பூதி முத்திரை
கையில் சுண்டு விரலையும் கட்டை விரலையும் முனையில் இணைத்து பிடித்துக் கொண்டு மற்ற மூன்று விரல்களையும் விரித்தபடி செய்யும் இதற்கு பூதி முத்திரை என்று பெயர்.
இரண்டு கைகளாலும் இதை செய்யலாம். தினசரி மூன்று தடவை 15 நிமிடங்கள் இதை செய்யலாம்.
வாயில் வறட்சி, கண்ணில் வறட்சி, எரிச்சல் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் இதனால் நீங்கும். நாக்கின் சுவை மொட்டுகளை ஊக்கப்படுத்தி நல்ல ருசியை உணரச் செய்யும்.