Author Topic: பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2016)  (Read 2469 times)

Offline Forum

பொங்கல் சிறப்பு கவிதை நிகழ்ச்சி (2016)

நண்பர்கள் கவனத்திற்கு,
 எதிர் வரும் பொங்கல் தினத்தை முனிட்டு .. சிறப்பு கவிதை நிகழ்சிக்காக தங்கள் கவிதைகளை வழங்குமாறு கேட்டுகொள்கிறோம் ... நண்பர்கள் இணையதள வானொலியூடாக உங்கள் கவிதைகள் பொங்கல் தினத்தன்று தொகுத்து வழங்கப்படும். எதிர்வரும்  வெள்ளி கிழமைக்கு (08-01-2016) முன்பாக கவிதைகளை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சொந்தமாக எழுதப்படும் கவிதைகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்.


Offline Maran



பொங்கல் 
சங்கதமிழனின்
தேசியத் திருவிழா
வீசிய விதையின்
வேரில் முளைத்த
வியர்வைப் பூக்களின்
இயற்கைத் திருவிழா

வீரத்துக்கு ஜல்லிக்கட்டு!
மனகுப்பைகளுக்கு ஓர் போகி!
உயிா் தோழனாய் உழைத்த
மாட்டுக்கு பொங்கல்!!
நட்பு காணும் பொங்கல்!!!
இது உழவன் திருவிழா...
தன்மான தமிழன் விழா.

விதிகளைக் கவிதையாக்க
முயற்சித்துத் தோற்றவன் நான்
எத்தனை முயன்றும்
இடைநடுவில்
சிறகு முளைக்கத் தொடங்கிவிடும்
என் விதிக்கு.

ஆளுமை புரிகின்ற
பொய்மைகள்..
ஆன்மாவை
இழந்துவிட்ட
மனிதர்கள்..
மறந்து போய்விட்ட
தமிழ் மரபுகள்..!

நடு வீட்டுக்குள் முனகும்
நாய்களும் பூனைக்குட்டியும்
அன்பு காட்டினாலும்
பழக்கமில்லா வெளுத்த முகங்கள்
இணையத்தில் நண்பர்கள்
முகமூடி உறவுகள்
நாகரீக வாழ்க்கை.

கோலி
பலூன்
வாடகைசைக்கிள்
வளையல், ரிப்பன்
க்ரீட்டிங்ஸ்
பம்பரம்
விழுங்கிய நிஜம்.
உண்பதற்கில்லை
என்றாலும்
உணர்வுகளுக்காக
வானவில்லாக
வந்துபோகிறது பொங்கல்

திரையில் பண்டிகை
அடங்கிக் கிடக்கும் தெருக்கள்
இதற்கிடையில்
மண்பானைப் பொங்கல்!

அது இருக்கட்டும்...
 
தைத் திங்கள் பிறப்பில்
வேளாண்மை சிறக்கட்டும் !
கிராமங்கள் செழிக்கட்டும் !
பழையது கழிய
கவலைகள் கலைய
ஒளி பிறக்கட்டும்
இருள் விலகட்டும்
பொருள் பெருகட்டும்
புகழ் பரவட்டும்
நலம் வளரட்டும்...
பொங்கல் வாழ்த்துக்கள்...



« Last Edit: January 03, 2016, 04:08:39 PM by Maran »

Offline SweeTie

தை மகள் பிறப்பு
உழவர்களின் கொண்டாட்டம்
பகலவன் வருகைக்கு
புதுப் பானை பொங்கலிட்டு
உடன்கூடும்  நெய் பாலும்
சக்கரையாம் இனியவையும்
பொங்கலோ பொங்கல்...


இனித்துச் சுவைக்க ஒரு பொங்கல்
தூக்கலாய்  ஒரு  வெண்பொங்கல்
கூடவே உளுந்து வடையும்
அக்கம் பக்கம் அயலவர்க்கும்
சொந்தம் சில  பேர்க்கும்
பந்தி பரிமாறி குசலம் விசாரிக்க
பொங்கலோ பொங்கல் ...

அவசரமாய்  ஒரு பொங்கல்
அரைகுறையாய் ஒரு பொங்கல்
நேரமில்லை  பொங்கலுக்கு
கடையில் வாங்கிடலாம்
இப்படியும் ஒரு பொங்கல்
பொங்கலோ  பொங்கல்....

