Author Topic: கண் தானம்  (Read 6075 times)

Offline RemO

கண் தானம்
« on: November 22, 2011, 09:59:25 AM »
1. கண்தானம் செய்வதற்கு எந்த வயது வரம்பும் கிடையாது. ஆண், பெண், சிறியவர், பெரியவர் என வயது வரம்பின்றி யாரும் மரணத்துக்குப் பின் கண்தானம் செய்யலாம்.

2. கண் புரை அறுவை சிகிச்சை செய்தவராக இருந்தாலும் கண் தானம் செய்யலாம்.

3. கண்ணாடி அணிந்திருப்பவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் கண்களைத் தானமாகக் கொடுக்கலாம். ஆனால் எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, ஹெபடைடிஸ் பி ஆகிய நோயால் இறந்தவர்களின் கண்களைப் பயன்படுத்த முடியாது.

4. இறந்தவுடன் 6 முதல் 8 மணி நேரத்துக்குள் கண்களை எடுத்தால்தான் அடுத்தவர்க்குப் பொருத்த முடியும்.

5. கண்தானம் செய்ய பதிவு செய்தவர் இறந்தால், அவரது உடலுக்கு மேலே மின்விசிறி இயங்கிக் கொண்டிருக்குமேயானால், அதை நிறுத்தி விடுங்கள்.

6. இறந்தவரின் கண்கள் மீது நீரில் நனைக்கப்பட்ட பஞ்சை வைக்க வேண்டும்.

7. கண்களை எடுப்பதால் இறந்தவரின் முகம் விகாரமாகி விடும் என்பது அறியாமையே.

8. கண்தானம் செய்ய விரும்புவோர் முன்கூட்டியே கண் வங்கிகளில் பதிவு செய்ய வேண்டும்.


இதை எல்லாம் விட இறந்த பிறகும் சைட் அடிக்கனுமா??
அதுக்கு கண் தானம் பண்ணுங்க

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கண் தானம்
« Reply #1 on: November 22, 2011, 02:07:40 PM »
appuram kallarayil yannal vachu paakkurathu yepdi  :( ;D

avasiyamanaa pathivu  ;)
                    

Offline RemO

Re: கண் தானம்
« Reply #2 on: November 22, 2011, 06:02:08 PM »
ha ha apa kallaraiyil fig varuma

kanthaanam panina :D vera fig ah parkalam la