என்னென்ன தேவை?
கம்பு மாவு - கால் கப்,
சோள மாவு - கால் கப்,
ராகி மாவு - கால் கப்,
உப்பு - தேவையான அளவு,
சர்க்கரை - 1 சிட்டிகை,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
தயிர் - 1 டீஸ்பூன்,
சீரகத்தூள் - கால் டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது.
எப்படிச் செய்வது?
மூன்று மாவுகளையும் உப்பு, சர்க்கரை, எண்ணெய், தயிர், சீரகத்தூள், மிளகாய் தூள், மல்லித்தழை எல்லாம் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து சப்பாத்தியாக திரட்டி இடவும். சூடான குருமா அல்லது தக்காளி தொக்குடன் பரிமாறவும்.4 விரும்பினால் வெந்தயக்கீரை, கேரட், முள்ளங்கி போன்றவற்றையும் சேர்க்கலாம்.