Author Topic: ஜோதிடம் உண்மையா?  (Read 3300 times)

Offline Yousuf

ஜோதிடம் உண்மையா?
« on: December 19, 2011, 12:56:05 PM »
ஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்


அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே ஜோதிடத்தையும், ஜோதிடர்களையும் நம்பாதீர்கள் இது முழுக்க முழுக்க அறிவியல் சிந்தனைக்கு அப்பாற்பட்டது மற்றும் இது விபரமரியாத மனிதர்களை ஏமாற்றும் குருட்டு வித்தையாகும்.

உதாரணமாக உங்கள் அன்பு மகனுக்கோ அல்லது மகளுக்கு திருமணம் செய்ய நாடுவீர்கள் ஆனால் இந்த ஜோதிடர்கள் செவ்வாய்தோஷம் என்று கூறி அந்த இளம் ஆண், பெண்ணின் திருமணத்தை தடை செய்வார்கள் இதனால் பாதிக்கப்பட்ட அந்த அப்பாவி ஆணும், பெண்ணும் 35 வயது வரை இல்லற சுகத்திற்கு ஏங்கி அறை கிழட்டு பருவத்தை அடைந்த பிறகு திருமணம் செய்து குழந்தை பேறு இல்லாதவர்களாகவும், வயது முதிர்ந்த நிலையில் தங்கள் எண்ணத்திற்கு ஏற்றவாறு கணவன், மனைவி பொருத்தம் அமையாமலும் காணப்பட்டு வாழ்க்கை முழுவதும் அலங்கோளமாக காணப்படுவார்கள். மேலும் 35 வயதில் தகப்பனை இழந்தும், தாயை இழந்தும் அநாதைகளாக திருமணம் செய்துக்கொள்பவர்கள் எத்தனை பேர் சிந்தியுங்கள் ஏன் இந்த அவலம்.

சிந்தித்துப்பாருங்கள் உலகத்தில் இன்று சுமார் 600 கோடி மக்களுக்கும் மேல் வசிக்கிறார்கள் இவர்கள் அனைவருக்கும் செவ்வாய் தோஷம், பீடை என்று இருந்திருந்தால் யாருக்கேனும் திருமணம் நடைபெறுமா? இந்த அவல நம்பிக்கை முழுக்க முழுக்க தமிழ் பேசக்கூடிய நம் தமிழர்களின் மத்தியில்தான் உள்ளது மாறாக அமெரிக்கர்கள், ஆப்ரிக்கர்கள், ஜப்பானியர்கள், இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள் என்று யாருக்கும் இந்த தோஷம் பயம் ஏற்படுவதில்லை காரணம் உலகில் உள்ள 600 கோடி மக்களில் ஜோதிடத்தை நம்புபவர்களை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் ஜோதிடத்தையும், ஜாதகத்தையும் நம்புவதில்லை அதை அனுமதிப்பதும் கிடையாது. குறி சொல்லும் ஜோதிடன் உங்களிடம் அற்ப காசுகளுக்காகத்தான் குறி கூறுகிறானே தவிர அவனுக்கு கோடி ரூபாய் பணம் இருந்தால் குறி சொல்வதை கேவலமாக எண்ணி பார்க், பீச் என்று ஜாலியாக அலைந்து திரிவான். எனவே இந்த ஜோதிடமும், ஜோதிடனும், ஜாதகமும் பொய் என்பதை உணருங்கள். இதோ சிந்திப்பவர்களுக்கு இந்த கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.

ஜோதிடம் பொய்யானது!

ஜோதிடம் என்பதற்கு வான மண்டலத்திலுள்ள (GALAXY) நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்பது பொருளாம்! எந்த நட்சத்திரமாவது மனிதனிடம் பேசுமா எனவே ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க பொய். எந்த நட்சத்திரமாவது குறி சொல்கிறதா? பேசுகிறதா? இது முட்டாள்தனம் இல்லையா? எடுத்த எடுப்பிலேயே ஜோதிடம் என்ற பெயர் பெய்யாக இருக்கிறது சரி பார்ப்போம் இதில் என்ன உள்ளது என்பதை!

ஜோதிடன் என்பவன் பொய்யன்!

நட்சத்திரங்களின் மொழியை அறிந்தவன் ஜோதிடனாம் இது கொஞ்சம் ஓவரா இல்லையா? ஒரு தமிழ் பேசக்கூடியவனிடம் சென்று எதுகை, மோனை பற்றி கேட்டால் திக்குமுக்காடுகிறான் தமிழே தடுமாற்றமாக உள்ள நிலையில் ஜோதிடனுக்கு நட்சத்திர மொழி தெரியுமாம். வடமாநில மொழியான ஹிந்தி படிக்க தமிழனுக்கு தெரியல வானமண்டல மொழி தெரியுதாம்!

நட்சத்திரம் குறி கூறுகிறதாம்!

நட்சத்திரம் நேரத்தை கூறுகிறதாம் அது வானமண்டலத்தில் உள்ள 9 கோள்களின் மூலமாக விதியை ஆராய்ச்சி செய்து இது இப்படி! அது அப்படி என்று கூறுகிறதாம். எந்த நட்சத்திரமாவது பேசுமா அப்படி பேசுவதாக இருந்தால் இதோ நாம் டேப்ரிக்கார்டர் தருகிறோம் அதன் பேச்சை பதிவு செய்து தாங்க நாமும் கேட்டு ரசிக்கிறோம்!


