Author Topic: ~ உருளைக்கிழங்கு மோர் குழம்பு ~  (Read 345 times)

Online MysteRy

உருளைக்கிழங்கு மோர் குழம்பு



தேவையான பொருட்கள்:

தனியா - 2 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி.

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - சிறிய துண்டு

கடுகு - அரை தேக்கரண்டி.

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

அரிசி - 1 தேக்கரண்டி

தண்ணீர் - ¼ கப்

உருளைக்கிழங்கு - 4

மோர் அல்லது தயிர் - 1½ கோப்பை

கொத்தமல்லை தழை - சிறிதளவு

நீர் - ½ கப்

துருவிய தேங்காய் - ¼ கப்

உப்பு - சுவைக்கு

தாளிக்க :

ஆயில் - 2 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

வெந்தயம் - ½ தேக்கரண்டி

கறிவேப்பிலை சிறிதளவு

ஓமம் - ½ தேக்கரண்டி

செய்முறை :

* உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.

* தயிரில் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கடைந்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் தனியா, சீரகம், மிளகு, ப.மிளகாய், இஞ்சி, கடுகு, கடலைப்பருப்பு, அரிசிபோட்டு அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து தேங்காய் சோர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* அடுத்து அதில் கடைந்த மோர் ஊற்றி அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பிக்கும் போது உப்பை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

* மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி

கடுகு, வெந்தயம், ஓமம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை மோர் கலவையில் கொட்டவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.