Author Topic: ~ சிரிக்க மட்டும்:- ~  (Read 1732 times)

Offline MysteRy

~ சிரிக்க மட்டும்:- ~
« on: March 28, 2014, 10:56:42 PM »
சிரிக்க மட்டும்:-




1)இளம்பெண்: பாட்டி பொறுக்கி பசங்க வராங்க......
பாட்டி: உள்ள போடீ.....
இளம்பெண் : பாட்டி இத படிக்கறவரும் வராரு....
பாட்டி:அடி ஆத்தி இருடீ நானும் உள்ள வந்துடறேன்..

2)சிரிக்க மட்டும்:-(ஒரு ஆணும், பெண்ணும்)

ஆண்- ஐ லவ் யூ
பெண் - ஹாஹாஹா
ஆண் - நீ இல்லாம நான் இருக்க முடியாது
பெண் - ஹாஹாஹா
ஆண் - உனக்காக நான் சாகக் கூடத் தயார்
பெண் - ஹாஹாஹா
ஆண்- உனக்கு வைரம் பதித்த தங்க மோதிரம் வாங்கித் தரட்டுமா?
பெண் - வாவ்... நிஜமாவா..?
ஆண் - ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா!!...

3)சிரிக்க மட்டும்:-

வாத்தியார் : ஒரு நாட்டின் நல்ல குடிமகனுக்கு என்ன தேவை ?
மாணவன் : ஊறுகாய் சார்.

4)சிரிக்க மட்டும்:-

மகன் : அப்பா...உங்ககிட்ட ஒரு விஷயம்
சொல்லணும்...
அப்பா : சாப்பிடும்போது பேசக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்..

(சிறிது நேரம் கழித்து)

அப்பா : இப்ப சொல்லு...
மகன் : உங்க தட்டுல ஒரு பல்லி செத்து கெடந்துச்சு...அதத்தான் சொல்ல வந்தேன்...

அப்பா : ?

5)சிரிக்க மட்டும்:-

சர்தார்: இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க.
நண்பர்: நீங்க கேட்டீங்களா?

சர்தார்: நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க...

6)சிரிக்க மட்டும்:-

நண்பர் 1 : கொலையும் செய்வாள் பத்தினின்னு கல்யாணத்துக்கு அப்புறம் கண்டு பிடிச்சியா எப்படி ?

நண்பர் 2 : என் மனைவி சமையல் பண்ண ஆரம்பிச்சதிலிருந்து...

7)சிரிக்க மட்டும்:-

தமிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள்.
இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
மாணவன்: டேய் மச்சான், figure டா!

8)சிரிக்க மட்டும்:-

கணவன் : நம்ம பையன் எல்லா பாடத்திலும் முதல் மார்க்னு சொன்னான்,,, நீ ஏண்டி முழிக்கிறே ?
மனைவி : அவன் சொன்னது எல்லா பாடத்திலும் ஒவ்வொரு மார்க் வாங்கியிருக்கிறதை.
கணவன் :?

Offline MysteRy

Re: ~ சிரிக்க மட்டும்:- ~
« Reply #1 on: April 04, 2014, 06:15:46 PM »
சிரிக்க மட்டும்:-




1) டீச்சர்: படிச்சு முடிச்சதும் என்ன செய்யலாம்னு இருக்க பாபு?

வாண்டு பாபு: புக்கை மூடிடலாம்னு இருக்கேன்!

ஆசிரியர் : .............?

2) டீச்சர்: நான் உன்னை பயங்கரமா அடிச்சி கீழே தள்ளிட்டேன்... இது இறந்த காலம். இதுக்கு எதிர்கால வாக்கியம் என்ன?

வாண்டு பாபு: நீங்க ஜெயிலுக்கு போவீங்க!

டீச்சர் :..................

3) டீச்சர்: பாபு, கண்ணை மூடி சாமி கும்பிட்டியே... என்ன வேண்டிக்கிட்ட?

வாண்டு பாபு: இந்த பள்ளிக்கூடத்துல எல்லா வகுப்புகளுக்கும் நீங்களே டீச்சரா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்.

டீச்சர்: உன்னை மாதிரி மாணவன் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். சரி எதுக்காக இப்படி வேண்டிக்கிட்ட?

பாபு: நான் பெற்ற துன்பம் எல்லாரும் பெறட்டுமேன்னு தான்!

4) ஆசிரியர்: நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது, அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?

வாண்டு பாபு: இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது.

