ராகி இட்லி
ராகி மாவு - நான்கு கப்
உளுத்தம்பருப்பு - ஒன்றரை கப்
உப்பு - தேவையான அளவு
உளுத்தம் பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும்.
ராகி மாவை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து பின் அரைத்த உளுத்தம் பருப்பு மாவுடன் உப்பு போட்டு கலந்து புளிக்க விடவும்.
புளித்த மாவை இட்லியாக ஊற்றி வேக வைக்கவும்.
Note:
இந்த இட்லியுடன் தேங்காய் சட்னி மற்றும் கொத்தமல்லி சட்னி சுவையாக இருக்கும்.