மென்திரை வனப்பது கருவிழியுடன் புணார்ந்தாறொத்த இரவு,
கரியதன் கூர்கொம்பு போல் ஒரு நிலவு அதன் பால்.
வண்ண நிலவு,
பால் மழை பொழிய,
அல்லி மலர்கள் வாழ்த்த,
காரிருள் தன் கரம் கொண்டு அணைக்க,
காதலர்கள் கனவுலகை எதிர்நோக்க,
இரவு நடை போட்டு வருகிறது.
தொட்டுவிட முடியாமல்
எட்டி நின்றது
பால்நிலவு....
கைகளில் நீரை ஏந்தி
நீரினில் நிலவை வரவழைத்து
பருகினேன்
பால்நிலவையும்...