கோள்களின் பெயரால் மோசடி


வான் மண்டலத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய கோள்கள் இருக்கிறதாம் இந்த கோள்கள்தான் நேரத்தை நிர்ணயிக்கிறதாம். ஆனால் இதில் வேடிக்கை என்னவெனில் ராகு, கேது(ராகு, கேது ஆகிய இரு கோள்கள் நிழல் உலக தாதாத்கள் போன்று நிழல் கோள்களாம் இவைகள்தான் கெட்ட நேரத்துக்கு காரணமாம்) என்பது கண்ணிற்கு தெரியாத கோள்களாம் மற்ற 7 கோள்கள்தான் கண்களுக்கு புலப்படுமாம்.

இந்த ஒன்பது கோள்களுக்கு அருகில் அஸ்வினி, கார்த்திகை, ஆயில்யம், சித்திரை என்று 27 நட்சத்திரங்கள் இருக்கிறதாம் இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றவாம். சூரியனை சுற்றி கோள்கள் வருகிறதா? இல்லை இந்த 27 நட்சத்திரங்களை சுற்றி கோள்கள் வருகிறதா? தலையே கிர்ர்ர்ருன்னு சுற்றுகிறது!

எல்லா கோள்களும் ஒரே வேகத்தில் வருவதில்யாம் ஒவ்வொரு கோளும் வேகத்தில் மாறுவிடுகின்றனவாம்.

சரி! கோள்கள் பற்றி விஞ்ஞானம் என்ன கூறுகிறது.

பூமி (Earth), சந்திரன் (Moon), புதன் (Mercury), வெள்ளி(Venus), செவ்வாய் (Mars) ,வியாழன் (Jupiter), சனி (Saturn), யுரேனஸ் (Uranus), நெப்டியூன் (Neptune) முதலான கோள்கள் சூரியன் (Sun), சுற்றி வருகிறது.


ஜோதிடர்கள் கூறும் கோள்களின் வேக கணிப்பு பொய்

கோள்கள் பெயர்    ஜோதிடர்களின் கோள் கணிப்பு         நாசா விஞ்ஞானிகளின்
                                                                                               கோள் கணிப்பு

சூரியன்                                 12 மாதம்                       சுழலும் காலம் 30 நாட்கள்
                                                                                   ஈர்ப்பு வேகம் 273 m/s/s
                                                                               வெளியேறும் வேகம் 620 km/sec.

சந்திரன்                                 30 நாள்                       சுழலும் காலம் 27.32 நாட்கள்
                                                                                   ஈர்ப்பு வேகம் 1.6 m/s/s
                                                                               வெளியேறும் வேகம் 2.38 km/sec

செவ்வாய்                         1½ ஆண்டுகள்               சுழலும் காலம் 24.62 மணிகள்
                                                                                   ஈர்ப்பு வேகம் 3.7 m/s/s
                                                                              வெளியேறும் வேகம் 5.01 km/sec
 
ராகு & கேது                          18 ஆண்டுகள்,             இப்படி 2 கோள்கள் இல்லை

சனி                                          30 ஆண்டுகள             சுழலும் காலம் 10.53 மணிகள்
                                                                                 ஈர்ப்பு வேகம் 9.1 m/s/s
                                                                             வெளியேறும் வேகம் 35.60 km/sec


ஜோதிடர்களின் இந்த கோள்களின் வேக கணிப்பை விஞ்ஞானிகளின் வேக கணிப்புடன் இணைத்துப்பார்த்தால் நமக்கு தலை சுற்றல்தான் வருகிறது. இந்த அளவுக்குமா ஜோதிடர்கள் புரளியை கிழப்புவார்கள்.

சனி கிரகத்தை கிண்டல் செய்யும் ஜோதிடர்கள்!

ஒன்பது கிரகங்களில (அதாவது 2 பொய் கிரகங்களும் சேர்த்து) சந்திரன் என்ற கிரகம்தாம் வேகமாக சுற்றுகிறதாம். சனி கிரகம் மெதுவாக சுற்றுகிறதாம். எனவே சனி கிரகத்தை மந்தன் என்று கூறுகிறார்கள்.

சனி கிரகம் பற்றிய நொண்டி கதையை கேளுங்கள்

சனி என்பவர் ஒரு கிரகமாம் அவருக்கு ஒருகால் நொண்டியாம். ஆகவேதான் இந்த சனி கிரகம் மட்டும் சூரிய குடும்பத்தில் நொண்டி நொண்டி மெதுவாக சுற்றிவருவாராம். அந்த நொண்டி கதையை படித்துப்பார்ப்போமா!

இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினானாம் அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றாம் ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்து விட்டானாம்.

ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்குமாம் அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாதாம். இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டானாம். தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனராம்

ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினராம் அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, “உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்க முடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டும் கொண்டாராம்.

சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்குகிணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டாராம். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகுமாம். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டாராம், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தனவாம்.


இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தானாம், சனி 12ம் இடத்தில் காணப்பட்டாராம்

தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டானாம் உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டானாம் இது தான் சனிபகவான் நொண்டியான கதையாம். ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவாக 30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறாராம்.

நொண்டி கதையை சிந்தித்துப்பாருங்கள்

நாம் இந்த ஜோதிடப் பிரியர்களிடம் கேட்பது என்னவென்றால் இந்த சனி பகவானுக்கு ஜாதகம் கணிக்க யாரும் இல்லையா? தன் கால் நொண்டியாகும் என்ற செய்தியை சனி பகவானால் முன்கூட்டியே கணித்து அறியவோ அதற்கான பரிகாரம் செய்யவோ இயலவில்லை அப்படியிருக்க இந்த சனி பகவான் எப்படி மற்றவர்களுக்கு குறி சொல்ல பயன்படுவார்.

