தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
வர மிளகாய் - 7
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலையைப் போட்டு, 2-3 நிமிடம் மொறுமொறுவென வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்து, குளிர வைக்க வேண்டும்.
பின் அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய் ஆகியவற்றைப் போட்டு, தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக வறுத்தப் பின் அதில் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து, நன்கு குளிர வைக்கவும்.
அனைத்துப் பொருட்களும் நன்கு குளிர்ந்ததும், மிக்ஸியில் முதலில் கறிவேப்பிலையைப் போட்டு ஓரளவு அரைத்து, பின் அதில் வறுத்து வைத்துள்ள பருப்புக்கள் மற்றும் உப்பு சேர்த்து பொடி செய்து கொண்டால், சுவையான கறிவேப்பிலை இட்லி பொடி ரெடி!!! இதனை இட்லி, தோசை மற்றும் சாதத்தில் சேர்த்தும் சாப்பிடலாம்.