Author Topic: ***ஸ்ருதி-இன்று***  (Read 2921 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 118
  • Total likes: 118
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
***ஸ்ருதி-இன்று***
« on: November 10, 2011, 04:31:04 PM »

தோல்வியிலும் , தாழ்வு மனபான்மையிலும் இருந்த ஸ்ருதி....இன்று

  யாரோ எழுதின கவிதையும் கட்டுரைகளையும் போட்டே அலுத்து போனதால் என்
வாழ்க்கையில் நான் சந்தித்த சில விடயங்கள் எனக்குள்ளும் சில மாற்றங்களை ஏற்படுத்தியதை ஏன் பகிர கூடாது என்ற எண்ணம் விழைய சில நிகழ்வுகளை மட்டும் பகிர விரும்புகிறேன்..

  எல்லோருக்கு தெரியும் நான் சீக்கிரமாக எல்லோரிடமும் நட்பாக ஆகி விடுவேன்..
ரொம்ப கலகலப்பாக இருப்பேன்...ஆனால் சிலவருடங்களுக்கு முன் இருந்த நான் வேறு இப்பொது இருக்கும் நான் வேறு...

 கல்லூரி வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவித்தவர்கள் பலரும் இருக்கலாம் அதிலும் நான் ரொம்ப சந்தோஷமாக இருந்த நாட்கள் என் கல்லூரி வாழ்கை மட்டுமே....அது போல சந்தோசம் இன்றுவரை கிடைக்கவில்லை...

எல்லோருக்கும் ஏதாவது ஒரு தருணத்தில் சில துயரம் நிகழும் என்று சொல்லுவார்கள்....அதிக சந்தோசம் அதிக துக்கத்தை தரும்னு என் தோழிகள் கூட எனை கேலி செய்ததுண்டு....எதை பற்றியும் கவலை இல்லாமல் கோவையில் நான் என் தோழிகளுடன் சந்தோஷமாக என் படிப்பினை தொடர ....படிப்பும் கூட என் ஆசைக்காக நான் தேர்வு செய்த படிப்பு இல்லை..என் அக்கா வக்கீல் ஆகா ஆசை பட்டு என்னை காட்டயபடுத்தி படிக்க அனுப்பினாள்.. பெற்றோர் தான் தங்கள் ஆசைகளை பிள்ளைகள் மூலமாக நிறைவேற்றிபாங்கனு கேள்வி பட்டு இருப்பீங்க...ஆனால் என் உலகமே என் அக்கா தான்...அவள் சொன்ன சாக கூட துணிவேன்,, அவளுக்காக இந்த படிப்பை படிக்க முடியாதா என என் மனதுக்குள்
 நினைத்து படிக்கச் சென்றுவிட்டேன்...

என் அக்காவின் ஆசைக்காக பிடிக்காத படிப்பை, கொஞ்சமும் என் சுபாவத்துக்கு சரி வராத வக்கீல்படிப்பை படிக்கச் சென்றேன்.... கடைசி வருடம் படிப்பு முடியும் வருடத்தில் பேரிடியாக என் அக்காவின் அகால மரணம் என் வாழ்க்கையில் சூறாவளி போல அடித்து என் சந்தோஷத்தையும் அவளுடனே என் அக்கா கொண்டு போக அன்று முதல் இன்றுவரை என் சந்தோசம் திரும்ப கிடைக்கவில்லை..

   ஒரு முறை தான் என் அக்கா விபத்தில் இறந்துபோனாள்...அவள் இல்லாததால் நான் தினமும் பல விபத்துக்களை சந்திக்கிறேன் தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல்...தனியாக எங்குமே செல்ல தெரியாது எல்லாவற்றிக்கும் அக்காவையே நாடி இருந்து பழகியவள்...சொல்ல வார்த்தைகள் இல்லை....முதல்  முதலாக எனக்கும் தன்னம்பிக்கை வர ஆரம்பித்தது என் அக்காவின் மரணம் என்றே சொல்லலாம்... அதன் பிறகு அக்காவின் இடத்திற்கு நான் வர சில பொறுப்புகள் எனக்குள் வர அதையும் பார்த்துக்கொண்டே தேவை இல்லாமல் சிலரை நம்ப தொடங்கி பல ஏமாற்றங்கள்...ஒவ்வொரு ஏமாற்றமும் எனக்கு தனம்பிகை மட்டுமே தர எல்லாவற்றையும் தாங்கி கொண்டு தனிமையை நேசிக்க தொடங்கினேன்,,