இந்த நொண்டிக்கதைகளை வைத்துக்கொண்டு மனிதர்களை ஏமாற்றுகிறார்கள் இந்த ஜோதிட வித்துவான்கள் அதாவது காசுக்காக தங்களடைய கடவுளையை நொண்டியாக்கி அதன் மூலம் குளிர்காய்கிறார்கள். தாங்கள் வணங்கும் கடவுளை நொண்டியாக்கும் இந்த அவலநிலை இந்த தமிழர்களுக்கு தேவையா?

ஜாதகத்தை கணிக்கும் முறையில் தவறுகள்

    கிருதயுகம்.
    திரேதாயுகம்
    துவாபரயுகம்
    கலியுகம்.


வாண்மண்டலம் இந்த நான்கு யுகங்களையும் கொண்டதாம் இதற்கு ஒரு சதுர்யுகம் என்று பெயராம். இந்த சதுர்யுகத்தில் முதல் 3-யுகங்கள் முடிந்துவிட்டதாம் இப்போது நடை முறையில் இருக்கும் யுகம் கலியுகமாம்.

    ஒரு சதுர்யுகம் என்பது 43,20,000 ஆண்டுகளாம்
    கலியுகத்தில் 5094 ஆண்டுகள் முடிந்துவிட்டனவாம்


ஆனால் விஞ்ஞானிகளின் துள்ளியமான கணிப்பு படி இந்த வாண் மண்டலம் காஸ்மோலாஜிகள் டைம் (cosmological time) பிரகாரம் 13.73 பில்லியன்வருடங்கள் முடிந்துவிட்டதாம்.

ஒரு பில்லியன் என்பது 100 கோடிகள் இப்போது 13.73 பில்லியன் என்பதை இந்திய முறைப்படி கணித்தால் 13,73,00,00,000க்கு மேல் செல்கிறது. அதாவது

விஞ்ஞான கணிப்பு    
13,73,00,00,000
ஜோதிடர்களின் கணிப்பு    
43,20,000
வித்தியாசம்    
13,72,56,80,000

ஜோதிடர்களால் ஒழுங்காக பிரபஞ்சத்தின் வயதை கூட அறிய முடியவில்லை கணித பாடத்தையே தப்பாக போட்டு வைத்துள்ளார்கள் அப்படியிருக்க ஜாதகம் எப்படி துள்ளியமாக அமையும். (பிரபஞ்சத்தின் வயதை இறைவன் மட்டுமே துள்ளியமாக அறிவான்.

காரணம் அவன் பிரபஞ்சத்தை முன்மாதிரியின்றி படைத்தவன்)


இறைவனைத் தவிர யாருக்கும் மறைஞானம் கிடையாது

மறைவானவற்றின் திறவுகோள் இறைவனிடமே உள்ளன. அவற்றை அவனைத்தவிர (வேறு எவரும்) அறியமாட்டார்கள். இன்னும் கரையிலும், கடலிலும் உள்ளவற்றையும் அவன் அறிவான். ஓர் இலை உதிர்வதைக் கூட அவன் அறியாமல் (அவன் கட்டளையின்றி) அது உதிர்வதில்லை.பூமியின் இருள்களுள்ள எந்த விதையும் எந்தப் பசுமையானதும் எந்தக் காய்ந்ததும் அவனுடைய தெளிவான பதிவேட்டில் இல்லாமலில்லை. (அல் குர்ஆன் 6:59)
« Last Edit: December 19, 2011, 12:57:51 PM by Yousuf »

Offline Global Angel

Re: ஜோதிடம் உண்மையா?
« Reply #1 on: December 20, 2011, 03:57:50 PM »
விஞ்ஞானம் என்று ஒன்று தோன்றுவதற்கு முன்னாலேயே அதவாது நீங்கள் சொல்லியா இந்த  கோள்களும் ஜோதிட சாஸ்திரத்தில் அமைந்துள்ளதே அது எப்படி சாத்தியம் ,,,? 

நான் கேள்விபட்டிருக்கின்றேன்  ஜாதகம் பார்த்து  10  வயதில் இந்த குழந்தை தந்தையுடன் இருக்க மாட்டார் என்று கூறினார்கள் அதே போல அந்த பையனின் 9  வயதில் தந்தை இறந்துவிட்டார் .... அதே போல் நிறைய நான் கேள்விபட்டிருகின்றேன் ...
எனக்கு ஜோதிடத்தில் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது ஆனால் இப்படிபட்ட செய்திகளுக்கு உங்கள் விளக்கம் என்னவாக இருக்கும் ...?
                    

Offline Yousuf

Re: ஜோதிடம் உண்மையா?
« Reply #2 on: December 20, 2011, 05:56:17 PM »
Quote
விஞ்ஞானம் என்று ஒன்று தோன்றுவதற்கு முன்னாலேயே அதவாது நீங்கள் சொல்லியா இந்த  கோள்களும் ஜோதிட சாஸ்திரத்தில் அமைந்துள்ளதே அது எப்படி சாத்தியம் ,,,?

கோள்களுக்கு மனிதன் தான் பெயர் சூட்டினான் ஆகவே நான் ஆங்கிலத்தில் கூறிய இந்த கோள்களுக்கு ஏற்ற சரியான தமிழ் மொழி கோள்களாக எடுத்து கொண்டதும் மனிதன் தான்.

