Author Topic: என்னை நலம் விசாரித்து...  (Read 808 times)

Offline Global Angel

என்னை நலம் விசாரித்து...
« on: December 28, 2011, 11:42:28 PM »
என்னை நலம் விசாரித்து...

இதயச்
செடியிலிருந்து
மலரும்
வார்த்தைப் பூக்களின்
வாசத்தோடு
என்னை நம்பி
எத்தனை உறவுகள்?
* காதலியின்

கண்ணுக்கு
மையெழுதும் விரல்கள்!
* இதழ் ஒத்தடம்
சுமந்து வரும்
இனிய ஞாபகங்கள்!

* காதலை
கிறங்க வைக்கும்
தாவணி மனசுகள்!
* தாவணிக்கு
சாமரம் வீசும்
சந்தோஷ வார்த்தைகள்!

* அப்பாவிடம்
மகனும்...
மகனிடம்
அப்பாவும்...
பணம் கேட்டு அனுப்பும்
அவசர ஆணைகள்!

* மனைவி
சுமந்திருக்கும்
மசக்கையை...
மாமனாருக்கு தெரிவிக்கும்
உயிர்மெய்
எழுத்துக்கள்!
* டேபிள் துடைத்து
சாப்பாடு போடும்
மகனுக்கு...
அம்மாவின்
ஆசிகள்!

* புகுந்த வீட்டிலிருக்கும்
மகளுக்கு...
பிறந்த வீட்டிலிருந்து
போகும்
அப்பாவின்
ஆறுதல்கள்!
* விடுதியில் இருக்கும்
பிள்ளையின்
வீட்டு ஞாபகங்கள்!

* வாழ்க்கை
வரம் கேட்கும்
நம்பிக்கை மனுக்கள்!
* வட்டியோடு சேர்த்து
திருப்பாவிடில்
விற்கப்படும்
எச்சரிக்கை செய்யும்
ஆயுத எழுத்துக்கள்!

* எல்லை
இறுதியில்
இந்திய
மண்ணை காக்கும்
மாவீரர்களுக்கு...
மனைவிகளின்
உஷ்ணமூட்டும்
காதல் வரிகள்!
* அயல்
தேசத்திலிருக்கும்
அன்பான
கணவனுக்கு
அனுப்பப்படும்
ஆயிரம் முத்தங்கள்!

* மடித்து
வைக்கப்பட்டிருக்கும்
ஆண்டவனின்
அருட் பிரசாதங்கள்!
* இன்னும்...
இன்னும்...
* மழையிலும்...
வெயிலிலும்...
பனியிலும்...
பாதுகாப்பாக...

* ஓராயிரம்
உள்ளங்களை
சுமந்து நின்று
அனுப்பி வைக்கும் என்னை...
* யாராவது
நலம் விசாரித்து
ஒரு கடிதம் எழுதக் கூடாதா?
* தபால் பெட்டி
கேட்கிறது!


rasithathu
                    

Offline RemO

Re: என்னை நலம் விசாரித்து...
« Reply #1 on: December 30, 2011, 12:52:34 PM »
ipalam ithu enga iruku :D elam mail thaana

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: என்னை நலம் விசாரித்து...
« Reply #2 on: December 30, 2011, 10:56:58 PM »
அன்புள்ள தபால் பெட்டிக்கு !

                       அன்பும் ஆசையும் கலந்த ஆசை (அஜித்)யின் வணக்கம் ! அடடே இது என்னை அதிசயம் ?
பொதுவாய் இந்த கிறுக்கன் (FTC ) கவிதை தளத்தை (கவிதை எனும் நினைப்பினில் )தன் கிறுக்கள்களால் குதருபவன் ஆயிற்றே, இவனிடம் இருந்து நமக்கு கடிதமா ? என ஆச்சர்ய படவேண்டாம் தபால் பெட்டியே.அடிப்படையில் நான் உன் அருமை பெருமையை அறியாதவனும்
 புரியாதவனும் இல்லை .உன்னோடு ஒட்டி உறவாடும் அளவிற்கு உறவு இல்லாவிட்டாலும்,
எனக்கும் உன்னை மிக பிடிக்கும் ,ஏன் என்று எண்ணுகின்றாயா? என் பள்ளி காலத்தில்
 ஒவ்வொரு ஆண்டும் முழுஆண்டு தேர்வின் தேனாய் இனிக்கும் முடிவினை தவறாமல்
 தெரிவிப்பதில் உன் பகுதி மிகுதி.பதினைந்து  வயதில் அஞ்சல் தலை சேமிக்க நீ இருக்குமிடம்
தேடி அடிக்கடி நான் வருவேன் நினைவிருக்கா? அழகுசிலையாய்,அழகின் அலை வீச
அஞ்சல்தலை வழங்கும் அஞ்சலை அமர்ந்திருப்பாள் , அவள்தம் அழகை அளந்து செல்லவே
அடிக்கடி வருவேன். அடப்பாவி ! கரிசனத்தோடு தான் எனை காண வருகிறாய் என்று
நினைத்தால் அஞ்சலையின் தரிசனத்திற்கு தான் வந்தாயா  என்று த்பால்பெட்டியே நீ புலம்புவது புரிகிறது.இந்த கடிதம் உனக்கு கடிதம், இன்னொருவருக்கு நான் தரும் முக்கியத்துவத்தின்
சான்று .
                                                                          என்றும் அன்புடன்
                                                                            ஆசை அஜீத்

பின் குறிப்பு - உன்னை நிதம் நிதம் நினைப்பேன் , என்னவளின் கன்னங்களில் மின்னும் வண்ணம்
தனை நீ  கொண்டிருப்பதால். 
« Last Edit: December 30, 2011, 11:01:47 PM by aasaiajiith »

Offline Global Angel

Re: என்னை நலம் விசாரித்து...
« Reply #3 on: December 30, 2011, 11:28:32 PM »
ஆஹா  என்ன அருமையான கவிதை தபால் பெட்டியும் தள்ளாடி இருக்கும் பெருமையில் ... நன்று ஆசை உங்கள் கவிதை கடிதம்