   பாடல்கள் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்,,,ஒரு பாடலை தேட சென்ற போது ஒரு இணையதள அரட்டை பக்கம் என் கண்முன் வர என்ன வென்று பார்க்க அங்கு செல்ல ஒரு புதிய உலகத்திற்கு சென்றதுபோல வியந்து அங்கே எனக்கு சில நிஜமான உண்மையான உறவுகள் கிடைக்க நான்கு வருடம் அத்தளத்தில் இருந்த நாட்கள் என்று பசுமையாய் என் நெஞ்சத்தில் இன்றும் இருக்க...சந்தோஷமாக இருந்தேன்..இழந்த அக்காவின் மறு உருவமாய் ஒரு சகோதரி கிடைக்க சொல்ல வார்த்தைகள் இல்லை...
கவிதை என்னவென்றே தெரியாத என்னை கவிதை   எழுத ஊக்கபடுத்திய நட்புகள் அங்கே இருக்க என் கிறுக்கலை கூட ரசித்தனர்..

  என் தோல்விகள், சந்தோசம் , இழப்பு எல்லாவற்றையும் பகிர்ந்தேன்....நிறைய விடயங்கள் கற்க தொடங்கினேன்...கணினி படிப்பு ஒன்றுமே இல்லாத நான்....நிறைய விஷயங்களை தேடி பிடித்து கற்க தொடங்கினேன்...எனக்காக வலை பூவை நானே வடிவமைத்த போது என்னுள் இருந்த ஆனந்தத்தை சொல்ல முடியாது..

சிறு சிறு விஷயங்கள் என்னை அதிகமாக பாதித்து நிறைய உறவுகளை இழந்தேன்..  அரட்டை பக்கத்தில் தங்களுடைய தனிப்பட்ட சொந்த விடயங்களை  பகிருவதால் ஏற்படும் பாதிப்பு என்னவென்று கற்றுக்கொண்டேன்.. அதனால் தானோ என்னவோ இப்பவும் யாரிடமும் போட்டோ மற்றும் சொந்த விடயங்களை பகிர பயம்...சில நட்புகளால் தோல்வியை கற்றேன்...
சில உறவுகளை தவிர்த்தேன்...என்னை நிஜமாக நேசித்த உறவாய் கூட வெறுத்து ஒதுக்கி தனிமையை நேசிக்க கற்றுக்கொண்டேன்....இன்றும் தனிமையாக இருக்க விரும்புகிறேன்... மேலும் சில உறவுகளை இழக்க மனம் இல்லை...

  இந்த இழப்புகளில் எல்லாம் எனக்கு கிடைத்த விடயம் தன்னம்பிக்கை வளர காரணமாக இருந்தது..

  கனவிலும் பிடிக்காத ஒன்று வேலைக்கு செல்லுவது...பணத்தேவை இல்லாத போதும் நேரத்தை வீணடிக்க விரும்பாமல் வேலைக்கு சென்றேன்...படித்த படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் சம்மந்தமே இல்லாத முற்றிலும் கணினியில் வேலை. கணினியில் தட்டச்சும் தெரியாமல் கஷ்டபட்ட காலங்கள் நிறைய... நான் தட்டச்சை உபயோக படுத்தும் முறை பார்த்தே எல்லோருக்கும் தெரிந்து விடும் எனக்கு ஒன்றுமே தெரியாது என்று....ரொம்ப அவமானமாக இருக்கும்....வீட்டில் கணினி இருந்தும் கேம்ஸ் மட்டுமே விளையாடுவேன்...மௌஸ் மட்டுமே உபயோக படுத்துவதால் தட்டச்சுக்கு வேலை இல்லாமல் இருந்தேன்.....

  ஒரு மாதம் வரை என் மேல் என் அலுவலகத்தில் யாருக்கும் நம்பிக்கையே இல்லை..."இது எங்க ஒழுங்க வேலை செய்ய போகுது..தெரியமா தேவை இல்லாத ஆளை வேலைக்கு எடுத்துவிடோமோ"  என்பது  போல  அவர்கள்  பார்வை  இருக்கும் .. வேதனையான நாட்கள்..
என்னை நம்பி file தரவே மாட்டாங்க.. அப்போது எல்லாம் தாழ்வு மனப்பான்மையால் துவண்டு போனதுண்டு...ஆனால் மனதில் மட்டும் ஒரு வைராக்கியம் இருக்க...தெரியாத வேலையை கற்க தொடங்கினேன்.....