நட்சத்திரங்களை வைத்து குறிசொல்லும் பழக்கம் பல ஆயிரம் வருடங்களாக உள்ளது என்பதை நாம் வரலாறு நூல்களை படிக்கும் பொழுது அறிந்து கொள்ளலாம். ஆகவே நட்சத்திரங்களுக்கு மனிதன் சூடிய பெயர்தான் அவன் அதை வைத்து மக்களை ஏமாற்ற பயன்படுத்தியது. இதன் அடிப்படையில் விஞ்ஞானம் கூறும் இந்த கோள்களும் ஜோதிடர்கள் கூறும் பொய்யான கோள்களும் ஒன்று தான் என்று ஏற்று கொள்ள இயலாது. இரண்டும் வெவ்வேறு. விஞ்ஞானம் மனிதனுக்கு உண்மையை வெளிகொனருகிறது கோள்களின் விடயத்தில்.


Quote
நான் கேள்விபட்டிருக்கின்றேன்  ஜாதகம் பார்த்து  10  வயதில் இந்த குழந்தை தந்தையுடன் இருக்க மாட்டார் என்று கூறினார்கள் அதே போல அந்த பையனின் 9  வயதில் தந்தை இறந்துவிட்டார் .... அதே போல் நிறைய நான் கேள்விபட்டிருகின்றேன் ...
எனக்கு ஜோதிடத்தில் அவ்வளவாக நம்பிக்கை கிடையாது ஆனால் இப்படிபட்ட செய்திகளுக்கு உங்கள் விளக்கம் என்னவாக இருக்கும் ...?

ஒருவர் கூறும் விடயத்தில் பத்தில் ஒன்று நிச்சயமாக நடக்க வாய்ப்புள்ளது. நானே ஒரு பாத்து விடங்களை கூறி அது பின்னால் நடக்கும் என்று கூறினால் அந்த பத்து விடயங்களில் ஏதாவது ஒரு விடயம் நடப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதை தான் கணிப்பு என்று கூறுவார்கள். இந்த கணிப்பை பயன்படுத்தி ஜோதிடர்கள் கூறும் பத்து பொய்களில் ஒரு உண்மையான சம்பவம் நடந்து விடுகிறது.

அந்த ஜோதிடன் சொன்ன ஒன்பது பொய்களையும் நடக்காத காரணத்தால் மக்கள் பெரிதாக எடுத்து கொள்வதில்லை. நடந்த ஒரு விடயத்தை பெரிதாக எடுத்து கொடு அவர் சொன்னதால் தான் இது நடந்தது என்று கூறி இதை ஊர் முழுவதும் பரப்புவார்கள். இதனால் தான் இப்படி பட்ட பொய்யர்கள் வளர்வதற்கு மக்கள் மறைமுகமாக உதவுகிறார்கள்.

அதே மக்கள் அந்த ஜோதிடன் சொல்ல கூடிய ஒன்பது விடயங்கும் நடக்கவில்லை அவன் பொய் சொல்கிறான் என்று ஊர் முழுவது சொன்னால் அவன் பொய்யன் என்ற பெயர் அவனுக்கு வரும் இதை எந்த மக்களும் கண்டுகொள்வதில்லை.

இப்படி மக்களின் அலட்சிய போக்கால் தான் இப்படி பட்ட பொய் பேர்வழிகள் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதே ஜோதிடன் பின்னால் நடப்பதை சொல்ல கூடியவனாக இருந்தால் அவன் மரணம் எப்பொழுது என்று யாராவது கேட்டால் அவனுக்கு பதில் சொல்ல இயலுமா? அப்படி இதை சோதித்து பாருங்கள் அவனுடைய மரணத்தை எந்த ஜோதிடனாவது சொல்கிறான என்று பாருங்கள் மற்றவர் மரணத்தை தெரிந்த அவனுக்கு அவனின் மரணம் தெரிகிறதா என்று பாருங்கள்.

நிச்சயமாக உங்களின் இந்த கேள்விக்கு எந்த ஜோதிடனும் பதில் சொல்ல மாட்டான்.

ஆகவே இப்படி பட்ட மூடநம்பிக்கையில் இருந்து மக்களை விடுவிக்க நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்வோம்!



Offline RemO

Re: ஜோதிடம் உண்மையா?
« Reply #3 on: December 21, 2011, 06:05:22 AM »
இப்போதுள்ள ஜோதிடர்கள் பொய்யானவர்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.

விஞ்ஞானம் தோன்றும் முன் தோன்றிய ஜோதிடம் தவறென்று எப்படி சொல்வது. இன்றுள்ள ஜோதிடர்கள் ஜோதிடத்தை தங்களுக்கேற்றவாறு மாற்றிகொண்டனர். அதற்காக ஜோதிடமே பொய் என கூற வேண்டுமா??

ராமன், இயேசு, நபிகள் நாயகம், புத்தர் போன்றோர் வாழ்ந்தார்கள் என்பதை நாம் நம்பும் போது ஜோதிடத்தை பொய் என கூறலாமா??

இன்றுள்ள ஜோதிடர்களில் நிறைய பேர் நீங்கள் போல் தோஷம் என கூறி அதற்க்கு பரிகாரமும் செய்து மூட நம்பிக்கைகளை வளர்த்து பணம் பார்கிறார்கள். அது போன்ற மூட நம்பிக்கைகளை விட்டு வாழ்ந்தால் போதும்.

