Author Topic: எங்கள் கண்ணீரை அறியாமல்  (Read 1188 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.


கருக்கலைப்பு செய்தார்கள்
உயிரோடுக் கொலை..
கொடிப் பிடித்தார்கள்...

பெண் சிசுக்கொலை..
கொலை வெறி கொண்டார்கள்..
அரசு அமைத்தது
அரசு தொட்டில்..
பெண் சிசுவைக் காப்பாற்றினார்கள்....

உயிரைக் கொள்ளும் செயலை
ஆதரிக்க வில்லை எவரும்
ஏனோ கண்டுக் கொள்ளவில்லை
எங்களை...

தினமும் உயிர் இழக்கிறோம்....
வீடு. மேசைக் கட்டில் என்று காட்டை
அழிக்கும் சிலர்...

உயிர்க் கொடுக்கவில்லை நீங்கள்..
அழிக்க மட்டும் நினைப்பது ஏன்..
தண்ணீர் ஊற்றி
எங்களைக் கொஞ்ச வேண்டாம்..
வேரோடு பிடிங்கிக் கொல்லும் போது
நாங்கள் கதறுகிறோம்...
எங்கள் கண்ணீரை அறியாமல்
போவது ஏனோ...

நூறாண்டு வாழும் எங்களை
நொடியில் அழிக்கும் நிலை
என்றுதான் மாறுமோ.....


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: எங்கள் கண்ணீரை அறியாமல்
« Reply #1 on: December 26, 2011, 11:20:16 PM »

மரங்கள் வெட்டாமல் எப்படி தளபாடம் செய்வது ...? இருந்தாலும் ஒரு மரத்தை வெட்டும்போது இன்னொன்றை உருவாக்கிவிட்டு வெட்டினால் நல்லது
                    

Offline RemO

Re: எங்கள் கண்ணீரை அறியாமல்
« Reply #2 on: December 27, 2011, 02:29:25 AM »
pattalum nama thiruntha maattom

kudikura thaniya kasu koduththu vangura maari oxy. ah oru naal kasu koduththu vanga vendiya nilamai varum