Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
தமிழ் மொழி மாற்ற பெட்டி
https://translate.google.com/#view=home&op=translate&sl=en&tl=ta
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! ~ (Read 511 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226754
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! ~
«
on:
February 06, 2016, 08:56:52 PM »
கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்!
பால் கொடுக்கும் தாய்மார்கள், எதை தின்றாலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ள வேண்டும். அதிக எண்ணெய் பலகாரங்கள், புளித்த, பழைய உணவு பொருட்கள், பாக்கெட் உணவுகளை சாப்பிட்டால், குழந்தைக்கு உணவு ஒவ்வாமையால், அடிக்கடி வாந்தி வர வாய்ப்புள்ளது. பொதுவாக, கிராமங்களில் பிறந்தது முதல் ஒரு வயதாகும் வரை, குழந்தைகளை அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மாட்டார்கள்.
மூலிகை பொருட்களை கொண்டே மருத்துவம் செய்வர். இதில், பலனில்லை என்கிற பட்சத்தில் மட்டுமே, மருந்து, மாத்திரைகள் கொடுப்பர். ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கான, பாட்டி மருத்துவ குறிப்புகள் இதோ: பிறந்த குழந்தைகளின் தலையில், நல்லெண்ணெய் தேய்க்கக்கூடாது. அதற்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் காய்ச்சி, அதோடு ஒரு ஸ்பூன் தேங்காய் பால் விட்டால், படபடவென்று கொதிக்கும் சத்தம் வரும். இதோடு, கஸ்தூரி பொடியை சேர்த்து இறக்கிய பின், தேய்த்து குளிப்பாட்டலாம். எண்ணெய் பிசுக்கு போக, பாசிப்பயறு மாவு தேய்த்து குளிப்பாட்டலாம். இப்படி செய்வதால், சொறி, சிரங்கு உள்ளிட்ட, தோல் வியாதிகள் வராது.
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது, தேங்காய் எண்ணெயை சூடாக்கி, அதில் மிளகு மற்றும் பூண்டை இடித்து போட்டால், நல்ல வாசனை வரும். இந்த எண்ணெயை தேய்த்தால், சளி, இருமல் தொல்லை இருக்காது. ஐந்து மாதத்திற்குட்பட்ட குழந்தை அழுதால், வயிறு வலியாக கூட இருக்கலாம். இதற்கு, கடுக்காயை நன்கு அரைத்து, வயிறு பகுதியில் பூச வேண்டும். பின், ஒரு வெற்றிலையை விளக்கில் காட்டி, இளம் சூடு பதத்தில், தொப்புளில் போடலாம். இரு நிமிடத்தில், வலி நீங்கி, குழந்தை சிரிக்கும்.
ஆறு மாதக்குழந்தைக்கு, பத்து நாட்களுக்கு ஒருமுறை, ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் என, அனைத்தையும் அரைத்து, வெந்நீரில் கலந்து, ஒரு பாலாடை அளவு கொடுத்தால், வாயுத்தொல்லை இருக்காது. குழந்தைகளுக்கு வாயில், வெள்ளை நிறத்தில் மாவு போல் படிந்தால், சரிவர பால் குடிக்க மாட்டார்கள். அதற்கு, மாசிக்காயை உரசி நாக்கில் தடவ வேண்டும். அடிக்கடி வாந்தியெடுக்கும் குழந்தைகளுக்கு, வசம்பை சுட்டு பொடி செய்து, ஒரு ஸ்பூன் தாய்ப்பாலில் கலந்து, நாக்கில் தடவ வேண்டும். இதனால்தான், வசம்புக்கு பிள்ளை வளர்ப்பான்னு பேரே உண்டு.
இப்படி, சின்ன சின்ன கை வைத்தியங்களை செய்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆங்கில மருந்துகளை, பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் கொடுத்தால், விஷமாகிவிடும். சாதாரண சளிக்கே, அடிக்கடி மருந்துகளை மாற்றி மாற்றி கொடுப்பது, பக்க விளைவுகளை கூட ஏற்படுத்தலாம்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்! ~