Offline Yousuf

Re: ஜோதிடம் உண்மையா?
« Reply #4 on: December 21, 2011, 12:01:52 PM »
Quote
விஞ்ஞானம் தோன்றும் முன் தோன்றிய ஜோதிடம் தவறென்று எப்படி சொல்வது. இன்றுள்ள ஜோதிடர்கள் ஜோதிடத்தை தங்களுக்கேற்றவாறு மாற்றிகொண்டனர். அதற்காக ஜோதிடமே பொய் என கூற வேண்டுமா??

ரெமோ அதே கேள்வியை உங்களிடம் கேட்கிறேன் விஞ்ஞானம் தோன்றும் முன் தோன்றிய ஜோதிடம் சரி என்று எதன் அடிப்படையில் நீங்கள் கூறுகிறீர்கள்?

ராமன், இயேசு, நபிகள் நாயகம், புத்தர் போன்றோர் வாழ்ந்தார்கள் என்பதை நாம் நம்பும் போது ஜோதிடத்தை பொய் என கூறலாமா??

ராமன், இயேசு, நபிகள் நாயகம், புத்தர் இவர்களை ஜோதிடதுடன் நீங்கள் ஒப்பிட வேண்டிய தேவை இல்லை ரெமோ. இவர்கள் வாழ்ந்ததற்கான வரலாற்று சான்றுகள் வரலாற்று நூல்கள் வரலாற்று ஆதாரங்கள் இவர்கள் வாழ்ந்த இடங்கள் மரணித்த இடங்கள் (இயேசுவை தவிர அவர் மரணிக்க வில்லை என்பது எனது நம்பிக்கை) அனைத்து வரலாறாக பாதுகாக்கப்பட்டுள்ளது ரெமோ. ஆகவே இவர்களையும் ஜோதிடத்தையும் ஒப்பிடுவது சரியான ஒன்று அல்ல.

நீங்க இவர்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்றால் வரலாற்று நூல்களை படித்து ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ளாலாம்.

ஆனால் ஜோதிடத்தை எப்படி உண்மை என்று சொல்ல முடியும். மறைவான விடயங்களை அறிந்து கொள்ளும் அறிவு இருக்கிறது என்று யாராலும் நிரூபிக்க இயலுமா?

அப்படி இயலும் என்றால் அந்த மனிதருக்கு மரணம் எப்பொழுது வரும் என்று கூற சொல்லுங்கள். அது சரியானதாக இருந்தால் நான் அதை ஏற்று கொள்கிறேன்.

இது போன்று மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கு எமற்றுகாரர்களிடம் இருந்து மக்களை நேர்வழியில் கொண்டு வருவது நம் ஒவ்வொருவர் மீதும் கடமை!

Offline Global Angel

Re: ஜோதிடம் உண்மையா?
« Reply #5 on: December 21, 2011, 04:39:33 PM »

அமானுஷ சக்தி சிலபேரிடம் இருக்கத்தான் செய்கிறது எல்லாரும் ஜோதிடர் ஆகா முடியாது ..... அந்த சக்தி உள்ளவர்களே நல்ல ஜோதிடர்கள் ஆக முடியும் ... ஆனால் இன்று பலர் அதை தவறாக பயன்படுத்துகின்றார்கள் ... யோதிட சாஸ்திரம் தோன்றியபோது நியமான திறமை சாளிகளான பலர் இருந்தார்கள் .... அரசவைகளில் அவர்கள் கவுரவிக்கபட்டார்கள் ..... அவர்கள் கணித்து கொடுத்த படியே அந்நாளில் எல்லாம் நிகழ்ந்தும் இருக்கிறது ... அப்போது அவர்கள் 10  விடயத்துக்கு ஜோதிடம் பார்ப்பதில்லை ஜோதிடர் அரச அவையிலேயே இருப்பார் அங்கேயே தினம் நடக்க கூடிய விசயங்களுக்கு யோதிடம் பார்க்கும் பழக்கமும் இருந்திருக்கிறது ...

நான் பொது பதிவில் ஆழ்மனத்தின் அற்ப்புத சக்திகள் என்னும் பதிவினை தொடராகா ஆதரங்களுடன் பதிவிட்டு வருகிறேன் ..அதிலே நடப்பது எல்லாம் நடந்தவை எல்லாம் உண்மை ஆகும் பொது இது ஏன் உண்மையாக கூடாது ....? நட்சத்திரங்களையும் அதன் போக்கையும் வைத்து திசைகளை அறிந்து சென்ற அறிஞர்களால்  இது ஏன் சாத்திய படாது ...?
                    

Offline RemO

Re: ஜோதிடம் உண்மையா?
« Reply #6 on: December 21, 2011, 05:06:02 PM »
நமக்கு தெரிந்ததை பற்றி நாம் தவறென்று எப்படி கூறலாம் யூசுப். நான் மூட நம்பிக்கைகளை வளர்க்க வேண்டும் என கூறவில்லை. ஆனால் மூடநம்பிக்கை என நமக்கு தெரியாத பல நல்ல விசயங்களை புறந்தள்ளலாமா??

முன்னோர்கள் சொல்லியவைகளை இவ்வாறு ஒதுக்குதல் சரி என நான் எண்ண வில்லை.


ராமன், இயேசு, நபிகள் நாயகம், புத்தர் இவர்கள் வாழ்ந்ததாக கூறினால் இவர்கள் நடத்திய மாயங்கள் அனைத்தையும் நம்ப நீங்கள் தயாரா?? 
கடவுள் என்பது உண்மை என்றால் முன்னோர்கள் கணித்த ஜோதிடமும் உண்மை தான், ஆனால் அவர்கள் கணித்த ஜோதிடம் அறிந்தவர் யாரும் இல்லை என கூறலாம்.

