Author Topic: ~ மசாலா பொருட்களின் மகத்துவம்.... ~  (Read 447 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227473
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மசாலா பொருட்களின் மகத்துவம்....




நமது நாட்டில் பயன்படும் மூலிகைகளும், மசாலா பொருட்களும் நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பவனவாகவும் சாப்பிட்ட பின் திருப்தி உணர்வை ஏற்படுத்துபவனாகவும், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுபவனாகவும் உணவின் தரத்தை மேம்படுத்துபவனாகவும் அமைந்துள்ளதாக பல்வேறு ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தி உள்ளன.

உடலின் எடையை குறைப்பதற்கு உதவுகின்ற சில மூலிகைகளையும் மசாலா பொருட்களையும் பார்க்கலாம். வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளை தூண்டி சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதனால் நமது உடலானது கொழுப்பினை எரிக்கும் திறனை கட்டுப்படுத்துகிறது. மஞ்சளுக்கு உடல் எடையை குறைக்கும் திறன் அதிகம் உண்டு. அதிலும் கொழுப்பு திசுக்கள் உருவாவதை குறைக்க உதவுகிறது.

இதன் மூலம் உடலில் கொழுப்பின் அளவு குறைகிறது. வரமிளகாயில் கேப்சைசின் எனும் பொருள் அடங்கி உள்ளது. இது கொழுப்பை எரித்து பசியுணர்வை அடக்கி வைக்கிறது. இலவங்கப்பட்டை உடலின் எடையை குறைப்பதற்கான சிறந்த உணவுப்பொருள். ஏனெனில் இலவங்கப்பட்டையானது ரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலை நிறுத்துகிறது.

நீண்ட நேரத்துக்கு பசியுணர்வு தோன்றாமல் பார்த்துக் கொள்கிறது. கொழுப்பினை விரைவாக செரிக்க செய்கிறது. இஞ்சியானது ரத்தத்தை நன்றாக சுத்திகரிக்கிறது. செரிமான மண்டலத்தில் உணவுப் பொருட்கள் தேங்கி கிடக்காத வகையில் எளிதில் செரிப்பதற்கு உதவுகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டவும் சீரகம் உதவுகிறது. சமையலில் பயன்படுத்தும் கருப்பு மிளகில் பிப்பரைன் எனும் பொருள் உள்ளது. இது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டுகடிறது.

நமது செரிமான சக்தியை தூண்டி கொழுப்பினை விரைவாக எரிப்பதற்கு உதவுகிறது. ஓட்டல்களில் சாப்பிட்ட பின்னர் சாம் சோம்பு சாப்பிட தருவார்கள். இதற்கு காரணம் வாயில் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கும் என்பது மட்டுமின்றி உணவு செரிமானத்துக்கு சோம்பு சிறப்பாக உதவுகிறது. மேலும் பசியுணர்வை சீராக்குவதற்கும் கல்லீரலை தூய்மைப்படுத்துவதற்கும் இது பெரிதும் உதவுகிறது.