FTC  பொங்கல்
நம்வீட்டுப் பொங்கல்
அன்பான நண்பர்களை
அரவணைக்கும் பொங்கல்
தனிமையைத் தள்ளிவைக்கும்
தரமான பொங்கல்
வருபவரை உபசரிக்கும்
நட்பான பொங்கல்
பண்பாகப் பழகிப் பேசும்
அன்புள்ளம் கொண்ட பொங்கல்
தித்திக்கும்  தேன் சுவையைத்
திகட்டாமல் தரும் பொங்கல்
பொங்கலோ பொங்கல்.......


 
« Last Edit: January 02, 2016, 09:07:20 PM by SweeTie »

Offline KaniyaN PooNKundranaN

தை மகளே வருக

தைரியம் தருக

எங்கள் குலமகளே வருக

குதூகலங்கள் பெருக

மாரியின் கருணையினால்

எங்கள் பயிர்கள் எலாம் செழித்தது

ஏறு பிடித்து உழைத்த கூட்டம்

ஏற்றம் பல பெற்றது

தானியங்கள் கதிர் அறுத்து

கலங்கள் தனில் மேடாக்கி

பகிர்ந்தழிபோம் வையகம்  வாழ

மாடு பிடி வீரர்கள் எலாம்

தேடி தேடி ஓடினரே

துள்ளி வரும் காளை தனை

மண்டியிட செய்தனரே

மங்கையரும் மயங்கினரே

காளை பிடித்த காளையரை

கண் கொண்டு மயகினரே

மக்கள் எல்லாம் கூடினரே

ஆடி பாடி மகிழ்தனரே

பொங்கலோ பொங்கல் என்று

அனைவர்க்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்


                                                                    இவன்
                                                           கணியன் பூங்குன்றன்

Offline JEE

மொட்டை மாடியில்
விடிய விடிய தூங்கினால்
விழிக்க வைக்கும் சூரியன்
தேய்ந்தும் வளர்ந்தும் இரவானால்
மிளிர வைக்கும் சந்திரன்
ஆன்மீகத்தில் விழித்தெழ
அறிவுறுத்தும் சூரியன்
ஒரே பொழுது பூமியில்
ஒரு பாதி பகல் மறுபாதி இரவு
இறை பூமிக்கு உள்ளும் புறமும்
இல்லாத இடமே இல்லை
என பறை சாற்றும் நாம்
காணும் மின்சாரத்தில் சரியாக
இரண்டும் பொருந்த காணும்
பொங்கி வழியும் இன்பம்
அலைபேசியில் சரியாக விரல்
அசைவில் கண்டம் விட்டு கண்டம்
நொடிப்பொழுதில் பொருந்த காணும்
பொங்கி வழியும் இன்பம்
அண்டமெங்குமுள்ள  இறை
சக்தியில் முறையாக மீட்ட
அறியும் அறிவை அறிந்தால் காணும்
பொங்கி வழியும் இன்பம்
வாழ்த்தட்டை பரிசுப்பொருள் புத்தாடை
எத்தனை எத்தனை பரிமாற்றங்கள்
பொங்கி பொங்கி வழியும்
நினைவுகளோடு தலைப்பொங்கலில்
உற்றார்உறவினருடன் ஆட்டம்
பாட்டம் கொண்டாட்டம் காணுப்
பொங்கி வழியும் இன்பம்
நிறைகுடம் வைத்து
நிறைவான வாழ்வோடு
வாழ வாழ்த்துவோம் வேண்டுவோம்
இப்பொங்கல் திருநாளில்





« Last Edit: January 04, 2016, 04:45:52 PM by MysteRy »
with kind regard,

G'vakumar.

Offline ReeNa

பொங்கல் திருநாள் !

தமிழனின் விலாசம்  உலகறிய வைக்கும்   ஒரு  திருநாள் !
தமிழ்  பேசும்  செந்தமிழனை  மகிழ  வைக்கும்  திருநாள்!
நம் மக்களை இனிதே மகிழ வைக்கும் ஒரு திருநாள்!

தை  மாதம்  பிறந்த  முதல்  நாள் ..
பழயன கழிக்கவும் புதியன புகுத்தவும் வரும்   நாள்!
விவசாயி  வேர்வை   முத்துக்களைக்   கொண்டாடும்  ஒரு  நாள்!
தை பிறந்தால்  வழி பிறக்கும் என்றே சொல்லும் ஒரு நாள்!

