உடல் சூடு குறைய, கண்கள் பார்வை தெளிவடைய விளக்கெண்ணெய் !
இரவு படுக்கும்போது மூடிய கண் இமைகளின் மேல், தொப்புள் மற்றும் உள்ளங்காலில் இரண்டு சொட்டு வீதம் விளக்கெண்ணெய் தடவி வர குழந்தைகள் மற்றும் பெரியவர் உடல் சூடு தணிந்து ஆரோக்கியம் கிடைக்கும். கண் பார்வை கூர்மை அடையும். உடல் சூடு, கண் எரிச்சல் குறைய “விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் சம அளவு கலந்து, இரண்டு சிறிய பூண்டுடன் ஆறு மிளகைச் சேர்த்து சூடு செய்து தலைக்குத் தேய்க்க வேண்டும். சிறிய நேரம் கழித்து சீயக்காய் அல்லது அரபுத்தூள் தேய்த்துக் குளிக்கவும். (அல்லது) தேங்காய் எண்ணெயுடன் மருதோன்றி இல்லை, மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை, சிறியாநங்கை இலை இவற்றைச் சேர்த்துக் காய்ச்சித் தினமும் தலைக்குத் தடவி வரவேண்டும்.