  முதல் file client  வரை சென்று பெரிய feedback . இனி என் வேலை அவ்வளவுதான் என்று நான் இருந்த பொழுது என் teamleader எனக்கு பெரிய ஆறுதல் வார்த்தைகள் சொல்லி "பதட்ட படாம செய் கவி"...உன்னால முடியும் என்று சொல்ல கண்ணீரோடு வீட்டுக்கு வந்து இனி வேலைக்கு போகவே மாட்டேனு சொல்ல..அலுவலக நண்பர்கள் ஒவ்வொருவரும் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு "வேலைக்கு வராம இருக்க கூடாது வாங்க" என்று நம்பிக்கை வார்த்தை சொல்ல அடுத்த நாள் நான் அலுவலகம் சென்ற போது என்னை Team மாத்திட்டாங்க...பெரிய இடி.....அது normal  மாற்றம் தான்...ஆனால் என் மனதில் அந்த feedback ஆள தான்  என்னை மாற்றி விட்டதாக கருதி அழ தொடங்கிவிட்டேன்.....

  என் teamleader கிட்ட தைரியமா சொன்னேன்.,,,,இருந்தா இந்த டீம் ல தான் இருப்பேன் ...இல்லை என்றால் இப்பவே  வேலைய விட்டு போறேன்னு...என் teamleader எவ்வளவு சொல்லியும் நான் சொன்னா வார்த்தையிலே நின்றேன்....சரி என்று அவரும் அந்த டீம் லையே என்னை தொடர வைத்தார்... ஆனால் செய்யும்  வேலை மட்டும் மாற்றி கொடுத்தார்....seniour post ....நான்கு வருடமாக வேலை பார்த்து வாங்க வேண்டிய போஸ்ட் நான் ஒரே மாதத்தில் வாங்கினேன்...கடினமான வேலை ...என்னை நான் நிருபிக்க வேண்டிய தருணம் இது என்று மட்டும் தோன்ற எனக்கு கொடுத்த வேலையை முழு திருப்தியுடன் செய்ய தொடங்கி இன்றுடன் இரு வருடம் ஆகிவிட அன்று என்னை ஏளனமாக பார்த்த கண்களுக்கு மத்தியில்
இன்று அவர்கள் புருவம் உயர்த்தி பார்க்க கூடியதாக இரண்டு நாட்கள் முன் எனக்கு promotion  வர எல்லோரும் இன்று கைகுலுக்கி வாழ்த்துகள் தெரிவித்த வண்ணம் இருக்க சந்தோசம் அளவில்லாமல் என்னுள்...


** ஓவ்வொரு தோல்விகளும் தான் நம்மை சீர்படுத்துகிறது

** எனக்கு இது தெரியாது என்று இருக்காமல் அதை கற்க முயல வேண்டும்

** முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை....

** நிறைய  நூல்கள் பயிலுவதை நாம் தொடர்ந்தால் நமக்கு தெரியாத விடயங்கள் கடல் அளவு உள்ளது

** இணையதளத்தில் இல்லாதது எதுவுமே இல்லை...அவற்றில் நமக்கு பயன் உள்ளதை தேடி பிடித்து கற்க வேண்டும்

** நம்மிடம் இருந்து முதலில் விலக வேண்டியது தாழ்வு மனப்பான்மை ...அது நமக்குள் இருந்தா வெற்றி கிடைப்பது கடினம்

** தலைகனத்தை விட்டொழித்து பிறருக்கு தெரியாத விடயங்களை பகிர்ந்து நட்பாய் பழகினால் நட்பும் வளரும்...

** அரட்டை தளம் என்பது பொழுதை போக்கமட்டுமே என்று  பயன் படுத்தினால் நமக்கு நல்லதாக இருக்கும் (இன்றுவரை நான் இதை கடைபிடிக்கவில்லை..அதனால் தான் சங்கடங்கள் நிறைய)


 முயற்சியோடு எடுத்து வைக்கும் ஒவ்வொரு தடமும் வெற்றி சுவடுகளாக மாறும்... ;) ;)

 முயலுங்கள் வெற்றி பெறுங்கள்...வாழ்க்கை வாழ்வதற்கு மட்டும் அல்ல பயனுள்ளதாக வாழ பழகி கொள்வோம் 
« Last Edit: November 10, 2011, 04:56:14 PM by Shruthi »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: ***ஸ்ருதி-இன்று***
« Reply #1 on: November 10, 2011, 04:58:09 PM »
Nala muyarchi shur
mathavanga life la irunthu kathukuratha vida nama nama life la kathukurathu nalathu

entha oru visayathulayum oru nalathu irukum nu soluvanga
nama thozhvila kuda thannambikai valarum nu puriyuthu unga life la irunthu

