பெத்த கடன்
முதுமைச் சுருக்கங்கள்
விலக்க இயலா
வறுமைக்கோடுகளாய்
விளைய,
மளிகைக் கடைக்
கடனோடும்,
காய்கறிக் கடைக்
கடனோடும்,
வீதிமுனை வரை
நீண்டிருக்கும்
வட்டிக் கடைக் கடனோடும்,
அவமானத் துண்டால்
முகம் மறைத்து
வீட்டில் வரும் தந்தையிடம்
‘எங்களுக்கு என்ன செஞ்சே’
எனக்கேட்கும்
பெத்த கடன்.