Author Topic: ~ தக்காளி சாதம் – இரண்டாம் வகை ~  (Read 314 times)

Offline MysteRy

தக்காளி சாதம் – இரண்டாம் வகை



தேவையானப்பொருட்கள்:

அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 1/4 கப்
தக்காளி (நடுத்தர அளவு) – 4
இஞ்சி – ஒரு சிறு துண்டு
பச்சை மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் – சிறிது
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

நெய் அல்லது எண்ணை – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
கறிவேப்பிலை – சிறிது
முந்திரிப்பருப்பு – 5 அல்லது 6

செய்முறை:

தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். இஞ்சியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரிசி, பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவி, குக்கரில் போட்டு மூன்றரைக் கப் தண்ணீரைச் சேர்க்கவும். அத்துடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குக்கரை மூடி 5 முதல் 6 விசில் வரும் வரை வேக விடவும்.
சிறிது நேரம் கழித்து, குக்கரைத் திறந்து, நன்றாகக் கிளறி விடவும்.
ஒரு சிறு வாணலியில் நெய் அல்லது எண்ணையை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், சீரகம், கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து சாதத்தில் கொட்டிக் கிளறவும்.
சூடாக அப்பளம், சிப்ஸ் போன்றவற்றுடன் பரிமாறவும்.