5)ஆசிரியர்: வேடந்தாங்கல்ல இருக்குற சாம்பல் நிற கொக்குகள் எங்கிருந்து வருகின்றன?

வாண்டு பாபு: எல்லாம் முட்டைல இருந்து தான் சார்!

ஆசிரியர்: ??@@##

6) ஆசிரியர் : தண்ணீரின் கெமிக்கல் பார்முலா என்ன?

வாண்டு பாபு: HIJKLMNO.

ஆசிரியர் : என்ன பதில் இது?

வாண்டு: நீங்கதானே முந்தின வகுப்புல 'H to O' னு சொன்னீங்க.

ஆசிரியர் : .............?

7) தோழி 1 : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்!
தோழி 2 : எதை வைத்து?
தோழி 1 : பேனாவை வைத்து தான் எழுதினேன்!
தோழி 2 : ?

8 ) தோழி 1 : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
தோழி 2 : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
தோழி 1 : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!
தோழி 2 : ?

9) ஆசிரியர்;ஏண்டா!இவ்வளவு சீக்கிரமா ஸ்கூல் பெல்லை அடிச்சே ?
மாணவன் ;பிள்ளைங்க சந்தோசப் படுற மாதிரி எதாவது செய்யுன்னு தீசேர் தான் சொன்னாங்க..
ஆசிரியர்;?

10) நண்பர் 1 : நேற்றுதான் பிளாக் பெல்ட் வாங்கினியா? நீ கராத்தே சாம்பியன்னு சொல்லவே இல்லையே...
நண்பர் 2 : அட போடா !!! டிராயர் லூசா இருக்குன்னு பிளாக்பெல்ட் வாங்கினேன்!
நண்பர் 1 : ?

11) சிறுவன்: அப்பா செய்யிற தப்பு, பிள்ளையைப் பாதிக்கும்கிறது சரிதாம்பா...
தந்தை: என்னடா... பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறே?
சிறுவன்: வீட்டுக் கணக்கை நீங்க தப்பா போட்டுக் கொடுத்ததுக்கு எனக்குல்ல உதை விழுகுது!
தந்தை: ?

12) ஆசிரியர் : கோபால், அமெரிக்கா இந்த வரைபடத்தில் எங்கே இருக்கு, எல்லோருக்கும் காட்டு.
(கோபால் சரியாகக் காட்டுகிறான்)
ஆசிரியர் : பாபு, நீ சொல்லு... அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் யார்?
வாண்டு பாபு : கோபால் சார்!
ஆசிரியர்: ?

13) ஆசிரியர்: ரொம்ப பழைய விலங்கு எது தெரியுமா?
வாண்டு பாபு: வரிக்குதிரை
ஆசிரியர்: எப்படி?
வாண்டு: அதுல கறுப்பு - வெள்ளை கோடு தான் இருக்கு. கலர் இல்ல... அதான்!
ஆசிரியர்: ?

14 ) ஆசிரியர்: கிருஷ்ணர், இயேசு, ராமர், புத்தர் இவங்களுக்கெல்லாம் என்ன ஒற்றுமை?
வாண்டு பாபு: இவங்க எல்லாரும் அரசு விடுமுறை நாளன்னிக்கு பொறந்தாங்க சார்!
ஆசிரியர்: ?
« Last Edit: May 11, 2014, 12:08:42 PM by MysteRy »

Offline MysteRy

Re: ~ சிரிக்க மட்டும்:- ~
« Reply #2 on: May 15, 2014, 07:48:06 PM »
சிரிக்க மட்டும்.....




1) தாய் ; மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு..
மகன் ; போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே..
தாய் ; அப்படிச் சொல்லாதே..நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டாமா..? சரி..ஏன் உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே? ரெண்டு நியாயமான காரணம் சொல்லு..நான் விட்டுடறேன்..
மகன் ; 1. படிக்கற பசங்களுக்கும் என்னை பிடிக்கல..2. வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலே.!
தாய் ; இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான்..சமத்தா கிளம்புடா கண்ணா..!
மகன் ; நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும் ? நீ ரெண்டு நியாயமான காரணம் சொல்லு.. நான் போறேன்..
தாய் ; சனியனே..1. உனக்கு 53 வயசு ஆகுது..2. நீதாண்டா அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்..!!!!

2) நண்பர் 1: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......
நண்பர் 2: இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா??
நண்பர் 1: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு...

