala ilappukkal;
valikal, ithuveemanitha vaalvin niyathi.

alakana pathivu, valiyilum aananthamee sagothari.

eluthu pilaikal patri sonnerkal; neeram kidaikaiyil
thiruththunkal; solvathil kurai irunthal,
poruthu kollunkal

vaalthukkal, vaalka valamudan; nanri

ithuthan sagothari eluthinan,
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline MysteRy

Re: ~ # ஏஞ்சல் .. ~
« Reply #6 on: January 12, 2017, 07:37:50 PM »