all izz well

//
** அரட்டை தளம் என்பது பொழுதை போக்கமட்டுமே என்று  பயன் படுத்தினால் நமக்கு நல்லதாக இருக்கும் (இன்றுவரை நான் இதை கடைபிடிக்கவில்லை..அதனால் தான் சங்கடங்கள் நிறைய)
//

intha karuthula enaku udanpaadu ila
sola pona nan life la neraya kathukitathu chat la than
manitharkala padika solikoduththathu chat than
enaku nala frnds ah koduthathu chat than
chat la palar enai emathinalum enaku sila arumaiyana frnds ah koduthuruku

so itha verum poluthupokka nan nenaikala
ithu en friends circle

Offline gab

Re: ***ஸ்ருதி-இன்று***
« Reply #2 on: November 10, 2011, 04:59:31 PM »
** நம்மிடம் இருந்து முதலில் விலக வேண்டியது தாழ்வு மனப்பான்மை ...அது நமக்குள் இருந்த வெற்றி கிடைப்பது கடினம்.


Thayakkam enbathu Sontha sirai . Athil Thayangi nirpathu unthan kurai .Enra paadal varigal than niyabagam varuthu intha  varigalai vaasikum pothu. Romba kastapaduravanga kandippa atharkana payanai adinje theeruvanga. THodarattum ungal vetri payanam shruthi. ungalin vaazhkai nigalvugalai engaloda intha forumla pagirnthu kondatharku nanri. ithuve oru thoondukola amaiyalam matravargal thannambikai pera.



Remo solura pola neraiya kathukitathu chat moolamthan. Chatla kedacha friends  moolam than neraiya visayangal kathukiten. Chata nalla visayathirku  payanpadurathu namma kailathan iruku.

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 118
  • Total likes: 118
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: ***ஸ்ருதி-இன்று***
« Reply #3 on: November 10, 2011, 05:18:09 PM »
Emo nee solrathu sari da....nanum en chat friends aala than niriya vishayam learn panikiten...but thevai illatha vishayathai potu kozhapikkama chat-a chat-a eduthukanum...thats all da Emo
« Last Edit: November 10, 2011, 05:24:06 PM by Shruthi »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: ***ஸ்ருதி-இன்று***
« Reply #4 on: November 10, 2011, 05:28:55 PM »
shur elathalayum nama kathukalam
so chat la yum kathiko
kani iruka kaai kavarnthatru nu thiruvaluvar solirukar
so entha visayathulayum nalatha matum eduthuko

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 118
  • Total likes: 118
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: ***ஸ்ருதி-இன்று***
« Reply #5 on: November 10, 2011, 05:29:38 PM »
** நம்மிடம் இருந்து முதலில் விலக வேண்டியது தாழ்வு மனப்பான்மை ...அது நமக்குள் இருந்த வெற்றி கிடைப்பது கடினம்.


Thayakkam enbathu Sontha sirai . Athil Thayangi nirpathu unthan kurai .Enra paadal varigal than niyabagam varuthu intha  varigalai vaasikum pothu. Romba kastapaduravanga kandippa atharkana payanai adinje theeruvanga. THodarattum ungal vetri payanam shruthi. ungalin vaazhkai nigalvugalai engaloda intha forumla pagirnthu kondatharku nanri. ithuve oru thoondukola amaiyalam matravargal thannambikai pera.



Remo solura pola neraiya kathukitathu chat moolamthan. Chatla kedacha friends  moolam than neraiya visayangal kathukiten. Chata nalla visayathirku  payanpadurathu namma kailathan iruku.

Nandrigal Gabz
silarin anbuvangalai padika matum thaan mudium....athai unarnthavargalal matume unmaiyai solla mudium...
ennala mudiyathunu ninachu nan thotra vishayanga ellam indru enna yeeni padiyaga uyarthi iruku..

vazhthukkaluku Nandri... :)

Enoda chat friends ala than nan ipo oru Kavithaiyiniya irukenu Solla perumai paduren,,,,and niraya nalla vishayangalai learn seithu avanga verum chat friend=a illama  enga familly-la oru member-a irukaanga.. sila vishayangalai thaan chat window close pannathum maranthuvidanum endru soluren


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

Re: ***ஸ்ருதி-இன்று***
« Reply #6 on: November 13, 2011, 05:30:32 AM »
vaalkailakasta padama kidaikurathu ethumila.. apdi kasta pdam kidaikurathu ilaikurathunila... nee kasta pattu thedi konda pugal thiramai vaalththukal ellam unodu kooda vara en vaalththukal shuru (F)