Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ இடி தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள... ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ இடி தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள... ~ (Read 674 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222751
Total likes: 27708
Total likes: 27708
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ இடி தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள... ~
«
on:
November 11, 2015, 09:06:02 PM »
இடி தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள...
மழை பெய்யும்போது பெரும் சப்தத்துடன் இடி இடித்தால் நம்மில் பாதிபேர் ஓடிப்போய் ஒளிந்து கொள்கிறோம். அடிக்கடி இடிதாக்கி பலி என்ற செய்தியையும் பார்க்கிறோம்.
இந்த இடி எப்படி உருவாகிறது, இது யாரையெல்லாம் தாக்கும்?
+ மழையும், வெயிலும் இல்லாமல் குளிர்ச்சியான காற்று திடீரென பூமியில் இருந்து மேலே எழும்பும். அந்தக் காற்று ஈரமாக இருப்பதால் அது மேலே செல்வதற்கு ஒரு சக்தி வேண்டும். அந்த சக்தியை குளிர்ந்த காற்று தனக்குள் இருந்தே எடுத்துக் கொள்ளும். இந்த ஈரக்காற்று குளிர்ச்சி அடைந்து நீர்த்துளிகள் அதாவது மேகங்கள் உருவாகின்றன.
+ இந்த நீர்த்துளிகள் மேலே சென்று ஏற்கனவே அங்கிருக்கும் மேகங்களுடன் உராயும்போது 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் டிகிரி செண்டிகிரேடு வரை வெப்பம் உருவாகும். இந்த வெப்பத்தினால் அந்தப் பகுதி விரிவடைந்து வெளிச்சமும், சத்தமும் உருவாகிறது. ஒளியை மின்னலென்றும், ஒலியை இடியென்றும் சொல்கிறோம். மேகங்கள் வேகமாக மோதிக்கொள்ளும் போது 10 மில்லியன் கிலோவாட்ஸ் அளவுக்கு மின்சக்தி உருவாகும். இது நேரடியாக மனிதர்களைத் தாக்குகிறது.
+ உயரமான கட்டிடங்கள், உயரமான மரங்கள் போன்றவை இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன. உயரமான மரங்களுக்கு கீழே ஒதுங்கி நிற்பவர்களை இடிதாக்குகின்றது. கூட்டமாக நடந்து செல்லும்போது உயரமாக இருப்பவர்களை இடிதாக்கும் வாய்ப்பு அதிகம். திறந்த வெளியில் இருப்பவர்களையும் இடிதாக்கும் வாய்ப்பு அதிகம்.
+ மின்னல் சமயத்தில் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. செருப்பு அணிந்த நடக்கும்போது இடிதாக்கும் வாய்ப்பு குறைவு. மழை நேரங்களில் குடைபிடிக்கும்போது அதன் பிளாஸ்டிக் கைப்பிடியை பிடிப்பதன் மூலம் இடிதாக்குவதில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்
+ மழைக்காலத்தில் மரங்கள் வழியாகவும் மின்சாரம் பாய்ந்து அதன் அடியில் நிற்பவர்களை பலி வாங்குகிறது. இதனால் மழைக்காலத்தில் ஈரமரங்களுக்கு அடியில் ஒதுங்கக் கூடாது. மழை யில் நனைந்து கொண்டே இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது.
+ செல்பேசியில் மின்னல், இடி முழக்கம் இருக்கும்போது செல்பேசியில் பேசக்கூடாது. மின்னலின்போது செல்பேசி மின்கடத்தியாக செயல்பட்டு மின்சாரத்தை கடத்தும். வீடுகளில் மின்சார ஒயர்கள் மின்கடத்தியாக செயல்படுவதால் `டிவி’ போன்ற மின் சாதனங்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, மழையின் போது பிரிட்ஜ், டிவி போன்றவற்றுக்கான மின் இணைப்பு, டிவி.க்கான கேபிள் இணைப்பு ஆகியவற்றை துண்டிக்க வேண்டும்.
+ தொலைபேசிக்கான லேண்ட் லைன் இணைப்பையும் துண்டிக்க வேண்டும். எனவே மழைக் காலத்தில் வீட்டிலும், வெளியிலும் எச்சரிக்கையுடனே இருக்க வேண்டும்
Logged
(1 person liked this)
(1 person liked this)
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ இடி தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள... ~