கண்மணிகளே !
மின்மினிகளே!
செல்வங்களே!
என்ன பெயர் சொல்லி அழைப்பேன்
பளீரென்று புன்னகைக்கும் தென்றலா
பறவைகளுள் மைனாவோ
கானம்பாடும் இசையோ
யார் நீ எனக்கு
ஊரும் தெரியாது எந்த நாடென்றும் அறியாது
என் செல்லிடபேசியின் அழகு சித்திரமே
அழகிற்கு நிறமில்லை என்பேன்
ஆசை தங்கமே என ஆர்ப்பரிக்க எண்ணியே
ஆனந்தத்துடன் கிறுக்குகிறேன் இதனையே
மழலைக்கு ஈடு இணையில்லை
மருமகளை கையில் ஏந்தும்
மாமனுக்கோ அத்தைகோ இங்கு பஞ்சமில்லை
பிள்ளைத்தமிழிலும் வயது ஐந்திற்கு முன் வகையில்லை
இதற்குமேல் என்னிடத்தில் வார்த்தையில்லை
இதைச் சொன்னாலும் யாரும் நம்புவதற்கில்லை
பெண்குழந்தைகளை போற்றி பாதுகாக்கும்
பெற்றோர்களுக்கும் சமுதாயத்திற்கும்
தாழ்மையான வணக்கமும்
அங்ஙனம் செய்யாமற்போன கூட்டத்திற்கு
சாபமும் உடனே வந்து சேரனும்
கிறுக்கலுடன்
பருஷ்ணி
