Author Topic: ~ வீட்டுக்குறிப்புக்கள்! டிப்ஸ்! ~  (Read 984 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226539
  • Total likes: 28958
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வீட்டுக்குறிப்புக்கள்! டிப்ஸ்!



* புதிய பாத்திரங்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களை நீக்க, எரியும் மெழுகுவர்த்தியை ஸ்டிக்கர் ஓரங்களில் படும்படி காட்டினால், அவை உரிந்து விடும். * பயன்படுத்தப்பட்ட எண்ணெ யை, ஸ்டிக்கர்கள் மீது தடவி வைத்தால், ஒரு மணி நேரத்தில், அவற்றை எளிதில் நீக்கி விட முடியும். * சிகைக்காய் பொடியால் எண் ணெய் பாத்திரங்களை தேய்த்த பிறகும், வாடை நீங்கவில்லை எனில், சிறிதளவு தயிர் ஊற்றி மீண்டும் தேய்த்தால் வாடை நீங்கி விடும். பிறகு லிக்விட் சோப் போட்டு கழுவி விடலாம். * முட்டை வேக வைத்த பாத்திரத்தில் வாடை நீக்க, டீத் துõள் அல்லது வினிகர் போட்டு தேய்க்கலாம். * பரணில் போட்டு வைக்கப் பட்ட பாத்திரங்களில் பிசுக்கு ஏறி இருந்தால், லிக்விட் பிளீச் கரைசலை தண்ணீருடன் கலந்து பாத்திரங்கள் மீது பூசி ஒரு நாள் இரவு வைக்க வேண்டும். அடுத்த நாள் பாத்திரங்கள் பளபளக்கும். * வடை, போண்டா போன்றவற்றை எண்ணெயில் பொரிக்கும்போது, அதிக எண்ணெய் குடிக்காமல் இருக்க, எண்ணெய் காயும்போது சிறிது உப்பு போட்டால் போதும். * பச்சை பட்டாணி வாடிப் போகாமல் இருக்க, உரித்த பட்டாணியை, உப்பு போட்ட கொதிநீரில் போட்டு, ஒரே ஒரு நொடியில் வெளியில் எடுத்து விட வேண்டும். வெள்ளை நிற காகிதத்திலோ, துணியிலோ பரப்பி வைத்து, தண்ணீர் காய்ந்ததும், காற்று புகாத பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரிட்ஜில் உள்ள பிரீசரில் வைத்து விடலாம். ஆறு மாதங்கள் வரை அவை கெடாது. * பச்சை பட்டாணியின் தோலை உரிக்காமல், ஒரு வெள்ளை துணியில் மூட்டை போல் கட்டி, உப்பு கலந்த கொதிநீரில் மூன்று நிமிடம் போட்டு வைத்து எடுங்கள். பிறகு, மேலே சொன்னது போல், ஈரத்தை உலர்த்தி, காற்று புகாத பிளாஸ்டிக் கவரில் போட்டு, பிரீசரில் போட்டு வைக்கலாம். இரண்டு ஆண்டுகள் வரை இதை பயன்படுத்தலாம். * பாட்டில் அடியில் தங்கி விட்ட தக்காளி சாசில், ஒரு மூடி எலுமிச்சை சாறு பிழிந்து குலுக்கினால், சாஸ் எளிதில் வெளியே வரும். இந்தக் கூழை, குழம்பு, பொரியல் செய்ய பயன்படுத்தலாம். * பிரியாணி செய்யப் பயன்படும் பாஸ்மதி அரிசி குறைந்த அளவே இருந்தால் கவலைப்பட வேண் டாம். முதல் நாள் இரவே, பாஸ்மதி அரிசியுடன், தேவையான அளவு பச்சரிசியைக் கலந்து, சிறிதளவு "ரீபைண்டு' எண்ணெய் ஊற்றி, நன்கு கலந்து வைத்தால், பிரியாணி செய்ய பயன்படுத்தலாம்.