சிந்தனை துளிகள்...

* நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற விடாமுயற்சியை நண்பனாக்கிக் கொள்ளுங்கள்,அனுபவத்தை ஆலோசகராக்கிக் கொள்ளுங்கள், எச்சரிக்கை - மூத்த சகோதரனாய் இருக்கட்டும். நம்பிக்கை - அறிவு மிக்க பாதுகாவலராய் இருக்கட்டும்!
* நிலையான வெற்றியைப் பெறுவதற்கு உங்கள் கொள்கையிலும், செயல்முறையிலும் - நீங்கள் நிலையாக இருக்க வேண்டும்!
* வெற்றியால் நீங்கள் வலிமை பெற்று விடுவதில்லை. உங்கள் போராட்டங்களே உங்களை வலிமையுடையவராக்கும்.
* வாழ்க்கையின் துன்ப நிலைகளிலும் விட்டுவிடாமல் இருக்கிறீர்களே... அதுதான் வலிமை.
* யார், வாக்கு தவறாதவனோ, நேர்மையாய் சிந்திக்கிறவனோ, வெளிப்படையாய்பேசுகிறவனோ, மக்கள் அவனையே மதிக்கின்றனர். அவனிடம் நம்பிக்கை வைக்கின்றனர்!
* வாழ்க்கையை உருவாக்கப் பயன்படும் காலத்தை வீணடிக்காதீர்கள். உங்களால்முடிந்தவரை, ஒவ்வொரு கணத்தையும் பயனுடையதாக்குங்கள்
அது - அளவின்றி வழங்கப்படவில்லை நம் கைகளில்!
* சரியானதோர் திட்டம் சாலையின் வரைபடம் மாதிரி. உங்கள் இலக்கைச் சென்றடைய அதுவே சிறந்த வழி!
* செடிகள் பூப்பதற்குத் தேவை தரமான விதையும், தகுதியான மண்ணும்! நல்ல சிந்தனைகள் வளர்வதற்கும் அதுவே தேவை!
* அறிவாற்றலின் பயன் அரிதாகவே இனங் காணப்படுகிறது. அது, கடின காரியங்களையும் எளிதாக்கும் திறன்!