Author Topic: பெண்ணீயம் பேசும் பண்பாளர்  (Read 6182 times)

Offline Global Angel

பெண்ணீயம் பேசும் பண்பாளர்


நல்லதொரு ஆடவன் கணவனாய் அமைந்து விட்டால் மனைவிகளுக்குவிடிவுகாலம் தான்.

கொண்டு வந்த வரதட்சிணை பணமும் மாமனார் போட்ட நகைகளும் போதாமல், அவள் சம்பாத்தியம் கட்டிலில் விபசாரி வீட்டில் வேலைக்காரி, போதாமல்போகுமிடமெல்லாம் கிடைக்குமா லஞ்சம் என்று இரவும் பகலும் பொருள்மயக்கம், மனைவியுடன் சேர்ந்து செல்ல அவள் அப்பன் கொடுத்த வாகனத்தில்சின்ன வீட்டை" ஏற்றி கொண்டு வீதியிலே போகும் சுகம் தனி சுகம்.

அறிவு ஜீவியாய் கவிதை கட்டுரை என "பெண்ணீயம்" பேசி கைதட்டல் பலவாங்கி "வரதட்சிணை" கொடுமைக்கு எதிராய் ஊர்வலத்தில் மார்பு நிமிர்த்திஊர்கோலம் போகும் போதும் சுகமே தனி....

வாய்க்கு ருசியாய் மனைவி சமைக்க வயறு முட்ட தின்று விட்டு, "இவ சமயலநான் சாப்பிட, எனக்கு என்ன தலையெழுத்து" என "சின்ன வீட்டுக்காரி"யுடன்ஹோடேலில் கோழி பிரியாணி சாப்பிடுவர்....அதிலொரு தனி சுகம் ...

வாய் கிழிய பெண்ணீயம் பேச விரைதிடுவர் பல மேடை, கேட்போர் வாய் பிளக்கபேசிடுவர் தமிழ் பேச்சு எனது மூச்சு என்று, பெண்ணீயம் பேச்சினிலே பேசுதற்குசுவைதிடுமே, வீட்டினிலே பெண்ணீயம் "வரதட்சிணை"யாகவும்வாகன"மாகவும் இன்னும் பல உருவெடுத்து நிர்ப்பதிலும் அவர்க்கு தனி சுகமே.

"வாயொன்று பேசும், மனமொன்று நினைக்கும், செயல் வேறு நடக்கும்" இதுஒன்றே இவர்க்கு சுகம்.

உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுதல் இவர் பண்பு, இதை அறியாதோர்வாயிலே மண்ணு.... " "