இறைவனுக்கு   நன்றி  சொல்லும் ஒரு  நாள் !
தாய் மண்ணுக்கே நன்றி  சொல்லும்  ஒரு  நாள்!
சூரியனுக்கே  விளக்கேற்றி  நன்றி சொல்லும்  ஒரு  நாள் !
மாட்டின்  காலில் சலங்கை, கழுத்தில் மாலை, கொம்பில் வர்ணம் பூசி
அவைகளுக்கும் நன்றி  சொல்லும்  ஒரு  நாள் !

நல் உறவைக்   காக்கும்  ஒரு  இன்ப  நாள்!
சக்கரைப்   பொங்கலைப்  போல வாழ்க்கை  இனித்திட வாழ்த்திடும்  நாள்!
மாவிலைத்  தோரணங்கள்  வாசலில்  கட்டும்  ஒரு  நாள் !
தமிழன் இல்லம் தோறும்  தமிழன் உள்ளம்  தோறும்  தமிழ்  உணர்வே  பொங்கும்  ஒரு  நாள்!

ஒவ்வொரு  வருடமும்   தை பிறக்கும்!
ஒவ்வொரு  நாலும்  புதிதாய்  நாம்  பிறப்போம் !
என்றும்  செழிக்கட்டும்  தமிழ்  வாழ்வே!
என்றும்  பொங்கட்டும்  நம்  தமிழ்  உணர்வே!
]

Offline Software

தமிழர் திருநாள் இது
தமிழர்களின் வாழ்வை
வளமாக்கும் திருநாள்...
உழைக்கும் உழவர்களின்
களைப்பை போக்கி
களிப்பில் ஆழ்த்தும்
உற்சாகப்படுத்தும் திருநாள்...
உறங்கும் பெண்களை
அதிகாலையிலே எழுந்து
கோலம் போடவைக்கும்
கோலாகலமான திருநாள்...
மிரட்டி வரும் காளைகளை
விரட்டி அடக்கும் வீர திருநாள்...
பழைய எண்ணங்களை அவிழ்த்து
புதிய சிந்தனைகளை புகுத்தும்
புதுமையான திருநாள்...



உழவு இன்றி உலகம் இல்லை
என்ற உண்மை உணருவோம்!
உழவர் வாழ்வு உயர்ந்திடவே
உறுதியேற்று உதவுவோம்!

கதிரவனின் கருணைக்கு
நன்றி கூறும் நாளிது!
கரும்பு மென்று கவலை துப்பும்
களிப்புமிகு நாளிது!

குறைந்த செலவில் சிறந்த உணவு
பொங்கல் தவிர வேறில்லை!

வெங்காயமும் வெள்ளைபூண்டும்
இதற்குமட்டும் தேவையில்லை!


அகமும் புறமும் புழங்கும்
வேண்டாதவைகளும்
கவலைகளும்
நீக்கப்படாதவைகளும்
போகியின் நெருப்பில் கருக

வாழ்விற்கு வெள்ளையடிக்க

அடிக்கரும்பின் சுவையாய்
என்னாளும் இனிக்க

பிறக்குது பொங்கல்..



Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
ஆண்டாண்டு காலம்
உழைத்து களைத்தாலும்
அவனுக்கு மிஞ்சிவது என்னவோ
 கோவணம் மட்டும் தான்

ஆதவனுக்கும் உழவனுக்கும்
உள்ள பந்தம் சொல்லி மாளாது
இயற்கையோடு இணைத்தவன்
அனைத்தையும் ரசித்து உழைத்தவன் ...
உழவனின் தனிப்பட்ட தேவை
மிகவும் குறைவு ஆனால்
அவனின் அங்கலாய்ப்பு அதிகம்...

 .நிறைய  உழைக்க வேண்டும்
 மகசூல் பெருக்க  வேண்டும்
அள்ளி கொடுக்க வேண்டும்
ஆதவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் ...

ஆம் நன்றி மறவாதவன் உழவன்
தனக்காய் உதவிய அனைத்திற்கும்
நன்றி சொல்லி விழா  எடுத்து மகிழ
அவன் தனக்கென்று தேர்ந்தெடுத்த தினம்
இந்த தை திருநாள் ...

