ஒரு வேளை உணவுக்கு
ஏங்கி கிடக்கிறது பல உயிர்கள்
பஞ்சத்தின் பிடியில் கோர
தாண்டவம் ஆடுகிறது
சாலை ஓரங்களில் எங்கள்
வாழ்க்கை சரிந்து கிடக்கிறது
இங்கே கொக்கரித்து மார்தட்டி
கொண்டாடுகிறது ஒரு கூட்டம்
உலகின் பணக்கார
நாடுகளில் எங்கள் நாடும் --ஆம்
எங்கள் வாழ்க்கையில் உறிந்து
குடித்த நச்சுக்கள் அல்லவா நீங்கள்
நாங்கள் சிந்தும் ஒவ்வொரு துளி
கண்ணீரும் உங்களின் ஒவ்வொருவரின் வம்சமும் அழியுமடா ................