பட்டுப் போன்ற பாதங்களுக்கு...

* ஒரு பக்கெட்டில் மிதமான சுடுநீரை எடுத்து, அதில், 10 மி.லி., டெட்டாலும், 20 மி.லி., ஷாம்பூவும் கலந்து நன்றாக கலக்குங்கள். பின், அதில் 10 நிமிடம் பாதங்களை அமிழ்த்தி வைத்திருக்கவும்.
* ஸ்பாஞ்சை பயன் படுத்தி, பாதங்களைத் தேய்த்துக் கழுவுங்கள். டூத் பிரஷ் உதவியுடன் அழுக்குகளை நீக்கவும். குதிகாலையும், தேய்த்துக் கழுவி, உலர்ந்த துண்டால், பாதங்களை நன்றாகத் துடைக்கவும்.
* மசாஜ் கிரீம் அல்லது ஏதாவது ஒரு வகை மாயிஸ்சரைசிங் கிரீம் பூசி, பாதத்திலிருந்து கணுக்கால் வரை, "மசாஜ்' செய்யுங்கள்.
* ஐந்து நிமிடம் ஆனதும் கிரீமை துடைத்து, விரல்களுக்கிடையே பவுடர் போட்டுக் கொள்ளவும்.