அனைத்திற்கும் நன்றி சொல்லும்
 அவனுக்கு யாரும் நன்றி தெரிவிப்பது
 இல்லாவிடினும் குறைந்த பட்சம்
உழைக்கும் கூலி கூட கிடைபதில்லை ...

இது உழவர் தினம்
தமிழர் தினம் அல்ல
அவனை ஒரு இனத்தோடு சேர்த்து
சுருக்காதீர்கள்..பல நாடுகளில்
வெவ்வேறு பெயரில் உழவர்கள்
இந்த நாளை இதே தினத்தில் மகிழ்ச்சியோடு
கொண்டாடி வருகிறார்கள் ...

வருடம் முழுவதும் இடையில் கச்சையோடு
குனிந்தே  பயிர் செய்து விவசாயம்
செய்து சாகுபடி பார்த்தவன் ஒரு நாளாவது
நல்ல துணி உடுத்தி தலை நிமிர்ந்து
கொண்டாடட்டும் இந்த திருநாளை ....

இது எனது சொந்த கவிதை எங்கும் சுட்டது இல்லை என்பதை பெருமையாக தெரிவித்து கொள்கிறேன் eeeee.....
« Last Edit: January 12, 2016, 05:18:31 PM by பவித்ரா »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline பொய்கை

இடுப்பில் துண்டும்
தலையில் முண்டாசும் கட்டி
கையில் துடைபத்துடன்
குடில் உள்ளே ஒட்டடை
அடித்தான் தம்பி...

நிலத்தில் வெட்டிவந்த
மண்ணை குழைத்து
சுவர் தரை என மேடு
பள்ளம் பூசி, தீத்து கல்லால் 
பளபளக்க செய்தாள் அன்னை ..

வாங்கிய சுண்ணாம்பில்
சுடுநீர்  ஊற்றி வண்ணம் இட்டு
சுவர் எல்லாம் புது வர்ணம்
பூசினான் அண்ணன் ..
 
மண்ணோ,உலோகமோ 
எல்லா பாத்திரமும்,
கோரை பாயையும்,தலை அணையும்
அலசி உலர்த்தினாள் தங்கை ..

அரிசி மாவை அரைத்து
நீர் சேர்த்து ,தன் கற்பனை
வளமெல்லாம் கொட்டி
இல்லமெங்கும் , வாசலெங்கும்
மாக்கோலமிட்டாள் அக்கா...

வியர்வையால் நீர் பாய்ச்சி
விளைந்திட்ட புது நெல்
கொண்டுவந்து
வீடு சேர்த்தார் அப்பா ..

மண் பானை ,அகப்பையும்
மஞ்சள்  கொத்தும் ,இஞ்சி கொத்தும்
தித்திக்கும் செங்கரும்பும் ,
குழை வாழை எல்லாமே
கொண்டுவந்து சேர்த்திட்டார் தாத்தா..

மஞ்சளால் சாமி செய்து
பக்கம் இரண்டு கரும்பும் வைத்து
குத்துவிளக்கும் ஏற்றி
கழுத்தில் கட்டிய
மஞ்சள்,இஞ்சி கொத்துகளுடன்
கம்பீரமாய் அடுப்பில்
அமர்ந்தன பொங்கல் பானைகள்..

புத்தரிசி ,சக்கரையும்
பசும்பாலும் தண்ணீரும்
தேங்காயும் தான் இட்டு
விறகால்  எரித்திடவே!

பொங்கியது பானை இரண்டும்
பொங்கியது மகிழ்ச்சி எங்கும் !

பொங்கலோ பொங்கல் !
பொங்கலோ பொங்கல் !
பொங்கலோ பொங்கல் !

விண்ணை முட்டின சந்தோச குரல்கள் .,,

« Last Edit: January 14, 2016, 01:10:18 PM by பொய்கை »

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
தை திருநாளே வருக!!!
பழையனக் கழிதலும் புதியனப் புகுதழுமாய்
துன்பங்களை நீக்கி இன்பத்துக்கு வேரிடும்
போகியேவருக
சிதறிக்கிடக்கும் சொந்த பந்தங்களை
பாசக்கயிற்றால் கட்டி அணைத்து
குடும்பத்துடன் இணைக்கும்
தை திருநாளே வருக
அல்லும் பகலும் வேர்வை சிந்திய
விவசாயியும் அவனுடன் போராடிய மாடுகளின்
களைப்புகளையும் போக்கி சுதந்திரமாய்
பறக்க வய்த்த காணுபோகியே வருக
தமிழனின் வீரதுக்கு சவால்விட்டு
மிரட்டி திரியும் காளையை
அடக்கும் வீர தமிழர்தினமே வருக

