Author Topic: ~ கேழ்வரகு பால் ~  (Read 707 times)

Offline MysteRy

~ கேழ்வரகு பால் ~
« on: March 10, 2016, 11:00:51 AM »
கேழ்வரகு பால்



கேழ்வரகு – அரை கப்
தேங்காய் – அரை மூடி
உப்பு ‍- கால் தேக்கரண்டி
ஏலப்பொடி – ஒரு சிட்டிகை
சர்க்கரை – தேவைக்கேற்ப‌

கேழ்வரகை 2 மணி நேரம் ஊற‌ வைக்கவும். ஊற‌ வைக்காமல் அப்படியே சேர்த்தும் செய்யலாம். ஊற‌ வைத்தால் பால் கெட்டியாக கிடைக்கும். இதனுடன் தேங்காய்த் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்க்காமல் ஒரு சுற்று அரைத்து பின்னர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். (முதலில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்தால் நன்கு மசியும்).
அரைத்தவற்றை தேங்காய் பால் எடுப்பது போல் பிழிந்து வடிகட்டவும். ஒரு முறை பிழிந்த சக்கையுடன் மீண்டும் தண்ணீர் சேர்த்து பிழியவும். இது போல் 3 அல்லது 4 முறை பிழியவும்.
இந்த‌ பாலுடன் உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
பால் சற்று திக்கான‌ பதம் வரும் வரை காய்ச்சவும். மிகவும் திக்காக‌ விடாமல் உடனே அடுப்பை நிறுத்தவும். பால் ஆற‌ ஆற‌ இன்னும் திக்காகும்.
பாலுடன் ஏலப்பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
பாலை ஆற வைத்து குடிக்கவும். சுவையான‌ சத்தான‌ கேழ்வரகு பால் கஞ்சி தயார்.