தேவையானவை:
புரூக்கோலி – ஒரு கப், காய்கறி வேக வைத்த தண்ணீர் – 4 கப், வெண்ணெய், மைதா – தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் – ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), தைம் இலை – சிறிதளவு, கிரீம் – ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி, துருவிய சீஸ் – சிறிதளவு, மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு,
செய்முறை:
கடாயில் வெண்ணெயை சேர்த்து, உருகியதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். இதனுடன் தைம் இலை சேர்த்து, நன்கு வதங்கியவுடன் மைதா சேர்த்து வறுக்கவும். பச்சை வாசனை போனதும் காய்கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கிளறிக் கொண்டு இருக்கவும். பிறகு புரூக்கோலி சேர்த்து வேகவிடவும். மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் ஊற்றவும். வெந்தவுடன் ஆற வைத்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, மறுபடியும் அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் இறக்கி… கிரீம், துருவிய சீஸ், கொத்தமல்லி சேர்த்து, கப்பில் ஊற்றி பரிமாறவும்.