தரிசனம்
முகத்திரையற்ற உன்
வதனத்தை
தரிசிக்கும் பரவசத்தை விடவா
சொர்க்கம் இனிமையானது?
உன் தரிசனம் கிடைக்காத
என் விரக தாபத்தை விடவா
நரகம் துயரமானது?
சிறை
உன் கண்களில் நான்
சிக்கிக் கொண்டேன்
விடுதலையை விட
இந்த சிறை
எவ்வளவு ஆனந்தமானது
உளறல்
உன்னை பார்க்கும்போதெல்லாம்
உளறுகிறேன்
உலகம் அதை
கவிதை என்கிறது
நீ தொடுக்கும் போர்
ஆயுதபாணியாக நிற்பவளே
உன் முன்
நிராயுதபாணியாக நிற்கும்
என் மேல்
போர் தொடுப்பது நியாயமா?
பிச்சைப் பாத்திரம்
என் பிச்சைப் பாத்திரத்தில்
ஒரு புன்னகையை நீ
போட்டால் கூட போதும்
அதை வைத்து
நான் உயிர் வாழ்வேன்
தொடரும்.........