3) மனை‌வி - ஏ‌ங்க உ‌ங்க ‌பிர‌ண்டு‌க்கு பா‌ர்‌திரு‌க்குற பொ‌ண்ணு ந‌ல்லாவே‌யி‌ல்லையே... ‌நீ‌ங்களாவது சொ‌ல்ல‌க் கூடாதா?
கணவ‌ன் - நா‌ன் ஏ‌ன் சொ‌ல்லணு‌ம்.
மனை‌வி - ‌நீ‌ங்க‌ அவர‌் ‌‌பிர‌ண்டுதானே
கணவ‌ன் - அவ‌ன் ம‌ட்டு‌ம் என‌க்கு சொ‌ன்னானா எ‌ன்ன?
மனை‌வி -?

4) ஒருவன்:- திரும்ப திரும்ப என் வீட்ல திருட்டு போகுது, சார்...
போலீஸ் :- அப்ப திரும்பாம ஒரே பக்கமா இருந்துவிட வேண்டியதுதானே ?

5) கணவன் : என்னடி இது குழந்தை அழுதுக்கிட்டு இருக்கிறது
நீ பாட்டுக்கிட்டு சீரியல் பார்க்கிற..?
மனைவி : அட நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுகுது

6) ஆசிரியர் : படிக்கற பசங்க ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்கின போதும்
மாணவன் : அது எப்படி சார் முடியும். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தானே காலேஜ்
« Last Edit: May 25, 2014, 08:18:58 PM by MysteRy »

Offline MysteRy

Re: ~ சிரிக்க மட்டும்:- ~
« Reply #3 on: May 25, 2014, 08:20:21 PM »
சிரிக்க மட்டும்.....




1) நண்பர் 1 : ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம் மச்சி..?"

நண்பர் 2 : "உன் பேச்சை மனைவி கேட்கணும்னு நினைச்சா அது ஆசை,,,! உன் மாமியாரும் கேட்கணும்னு நினைச்சா அது பேராசை..."

நண்பர் 1 : ?????

2 ) தோழி 1 : "என்னோட கணவர் கல்யாணமான புதுசுல என்னை 'தேவயானி, தேவயானி'ன்னு ப்ரியமா கொஞ்சுவார்."

தோழி 2 : "இப்ப என்ன ஆச்சு?"

தோழி 3 : "தேவையா நீ, தேவையா நீ'ன்னு எரிஞ்சு விழறார்."

3) குடிகார‌ர் 1 : குடி குடியை கெடுக்கும்கிற‌து ச‌ரியாப் போச்சு?

குடிகாரர் 2 : எதனால‌ப்பா?

குடிகார‌ர் 2 : க‌ல்யாண‌ம் ஆன‌ உட‌னேயே எம் பொண்டாட்டி என்ன‌ குடிக்க‌ கூடாதுன்னு சொல்லிட்டா

4) பாலு : நான் பொத்தி பொத்தி வளர்த்த பொண்ணு கடைசியில என் கண்ணுல மண்ணை தூவிட்டு ஒருத்தன் கூட ஓடிபோயிட்டா...!

கோபு :இது பரவாயில்லையே, என் பொண்டாட்டி என் கண்ணில மிளகாய் பொடிய தூவிட்டில்ல ஓடிப்போனா....!

பாலு : ? ? ? ? ? ? ? ? ?

5) தோழி 1 : என்ன‌டி இது அனியாய‌மா இருக்கு, உன் வீட்டு வேலைக்காரி லீவு போடறா அன்னைக்கி உன் வீட்டுக்கார‌ரும் லீவு போட‌றாரா?

தோழி 2 : சும்மா இருடி. நான்தான் அவ‌ரை லீவு போட‌ வைப்பேன்,என்னா வேலைக்காரி விட்டுப் போன‌ வேலையை யாரு செய்ற‌து.

தோழி 1 : ????

6) தோழி 1 : உன் வீட்டுக்கார‌ர் காலையில‌ கோல‌மெல்லாம் போடுறாராமே?

தோழி 2 : உன‌க்கு அத‌ யார் சொன்னாடி?

தோழி 1 : என் வீட்டுக்கார‌ர்தான், காலையில‌ கோல‌ம் போடும்போது பார்த்தாராம்.

7) ந‌ண்ப‌ர் 1: பொண்ணு கிளி மாதிரின்னு த‌ர‌க‌ர் சொன்ன‌தை ந‌ம்பி க‌ல்யாண‌ம் ப‌ண்ணிய‌து த‌ப்பா போச்சுப்பா?

ந‌ண்ப‌ர் 2: ஏண்டா என்ன‌ ஆச்சு?

