Author Topic: ~ மூட்டு வலிநீங்க பாட்டி வைத்தியம்:- ~  (Read 426 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227463
  • Total likes: 29059
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
மூட்டு வலிநீங்க பாட்டி வைத்தியம்:-




முருங்கைக்கீரையோடு உப்பு சேர்த்து அவித்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் மூட்டுவலிகள் குணமாகும்.

கறிவேப்பிலை, சுக்கு, வெந்தயம், மஞ்சள் ஆகியவற்றை நன்கு வறுத்து பொடி செய்து, தினமும் காலை மாலை இரு வேளையும் உணவுக்குப் பிறகு 5 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மூட்டு வலி, வாதநோய்கள் நீங்கும்.

பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்வு, இடுப்பு வலி போன்ற குறைகள் தீரும்.

முடக்கத்தான், வாதநாராயணன் இரண்டையும் சம அளவு எடுத்து, பூண்டு (ஒரு பல்), மஞ்சள் தூள் (2 சிட்டிகை) சேர்த்து அரைத்து, அதிகாலையில் தொடர்ந்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட மூட்டு வலியும் குணமாகும்.

குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மூட்டு வலிகள் குணமாகும்.

வாதநாராயணன் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் மூட்டு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவை குணமாகும்.

மணலிக் கீரையை மிளகு, பூண்டு, மஞ்சள், ஓமம் ஆகியவற்றோடு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் மூட்டு வலிகள், வாத வலிகள் குணமாகும்.

பரட்டைக் கீரை, முடக்கத்தான் கீரை, வாதநாராயணன் கீரை மூன்றையும் சிறிது பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வாதத்தால் ஏற்படும் வலிகள், மூட்டு வலிகள் குணமாகும்.

பரட்டைக் கீரை, வாதநாரானணன் கீரை, முடக்கத்தான் கீரை மூன்றையும் சம அளவு எடுத்து சாறு பிழிந்து அதில் நல்லெண்ணிய் விட்டுக் காய்ச்சி தைலமாக்கித் தேய்த்தால், கை, கால், இடுப்பு, மூட்டு வலிகள் குணமாகும்.