Author Topic: ~ அழகை அள்ளிக்கோங்க! டிப்ஸ் ~  (Read 387 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227477
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அழகை அள்ளிக்கோங்க!
டிப்ஸ்




ஆயிரம் கைகளால் அள்ளி அள்ளிக் கொடுத்தாலும், பெண்கள் 'இன்னும் கொஞ்சம்...’ எனக் கேட்பார்கள், அழகுக் குறிப்புகளை! இதோ, தலை முதல் பாதம் வரை பொலிவாக்கவல்ல பியூட்டி டிப்ஸை வழங்குகிறார், அழகுக் கலை நிபுணர் வசுந்தரா.

நெற்றிச் சுருக்கம், வயதான தோற்றம் தரும். இதைத் தவிர்க்க, தினமும் பாலாடை 2 டீஸ்பூன், வெள்ளரிக்காய் ஜூஸ் 1 டீஸ்பூன், தேன் 2 சொட்டு, ஆரஞ்சு ஜூஸ் ஒரு டீஸ்பூன் கலந்து, சுருக்கம் இருக்கும் இடத்தில் தடவி, அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படி தொடர்ந்து செய்துவந்தால், சருமம் இயல்பு நிலைக்குத் திரும்புவதோடு, மேற்கொண்டு சுருக்கம் வராமலும் தவிர்க்கும்.

புருவம் அடர்த்தியாக வேண்டுமா... ஆலிவ் ஆயில், விளக் கெண்ணெய், கரி சலாங்கண்ணிச் சாறு இவற்றை தலா கால் டீஸ்பூன் எடுத்துக் கலந்து, புருவத்தில் தடவி, மசாஜ் செய்து வரலாம்.

மாதுளம் பழச்சாறு, பாலாடை தலா ஒரு டீஸ்பூன் கலந்து, இதழ் களில் தடவி மசாஜ் செய்து வந் தால், வசீகரிக்கும் பிங்க் நிற லிப்ஸ் உங்களுடைய தாகும்!

காய்ந்த கறிவேப்பிலை 100 கிராம் எடுத்து வெறும் வாணலியில் வறுக்கவும். பிறகு, ஒரு லிட்டர் ஆலிவ் ஆயிலை அதிலேயே ஊற்றிக் கொதிக்க வைக்கவும். பிறகு, ஆறவைத்து சேமிக்கவும். இதை வாரம் 2 அல்லது 3 தடவை தலையில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்து வந்தால், முடி நன்கு வளர்வதுடன் கருமையாகவும் இருக்கும்.



சிலருக்கு மூக்கில் கரும்புள்ளிகள் தோன்றும். இந்த புள்ளிகளை நகத்தால் கிள்ளிப் பார்த்தால் முடி போல் இருக்கும். அவை முடிகளல்ல, அழுக்குகள். இப்படி அழுக்குக் காரணமாக வரும் கரும்புள்ளிகளைப் போக்க, சர்க்கரையை (ஜீனி) பவுடர் ஆக்கி, அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, விரலை நனைத்து, கரும் புள்ளிகள் இருக்கும் இடத்தில், தேய்த்து வர... கரும்புள்ளிகள் மறையும்.

பெரும்பாலும் காதுகளை யாரும் கவனிப்பதில்லை. காதின் பின்புறம் அழுக்கு சேர்ந்து அடை போல மாறிவிடும். இதைப் போக்க, கோலோனை ஒரு பஞ்சில் நனைத்து, காதின் பின்புறத்தை சுத்தம் செய்யலாம். காட்டன் பட்ஸ்களை கோலோனை நனைத்து, காது மடல்களை மேலாகச் சுத்தம் செய்யலாம்.

குங்குமப்பூ ஒரு கிராம் எடுத்து கசக்கி, 10 மில்லி பாதாம் ஆயிலில் கலந்து, லேசாக சூடாக்கி, கை, கால், கழுத்து, முகம் பகுதிகளில் தடவவேண்டும். 15 நிமிடம் கழித்து பாசிப்பயறு மாவு அல்லது கடலைமாவு 2 டீஸ்பூன் எடுத்து, அரை கப் தயிருடன் கலந்து, ஏற்கெனவே ஆயில் தடவிய இடத்திலேயே தடவி மசாஜ் செய்து, 5 நிமிடம் கழித்து கழுவினால், உடலும் முகமும் வசீகரிக்கும்.

தோலுடன் சீவப்பட்ட உருளைக்கிழங்கை அரைத்து ஜூஸ் எடுத்து, பஞ்சில் தொட்டு கண்களின் கீழ் கருவளையம் இருக்கும் இடத்தில் தடவவேண்டும். 5 நிமிடம் கழித்து வீட்டில் தயாரிக்கும் வெண்ணெயை எடுத்து நடுவிரலால் கருவளையங்களின் மீது தடவி மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து முகம் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்துவந்தால் கருவளையம் காணாமல் போகும்.