தேவையான பொருட்கள்:
சேமியா - 1 1/2 கப்
சீஸ் - 100 கிராம் (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு, பின் சேமியாவை போட்டு, உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 2-3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, நீரை வடிகட்டிவிட வேண்டும்.
பின் உடனே அதனை குளிர்ந்த நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின் பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு சீஸ், மஞ்சள் தூள் சேர்த்து 4-5 நிமிடம் கிளறி விட்டு, வேக வைத்துள்ள சேமியாவை போட்டு, வேண்டுமெனில் உப்பு சேர்த்து, 5-6 நிமிடம் கிளறி விட்டு, இறக்க வேண்டும்.
இறுதியில் அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, நன்கு பிரட்டி, கொத்தமல்லியைத் தூவி பரிமாறினால், சூப்பரான சேமியா பன்னீர் உப்புமா ரெடி!!!