ந‌ண்ப‌ர் 1: கிளி மாதிரி பேசின‌தையே திரும்ப‌ திரும்ப‌ பேசி க‌ழுத்தை அருக்கிறாடா.

8) ம‌னைவி : ந‌ம‌க்கு க‌ல்யாண‌ம் முடிஞ்சி இன்னியோட‌ ப‌த்து வ‌ருச‌ம் ஆகுது?

க‌ண‌வ‌ன் : என‌க்கு அதெல்லாம் ம‌ற‌ந்து போச்சு.

ம‌னைவி : இது கூட‌வா?

க‌ண‌வ‌ன் : ஆமாண்டி, ந‌ல்ல‌ விச‌ய‌ங்க‌ளை ம‌ட்டும் தான் நான் ஞாப‌க‌ம் வ‌ச்சிக்குவேன்.

ம‌னைவி : ?

Offline MysteRy

Re: ~ சிரிக்க மட்டும்:- ~
« Reply #4 on: June 21, 2014, 07:53:35 PM »
சிரிக்க மட்டும்....




1) நண்பர் 1 : உன் மனைவிக்கும் உங்கம்மாவுக்கும் சண்டை வந்தா நீயும் உங்கப்பாவும் எந்த பக்கம் இருப்பீங்க ?

நண்பர் 2 : நான் வாசல் பக்கமா எங்கப்பா கொல்லைப் பக்கமா

நண்பர் 1 : ??

2) தோழி 1 : நீயும் உன் மாமியாரும் ஒரே வீட்டுல இருக்கீங்களே சமையல் யார் பண்ணுவா ?

தோழி 2 : ஒரு நாள் என் கணவர் பண்ணுவாரு மறு நாள் என் மாமனார் பண்ணுவாரு.

தோழி 1 : ??

3) மாப்பிள்ளை வீட்டார் ; ஏன் நிச்சயதார்த்தத்தை பாத்ரூம்ல வைச்சிக்கலாம்னு சொல்றீங்க .. .. ?

பெண் வீட்டார் : பொண்ணைப் பாடச் சொல்வீங்க .. .. பொண்ணுக்கு பாத்ரூம்ல தான் பாட வரும் அதுதான்.

மாப்பிள்ளை வீட்டார் ; ??

4) தோழி 1 : ஏன் ... உன் வீட்டுக்காரர் புடவையெல்லாம் போட்டுட்டுப் பாத்திரம் வாங்கிக்கோனு சொல்றாரு .. ..?

தோழி 2 : புடவையைத் தோய்க்கறதைவிட, பாத்திரம் தேய்க்கறது அவருக்கு ரொம்ப சுலபமா இருக்காம்.

தோழி 1 : ??

5) பேசன்ட் : டாக்டர் கல்யாணமாகி எட்டு வருஷமாகியும் என் மனைவி வயத்துல ஒரு புழு பூச்சிகூட இல்லை.

டாக்டர் : வெரிகுட். நல்ல ஆரோக்கியமான உடம்புனு சொல்லுங்க.

பேசன்ட் : ??

6) தோழி 1 : என்ன உங்க வீட்டுக்காரர் எப்ப பார்த்தாலும் வீட்டுக்கு வெளியவே நிக்கிறார்

தோழி 2 : வீட்டுக்கு மேலே திருஷ்டி பொம்மை வச்சிருந்தோம் அது எங்கேயோ காணாம போயிடுச்சு அதுதான் அவரை நிக்க வச்சிருக்கோம்.

தோழி 1 : ??

7) மகன்: அப்பா .. .. எங்க ஸ்கூலில் அப்பாவின் உழைப்பு என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடக்கப் போகிறது என்ன எழுதலாம்?

அப்பா - நான் ஆபீஸில் உழைப்பதைப் பற்றி மட்டும் எழுது. வீட்டில் மாவாட்டுவதை எல்லாம் எழுதித் தொலைக்காதே.

8 ) நண்பர் 1 : வக்கீல் சார், நீங்க ஏன் உங்க மனைவியை டைவர்ஸ் பண்ணினீங்க?

வக்கீல் : கேஸ் எதுவும் இல்லையான்னு கேட்டு தினமும் நச்சரிச்சுக்கிட்டு இருந்தா. அந்த எரிச்சல்ல டைவர்ஸ் பண்ணித் தொலைச்சிட்டேன்

நண்பர் 1 : ??

9)டாக்டர் : பல் வலியால உங்க மனைவி வாயை திறக்க முடியாம நாலு நாளா இருந்திருக்காங்க நீங்க என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க ?

