Author Topic: நல்ல நாளாக அமையட்டும்  (Read 2474 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 122
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
நல்ல நாளாக அமையட்டும்
« on: December 18, 2011, 07:41:07 AM »

* காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள். அன்றைய நாள் நல்ல நாளாக அமையவேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
* புண்ணிய நதிகள், கோமாதா, சிரஞ்சீவிகள், மகான்கள் முதலியோர்களை ஒரு நிமிட நேரமாவது பக்தியோடு நினைப்பது அவசியம்.
* வாரம் ஒருமுறையாவது வீட்டுக்கு அருகிலுள்ள கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது நல்லது.
* அக்கம் பக்கத்து வீட்டினரையும் உறவினர் போல நேசிக்க வேண்டும். சாப்பிடும் முன் மிருகங்களுக்கோ, பறவைகளுக்கோ சிறிது அளவு உணவிட்ட பிறகே சாப்பிடுங்கள்.
* தூங்கும் முன் அன்று நாம் செய்த செயல்களை சிறிது நேரம் மனதில் சிந்திக்கவேண்டும். நன்மையைச் செய்தால் அதுபோல் மேலும் பல நன்மைகளைச் செய்யும் வாய்ப்பை இறைவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். தீமையைச் செய்தவர்கள் இனிமேலாவது செய்யாமல் இருக்கும் மனவுறுதியை பெற முயற்சிக்க வேண்டும்.
* இஷ்ட தெய்வத்தின் நாமத்தை அன்றாடம் 108 முறையாவது ஜபித்து வருதல் வேண்டும். இதனால், மனத்தூய்மை உண்டாகும்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்