ஜோதிடம் பொய் என கூறும் விஞ்ஞானம் கடவுள் கூட பொய் என்று தான் சொல்கிறது. அதை நீங்கள் ஏற்றுகொள்வீர்களா??

Offline Yousuf

Re: ஜோதிடம் உண்மையா?
« Reply #7 on: December 21, 2011, 06:47:22 PM »
ஏஞ்செல் நீங்கள் கூறுவது போல ஆதி காலத்தில் இருந்த ஜோதிடங்களை நான் ஏற்று கொள்கிறேன் அதை எந்த அடிப்படையில் நான் ஏற்று கொளிகிறேன் என்றால் சில ஆய்வுகளை செய்த பிறகே ஏற்று கொள்கிறேன்.

நான் எந்த ஒரு செயலையும் இறுதி வேதம் இறைமறை குரானின் மூலமாக உரசி பார்க்க கூடியவன் அதன் படி இந்த சொதிடத்தையும் உரசி பார்த்து இந்த முடிவை எடுத்துள்ளேன். இதை விளக்காமாக தர விரும்புகிறேன்.

அதாவது அதி காலத்தில் ஜோதிடம் உண்மையாக இருந்தது இதற்க்கு காரணம் மனிதர்களின் மறைவான ஞானம் என்பது கிடையாது. மாறாக வானுலகில் வானவர்கள் பெசிகொல்பவைகளை ஓட்டுக்கேட்க கூடிய ஜின் இனங்கள் அந்த மறைவான செய்தியை குறி காரர்களிடமும், ஜோதிடர்களிடமும் சென்று சொல்ல கூடியவையாக இருந்தன என்பதை திருமறை குரான் விளக்குகிறது.


குறிப்பு:

ஜோதிடத்தை நம்பகூடிய நீங்கள் மனிதர்களுக்கு ஆற்றல இருக்கிறது என்று நம்ப கூடிய நீங்க இறைவனால் படைக்கப்பட்ட வானவர்கள், ஜின்களின் படைப்பை நம்புவீர்கள் என்று நம்புகிறேன். இறைவன அனைத்திற்கும் ஆற்றல் பெற்றவன்.

வானவர்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையை பற்றி பேசும்போது, சிங்கள் வனத்தின் அருகே சென்று அந்து பேசுவதை ஒட்டு கேட்பவர்களாக இருந்தனர்.

வானுலகில் பேசப்படும் அனைத்து விடயங்களும் ஜின்களால் ஒட்டுகேட்க்க முடியவில்லை. மாறாக ஓரிரு விடயங்களை மட்டுமே ஒட்டு கேட்டு வந்தன. இதைதான் சிங்கள் குரிகாரர்களிடமும், ஜோதிடர்களிடமும் சொல்லி வந்தன.
இறைவனும் குறிப்பிட்ட காலம் வரை இதை தடுக்காமல் இருந்தான்.

திருக்குர்'ஆண் இறக்கியருள பட்ட பிறகு இவ்வாறு ஒட்டுகேட்ப்பதை விட்டும் முழுமையாக தடுக்கப்பட்டனர்.

இதோ இறை மறை குர்'ஆணின் வசனத்தில் ஆதாரம்!


“நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம்.

“(முன்னர் வானில் பேசப்படுவதைச்) செவிமடுப்பதற்காக (அதற்குள்ள சில) இடங்களில் நாங்கள் அமர்ந்திருப்போம்; ஆனால் இப்பொழுதோ எவன் அவ்வாறு செவிமடுக்க முயல்கிறானோ, அவன் தனக்காகக் காத்திருக்கும் தீப்பந்தத்தையே காண்பான்.   (அல்-குர்'ஆண் 72:8,9,10)


இந்த வசனத்தில் இருந்து ஆதி காலத்தில் ஜோதிடர்கள் குரியது அவர்களின் மறைவான ஞானத்தில் அடிப்படையில் அல்ல ஜின்களின் உதவியால் என்பது என் ஆய்வின் முடிவு. அதும் இப்போது நிறுத்த பட்டு விட்டதால் இப்பொழுது ஜோதிடம் என்ற பெயரில் அலைபவர்களை பொய்யர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இதற்க்கு பொருத்தமாக ஒரு சில நபிமொழிகளை தர விரும்புகிறேன். நபி மொழி என்றால் அது நபி சொன்னது அல்ல மாறாக இறைவன் அறிவித்தைதான் நபி மக்களுக்கு சொல்வாரே அன்றி இறைத்தூதர்களுக்கேன்று மறைவான ஞானம் கிடையாது.

இதையும் அருள்மறை கூறுகிறது இதோ!


(இன்னும்) நீர் கூறுவீராக: “இறைவனைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.” 27:65

இதை பற்றி இறைதூதர் கூறியவை!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.'

அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால், வானவர்கள் தம் சிறகுகளை இறைக்கட்டளைக்குப் பணிந்தவர்களாக அடித்துக் கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை) பாறையின் மீது சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள்.)
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(இறைக் கட்டளையைச் செவியுறும் வானவர்கள் பீதிக்குள்ளாகிறார்கள். பின்னர்) அவர்களின் இதயத்தைவிட்டு பீதி அகற்றப்படும்போது அவ்வானவர்கள், (அல்லாஹ்விற்கு நெருக்கமாயிருக்கும்) வானவர்களிடம், 'நம் இறைவன் என்ன சொன்னான்?' என்று வினவுகின்றனர். அவர்கள் வினவியோரிடம், '(நம் இறைவன் இன்னின்ன) உண்மை(யான கட்டளை)யைச் சொன்னான். அவன் உயர்ந்தவன்; பெரியவன்' என்று பதிலளிப்பர். உடனே, (இறைவனின் கட்டளை குறித்த) அந்த உரையாடலை ஒட்டுக்கேட்பவர்கள் செவியேற்றுவிடுகின்றனர். ஒருவர் மற்றவர் மேலே இருந்து கொண்டு இவ்வாறாக (கடைசி ஆள்வரை) ஒட்டுக் கேட்கின்றனர்.
சுஃப்யான்(ரஹ்) (தம் அறிவிப்பில், அவர்களில் ஒருவர் மற்றவர் மேல் இருக்கும் விதத்தை) தம் வலக் கையின் விரல்களை விரித்துவைத்து அவற்றில் ஒன்றை மற்றொன்றின் மீது அடுக்கி வைத்து (சைகையால்) விளக்கிக் காட்டினார்கள்.
அந்த உரையாடலை ஒட்டுக்கேட்கும் ஒருவர் அதைத் தன் சகாவிடம் தெரிவிப்பதற்கு முன்பாகவே சில சமயங்களில் அவரைத் தீச்சுவாலை தாக்கிக் கரித்துவிடுவதுண்டு. இன்னும் சில நேரங்களில் (தீச்சுவாலை) அவரைச் சென்றடைவதற்குள்ளாகவே (அந்த உரையாடலை) அவர் தமக்கு அடுத்துள்ளவரிடமும், அவர் தமக்குக் கீழுள்ளவரிடமும் தெரிவித்து இறுதியாக பூமிவரை அதைச் சேர்த்துவிடுகிறார்கள்.

சுஃப்யான்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், 'கடைசியில் அது பூமிக்கு வந்துசேர்ந்து சூனியக்காரனின் வாயில் இடப்படுகிறது. உடனே அவன் அதனுடன் நூறு பொய்களைக் கலந்து சில உண்மைகளை (மட்டும்) கூறுகிறான். (இதைக் கேட்கும்) மக்கள், 'இன்னின்ன நாளில் இன்னின்னவாறு நடக்குமென சூனியக்காரர்கள் நம்மிடம் கூற, அதை நாம் உண்மையானதாகவே காணவில்லையா?' என்று கூறுவார்கள். வானிலிருந்து ஒட்டுக்கேட்கப்பட்ட தகவலினாலேயே இவ்வாறு அவர்கள் கூறுகிறார்கள்' என்று இடம் பெற்றுள்ளது.


இதில் இருந்து பெறப்படும் தகவல் என்னவென்றால் அதி காலத்தில் ஜோதிடம் சொல்லியவர்கள் மறைவனத்தை அவர்கள் அறியவில்லை என்றும் அதை அவர்களுக்கு ஜின்க்லையே சொல்லியது என்பதையும் அறிந்து கொள்ளளால்.

அனால் இப்பொழுது அனைத்துமே தடுக்கப்பட்டுள்ளது ஆகவே இப்பொழுது ஜோதிடம் கூறும் ஜோதிடர்களால் மறைவனத்தை அறிந்து கொள்ள இயலாது. அவர்கள் ஏமாற்று பேர்வழிகள் தான் என்பது உறுதியாகிறது.

ஏஞ்செல் நீங்கள் கூறியது போல ஆதிகாலத்தில் ஜோதிடர்கள் கூறியது உண்மையாக இருந்த காரணம் ஜின்கள் அவர்களுக்கு உதவி செய்தது தானே தவிர அவர்களுக்கு மறைவான ஞானம் கிடையாது என்பது எனது ஆய்வின் முடிவு.






Offline Global Angel

Re: ஜோதிடம் உண்மையா?
« Reply #8 on: December 21, 2011, 07:20:24 PM »
எனக்கு தலை சுத்துது ...நா ஜோசியம் பாக்கலப்பா .... எங்கம்மா பார்பங்கா .. நா அவங்களுக்கு கட்டுப்படவ ..
                    

Offline Yousuf

Re: ஜோதிடம் உண்மையா?
« Reply #9 on: December 21, 2011, 07:41:34 PM »
ஏஞ்செல் ஆதிகாலத்தில் ஜோதிடம் சில உண்மைகளை சொல்லியது என்பதை பார்த்தோம் ஆனால் இன்று அப்படி யாராலும் கூற இயலாது ஆகவே இன்றைய கால கட்டத்தில் ஜோதிடத்தை நம்பி வாழ்க்கையை வீணாக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆகவே ஜோதிடத்தின் பெயரால் வயிறு வளர்ப்பவர்களிடம் சென்று உங்கள் பணத்தை வீணடிக்காமல் அந்த பணத்தை நான்கு ஏழைகளுக்கு கொடுத்து அவர்களின் மகிழ்ச்சியில் நமை பெற முயற்சிக்கலாம்.

இதுவே எனது கருத்து ஏஞ்செல் உங்கள் கேள்விக்கு!

Offline Yousuf

Re: ஜோதிடம் உண்மையா?
« Reply #10 on: December 21, 2011, 08:08:13 PM »
நமக்கு தெரிந்ததை பற்றி நாம் தவறென்று எப்படி கூறலாம் யூசுப். நான் மூட நம்பிக்கைகளை வளர்க்க வேண்டும் என கூறவில்லை. ஆனால் மூடநம்பிக்கை என நமக்கு தெரியாத பல நல்ல விசயங்களை புறந்தள்ளலாமா??

முன்னோர்கள் சொல்லியவைகளை இவ்வாறு ஒதுக்குதல் சரி என நான் எண்ண வில்லை.