கணவன் : மனசுக்குள்ளே சந்தோஷப்பட்டுக்கிட்டு இருந்தேன்

டாக்டர் : ??

10) நண்பர் 1 : அந்த ஆள் பயங்கர குடிக்காரர்.

நண்பர் 2 : நிஜமாவா .. ?

நண்பர் 1 : ஆமாம், வெளியூருக்கு எங்கயாவது போனாகூட சரக்கு ரயில்லதான் போவாருன்னா பாருங்களேன்.

நண்பர் 2 : ?

Offline MysteRy

Re: ~ சிரிக்க மட்டும்:- ~
« Reply #5 on: September 11, 2014, 08:22:38 PM »
சிரிக்க மட்டும்.....




1) நண்பர் 1: டேய் நாளைக்கு நான் சினிமாக்கு போறேன் நீயும் வரியா டா

நண்பர் 2: முடிஞ்சா வரேன் டா

நண்பர் 1: முடிஞ்சா பிறகு ஏண்டா வர? படம் ஆரம்பிக்கும் போது வாடா

நண்பர் 2: ??

2) காதலன் : உன் வீட்டுக்கு போயிருந்தேன், இனிமேலும் நமக்கு கல்யாணம் ஆகும்னு எனக்கு தோணல.

காதலி : என்னோட அப்பாவா பார்த்திங்களா?

காதலன் : இல்ல உன் தங்கச்சிய பார்த்தேன் அதான் ...

காதலி : ??

3) அப்பா : புள்ளையடா நீ. எல்லா பாடத்திலும் பெயில். என்ன இனிமே அப்பானு கூப்பிடாத

மகன் : சரி மச்சி.. சும்மா சீன் போடாம கையெழுத்து போடு மச்சி

அப்பா : ??

4) மேனேஜர் : எங்க பேங்க் 'ல இன்ட்ரெஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம்.

கிராமத்தான் : கொடுக்கறதா கொஞ்சம் சந்தோசமா கொடுக்கலாம்ல சார் . ஏன் இன்ட்ரெஸ்ட் இல்லாம கொடுக்கிறீங்க?

மேனேஜர் : ??

5) பிரின்சிபல் : ஏண்டா லேட்..?

மாணவன் : பைக் பஞ்செர் சார் , அதான் லேட்

பிரின்சிபல் : பஸ்ல வரலாம் ல,

மாணவன் : பஸ்ல போகலாம்னு சொன்னா உங்க பொண்ணு கேக்கமாட்டிங்குது சார் ...

பிரின்சிபல் : ?

6) கடவுள் : உன் தவத்தை மெச்சினேன் ஏதாவது 2 வரம் கேள்.

பக்தன் :நான் தூங்கும்போது சாக வேண்டும்

கடவுள் : ஆகட்டும்.மற்ற ஒரு வாரம்?

பக்தன் :எனக்கு தூக்கமே வர கூடாது

கடவுள் : ??

7) அமைச்சர் : மண்ணா எதிரி நாடு மன்னன் உங்களை "போருக்கு" அழைக்கிறார்.

மன்னர் : போருக்குலாம் வரமுடியாது, வேண்டுமானால் "பாருக்கு" வர சொல்லு. அடிச்சு பாக்கலாம்

அமைச்சர் :?

8) காதலன் : நீ இதுக்கு முன்னாடி யாரையாச்சும் லவ் பண்ணிருக்கியா?

காதலி : (பேச வில்லை)

காதலன் : சொல்லு நா தப்ப நினைக்க மாட்டேன்.

காதலி : (பேச வில்லை)

காதலன் : இப்ப நீ சொல்ல போரியா இல்லையா?

காதலி : பேசாம இரு கவுன்ட்(கௌன்ட்) பண்ணிக்கிட்டு இருக்கேன் அப்புறம் மறந்துட போறேன்.

காதலன் : ?

9) கணவன் : என் கண்ணை பார்... அதுல என்ன தெரியுது

மனைவி : உங்களுடைய உண்மையான லவ்

கணவன் : நாசமா போச்சு... கண்ணுல என்னமோ விழுந்திருக்கு அத எடுடி

மனைவி : ?

10 ) டாக்டர் : நர்ஸ் அந்த நோயாளிக்கு ப்ப் இருக்கா?

நர்ஸ் : இல்ல

டாக்டர் : பல்ஸ் இருக்கா?

நர்ஸ் : இல்ல

டாக்டர் : சுகர் இருக்கா?