வீடுகளில் ஒற்றடை அடித்து
கழிப்புகளை நீக்கி புது சாயமிட்டு
வாசலில் வண்ண வண்ண
கோலங்களால் அழகுபடுத்தி
வயிற்று பசிபோக்க
வயலில் ஏர் பூட்டி நவதானியங்கள்
விதைத்து அறுவடை செய்து
அவற்றை இறைவனுக்கு படைத்து
நன்றி சொல்லும் தை திருநாளே வருக

வாழவைக்கும் இறைவனும்
பசி ஆற்றும் மாடும் இரண்டு கண்ணென
உணர்த்தும் நாள் இந்த தை திருநாள்
வாழை இலை இட்டு
கரும்பும் பழமும் நவதானியங்களும்
இறைவனுக்கு படைத்து
நன்றி சொல்லும் நாள் இத் தை திருநாள்
மாட்டினை குளிப்பாட்டி போட்டுவைத்து
அழகு படுத்தி தெய்வமாக வணங்கும்
நாள் இத் தை திருநாள்

பொங்கி வரும் பொங்கலை போல
உங்களது  வாழ்வில்  இன்றுபோல்
என்றும்  துன்பங்கள்  நீங்கி
இன்பங்கள்  பொங்கி 
உங்களது வீடுகளில்
ஒருங்கிணைந்த வாழ்வு நிலவ
அணைத்து செல்வங்களும் பெற்று
நலமுடன் ஆரோக்கியமாக
மகிழ்ச்சியுடன் வாழ
தமிழர்களின் வாழ்வில்
பொங்கட்டும்  புதுபொங்கல்....

இன்றுபோல் என்றும் சந்தோசமாக
உறவினர்களோடு ஒற்றுமையாக வாழ 
நண்பர்கள் அனைவருக்கும் எனது
இதயம் கனிந்த பொங்கல் தின நல் வாழ்த்துக்கள்....

Offline NanDhiNi

உழவர்களின்  சிறப்பு

சேற்று மண்ணில் விளையாட கூடாது என்று
என்னை என் பாட்டிமா  திட்டி கண்டித்து விட்டு,
நாள் பொழுதெல்லாம் சேற்று மண்ணில் ஆட்டம் போட்டு வரும்
 என் தாத்தாவை மட்டும்கண்டிக்காமல்,
தாத்தாவைவிழுந்து விழுந்து உபசரிக்கும்
பாட்டிமாவை கண்டு நான் புரியாமல் விழித்தது
 ஒன்றும் அறிய குழந்தை பருவம் அது....

சேற்று மண்ணில் தாத்தா கால் வைத்தால் தான் ..
 நம் வீட்டு சோற்று பானையில் சோறு பொங்கும்
 என்று அறிந்த பருவம் இது.
இப்படி அனுதினமும் மழை,
வெயில் பாராமல் உழைக்கும்
உழவர்களுக்கு என்றே கொண்டாடபடும்
நாள்  தான் உழவர் திருநாள்.

புதிய ஆடை, புதிய பானை , புதிய அடுப்பு,
புதிய அரிசி மணி என்று எல்லாமே புதியதாக வாங்கி
பழையன கழித்தல் புதியன புகுதல் என்பதினை
போகி பொங்கல் என்றும்,
உழவர்களுக்கு சிறப்பு செய்ய
தைபொங்கல் என்றும்,
உழவர்களுக்கு உறுதுணையாக இருந்து
செயலாற்றும் பசு மாட்டுக்கு சிறப்பு செய்ய
மாட்டு பொங்கல் என்றும்
ஆண்டுதோறும் உழவர்களுக்கு காணிக்கை செலுத்துவது
நம் தலையாய கடமைகள் ஆகும்,

தோழமை கொண்ட உழவர்களே
உங்கள் திருகரங்கள் ஓங்கி நிக்கட்டும் ,
இனிமை எங்கும் பொங்கட்டும்,
வளமான வாழ்வு செழிக்கட்டும்.

FTC நண்பர்கள் அனைவருக்கும் எனது மனம்கனிந்த 
பொங்கல் திருநாள் நல்வாழ்துக்கள்.

பொங்கலோ பொங்கல்