அறிமுகம் ஆன நாள் முதலாய்
இதோ இன்றுவரை
குரலையும் , வரிகளையும்
தவிர வேறு அறிமுகம்
எதையும் தராமல் மறைமுகமாய் ,
அரைகுறை ஆசை
குறை இல்லாமல் நிறம்பி, நிறையாய்
நிறைந்து கரையை தேடி
தள்ளாடும் ஆசை கப்பலுக்கு
கரைகாட்டும் துறைமுகமே !
உனக்காக காத்திருக்கும் தருணங்களில்
ஒரு ரகசியம் அறிந்தேன்
உன் மௌனம் கூட
இத்துனை அழகு என்று ...
உன் ஒவ்வொரு வரிகளையும்
நகல் எடுத்துவைத்து படித்தேன் ,
வரி வழியே வழிந்தோடிய
உயர்வலியை, உயிர்வலியை
அறிந்து, புரிந்து துடித்தேன்
இத்துனை சிறிய வயதில்
சிறிய மனதில்
இத்தனை வலிகளின் வரிகளா ?
என கொடியவனின் கொடூரம்
கண்டு கொதித்தேன் .
உன் வரிகளில் வடிந்த வலியின் வாட்டத்தை,
வருத்தத்தின் ஓட்டத்தை போக்கிடவே
என் வரிகளின் வாயிலாக விழந்தேனே ஒழிய
உன் நெஞ்சத்தை கொள்ளை கொள்ளவோ
கொஞ்சும் கவி பாடும் உன்னை
மஞ்சத்தில் கிடத்தி பஞ்சமில்லா
உன் அழகை கொஞ்சம் கொஞ்சமாய்
ரசிக்கவோ ருசிக்கவோ, நஞ்சு எண்ணம்
கொஞ்சும் கூட இல்லை என் பிஞ்சு நெஞ்சினில்
நான் கவிதை எழுதி கவிஞன் ஆகவே
கவிதை ஆனவள் நீ என ஐயம் !
அதனால்தான் கவிதாயினி உன்னை
கவி தாய் நீ என்று அழுத்தம் திருத்தமாய்
அழுத்தி சொன்னேன் அடிகோடிட்டு.
மாற்றார் தூற்றுவார் என்பதற்க்காக
ஊட்டமே இல்லாத ஒரு காரணம் சொல்லி
என் மனதில் சொட்டு சொட்டாய்
அமிலம் விட்டுவிட்டாய் ,அதைவிட
உன் வரிகள் தூற்றும்படியாய் இல்லையென்றாலும்
உன் அனுகுமுறை,எண்ணம் போற்றும்படியாய் இல்லை
என்று தூற்றி அதே அமிலத்தை அல்லி ஊற்றியிருக்கலாம் .
இருந்தும் உன்னை போற்றிகொண்டேதான் இருப்பேன்
என் மனதில் உன் நினைவுசெடி நீளமாய் நெடுநேடுவாய்
வளர என் கவிதை நீரை ஊற்றிக்கொண்டே தானிருப்பேன் .
வரி கண்டபின்னும் வெறி கொண்டு
நீ என்னை வெறுத்தாலும்
வெறுப்பின் வார்த்தையால் என் மனதை
வறுகடலையாய் வறுத்தாலும்
மறைப்பதற்காகவே மனதின் மனத்திரையை
திறக்க மறுத்தாலும் ...
மனம் சிறிதளவும் சிறுத்துபோகாமல்
ஒரு பொழுதும் உன்னை வெறுக்காமல்,
வார்த்தைகளால் வறுக்காமல் ,மனதை மறுக்காமல்
எல்லாவற்றையும் பொறுத்திருப்பேன் ...
இப்படிக்கு
அன்றும் , இன்றும், என்றும் உன் நினைவோடு
ஆசை(அஜித்)