நர்ஸ் : உயிரே இல்ல அப்றம் எப்படி இது எல்லாம் இருக்கும்?

டாக்டர் : ??

Offline MysteRy

Re: ~ சிரிக்க மட்டும்:- ~
« Reply #6 on: September 19, 2014, 08:13:18 PM »
சிரிக்க மட்டும்......



1) ஆசிரியர் : சுத்தம் சோறு போடும்

மாணவன் : சார் அப்படியென்றால் எது சார் கொழம்பு ஊத்தும் ??

ஆசிரயர் : ??

2) ஆசிரியர் : டேய் முட்டாளுக்கும் , அடிமுட்டாளுக்கும் என்ன வித்தியாசம் டா ?

மாணவன் : நாங்கள் எல்லாம் முட்டாள்கள் சார் . நீங்க எங்களை அடிக்கிறதுனால நீங்க அடிமுட்டாள் சார்

ஆசிரியர் : ?

3) காதலி : சுண்டல் விக்கிற பையன் என்னங்க சொல்லிட்டு போறான்

காதலன் : உன் முகத்தை அவன் கிட்ட காட்டாதனு சொன்னன்லடி

காதலி : அதுக்கு என்ன இப்ப ?

காதலன் : இது பிகர்னு கூட்டிட்டு வந்து உச்சி வெயில்ல பீச் ல உக்கர்ந்துருக்கிங்களே இது ஒரு பொலப்பானு கேக்குறான்

காதலி : ??


4) நண்பர் 1 : நேற்று பக்கத்து வீட்டு பாபுவை நீ ஒன்றுக்கும் லாயக்கில்லைன்னு சொன்ன பிறகு எல்லாரும் மூக்குல விரல வைக்கும் படி ஒரு காரியம் செய்து விட்டான்

நண்பர் 2 : அப்படி என்ன காரியம் செய்தான் ?

நண்பர் 1 : நம்ம தெரு செப்டி டேங் அ குச்சிய விட்டு கலக்கிட்டான் அதான்

நண்பர் 2 : ??

5) மனைவி : என்னங்க இந்த வாரம் முழுவதும் படம் பார்ப்போம். அடுத்த வாரம் முழுவதும் ஷாப்பிங் போவோம்ங்க

கணவன் : சரி அதுக்கு அடுத்த வாரம் முழுவதும் கோவிலுக்கு போவோம்

மனைவி : எதுக்குங்க ?

கணவன் : பிச்சை எடுக்கத்தான் .

மனைவி : ??

6) அப்பா : "ரேங் கார்ட் எங்கடா?"

மகன் : "இந்தாங்கப்பா ரேங் கார்ட்"

அப்பா : "அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா"

மகன்: "சரிடா மச்சான், கையெழுத்து போடு"

7) அப்பா : உனக்கு தம்பி பாப்பா பிடிக்குமா? இல்ல தங்கச்சி பாப்பா பிடிக்குமா?

மகன் : எனக்கு உங்க தங்கச்சியோட பாப்பா தான் பிடிக்கும்....

அப்பா : ?/

8) ஆசிரியர் - ஏண்டா நேற்று நீ ஸ்கூலுக்கு வரல?

மாணவன்-- சார் நேற்று உங்கள மெடிக்கல்ஷாப்ல பார்த்தேன்

உங்களுக்கு உடம்பு சரியில்லைனு நினைச்சு லீவு போட்டுட்டேன் சார்

ஆசிரியர் - ?/

9) நண்பன் 1 : நான் கொடுத்த மோதிரத்தை என்னடா பண்ண?

நண்பன் 2 : ரொம்ப பத்திரமா வச்சிருக்கேன்.

நண்பன் 1 : என் மேல அவ்வளவு பாசமா?, அப்படி எங்க வச்சிருக்கே?

நண்பன் 2 : ஆமான்டா, அடகு கடைல‌

நண்பன் 1 : ?/

10 ) தோழி 1 : என் மருமகள் அக்கிரமம் தாங்க முடியல

தோழி 2 : ஏன் என்ன பண்ணுறா?

தோழி 1 : என்னைப் பார் சிரின்னு வாசல் கதவுல எழுதி அதுக்கும் மேல நான் சிரிக்கும் போட்டோவை மாடி வைச்சிருக்கா

தோழி 2 : ??

11) ஆசிரியர்: பறக்கும் தட்டை எங்கே பார்க்கலாம்?

மாணவன்: எங்க அப்பா அம்மா சணஂட போது பார்க்கலாம்

ஆசிரியர்: ?????