என்னென்ன தேவை?
வெண்டைக்காய் - 20, மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், சாம்பார் பொடி - ஒன்றரை டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை, அரிசி மாவு - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, கறிவேப்பிலை - 1 கைப்பிடி, எண்ணெய் - பொரிப்பதற்கு.
எப்படிச் செய்வது?
வெண்டைக்காயை காம்பு நீக்கி, முனை உடையாமல் நீளவாக்கில் வகிர்ந்து கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருள்களையும், வெண்டைக்காயில் சேர்த்துப் பிசறி, பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சாப்பாட்டுக்குத் தொட்டுக் கொள்ளப் பிரமாதமாக இருக்கும். மாலை வேளைகளில் குழந்தைகளுக்கு அப்படியேவும் சாப்பிடக் கொடுக்கலாம்.