Author Topic: ~ தேனின் பலன் உங்களுக்குத் தெரியுமா ?? ** கட்டி உடைய தேனைப்பூசு ** ~  (Read 468 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226727
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தேனின் பலன் உங்களுக்குத் தெரியுமா ??
** கட்டி உடைய தேனைப்பூசு **




1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.
** காயங்கள் ஆற தேனைத்தடவு **
2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.
** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **
3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.
** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **
4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.
** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **
5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.
தேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது:
‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.