ராமன், இயேசு, நபிகள் நாயகம், புத்தர் இவர்கள் வாழ்ந்ததாக கூறினால் இவர்கள் நடத்திய மாயங்கள் அனைத்தையும் நம்ப நீங்கள் தயாரா?? 
கடவுள் என்பது உண்மை என்றால் முன்னோர்கள் கணித்த ஜோதிடமும் உண்மை தான், ஆனால் அவர்கள் கணித்த ஜோதிடம் அறிந்தவர் யாரும் இல்லை என கூறலாம்.

ஜோதிடம் பொய் என கூறும் விஞ்ஞானம் கடவுள் கூட பொய் என்று தான் சொல்கிறது. அதை நீங்கள் ஏற்றுகொள்வீர்களா??


உங்களின் முதல் கேள்விக்கு நான் ஏஞ்செல்க்கு கொடுத்த பதிலையே மீண்டு சொல்கிறேன் ரெமோ. அதாவது அதிக்காலத்தில் ஜோதிடம் உண்மையாக இருந்தது அது மனிதனின் மறைவான ஞானத்தினால் அல்ல ஜின்களின் மூலமாக என்பது எனது ஆய்வின் முடிவு.

நான் எப்போது ஒரு விடயத்தை குர்'ஆணின் அடிப்படையில் உரசிபர்க்க கூடியவன் அதன் அடிபடையில் உரசிப்பர்த்த பொது எனக்கு கிடைத்த பதில் இது தான்.

அதிக்காலத்தில் ஜோதிடம் உண்மையாக இருந்தாலும் அது மனிதனின் ஆற்றல் அல்ல என்பது இப்போது ஜோதிடம் சொல்பவர்கள்  மக்களை ஏமாற்றுபவர்கள் என்பது எனக்கு கருத்து ரெமோ.

ராமன், இயேசு, நபிகள் நாயகம், புத்தர் இவர்கள் அதிசயம் நிகல்தியாதாக மக்கள் காலகாலமாக கூறியதை கேட்டுவிட்டு நீங்கள் இங்கு குறிப்பிடுகிறீர்கள் என்று நான் நிக்கிறேன் ரெமோ!

நீங்கள் ஆதார பூர்வமான வரலாற்று நூல்களை எடுத்து படித்தீர்களானால் இவர்கள் எந்த அதிசயத்தையும் நிகழ்த்தாத மனிதர்கள் தான் என்பதை புரிந்து கொள்வீர்கள்.
இவர்களும் மனிதர்கள் தான் இவர்களுக்கு எந்த மறைவான ஞானமும் இல்லை என்பதை உணர்வீர்கள் ரெமோ!

மக்கள் வாய்களால் பேசி கொள்வதை கேட்டுவிட்டு நம்பாமல் அதில் உள்ள உண்மை என்ன என்பதை ஆராய்ந்து பார்பதே நல்ல நடுநிலையாலனின் பண்பு ரெமோ ஆகவே எதையும் சற்று ஆராய்ந்து முடிவெடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்!

நான் விஞ்ஞானத்தை முழுமையாக உண்மையானது என்று ஒருபோதும் கூறவில்லை ரெமோ! ஆனால் நான் மேற்கூறிய விஞ்ஞான உண்மைகளை உங்களால் மறுக்க இயலுமா?

அதே விஞ்ஞானம் தான் கடவுள் இல்லை என்று கூறுகிறது என்று கூறுகிறீர்கள் இதற்க்கு இறைநிரகரிப்பளர்கள் எடுத்துகொள்ளும் விஞ்ஞான செய்தி Charles Darwin உடைய Theory of Evolution (பரிணாம கொள்கை) இதை தவறான கொள்கை இது ஒரு தனி மனிதனின் கருத்து என்று என்னால் நிரூபிக்க இயலும்.

இதை பற்றி அதிகாமான பதிவுகளை நான் பொது மன்றத்தில் பதிவு செய்துள்ளேன். இதை தோழி ஏஞ்செல் அறிவார்கள் என்று நினைக்கிறேன். நீங்களும் பின்னல் சென்று இந்த பதிவுகளை பார்த்து கொள்ளாலம்.

ஆகவே நான் விஞ்ஞானம் நூறு சதவிகிதம் உண்மை என்று கூற வில்லை ரெமோ எது தெளிவாக விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளதோ அதை எடுத்து கொள்ளுங்கள் நிரூபிக்கப்படாத அனுமாத்தால் கூறப்படும் விஞ்ஞான செய்திகளை நாம் கவனத்தில் கொள்ள தேவை இல்லை.

ஒரு நடுநிலையாளன் எதையும் ஆராய்ந்து முடிவேடுபான். அதே போன்று மற்றவர்கள் கூறுவதை அப்படியே எடுத்து கொள்ளாமல் ஆராய்ந்து முடிவெடுத்தால் நன்றாக இருக்கும் ரெமோ!

நான் கூறியதை கூட அப்படியே எடுத்து கொள்ளாமல் இதில் ஆராய்ந்து முடிவெடுப்பது தான் சிறந்தது!

நானும் மனிதன் தான் எனக்கும் தவறுகள் ஏற்ப்படும் ஒரு வேலை நான் கூறியவை  ஏற்றுகொள்ள முடியாமலும் இருக்காலம். அந்த கருத்தை நான் வரலாற்று சம்பவங்களின் மூலம் சுட்டி காட்டியதை போன்று நீங்களும் ஆதார பூர்வமாக சுட்டி கட்டினால் எற்றுகொல்கிறேன்!