Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
கிராமம்
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: கிராமம் (Read 525 times)
Jawa
Sr. Member
Posts: 408
Total likes: 8
Total likes: 8
Karma: +0/-0
Gender:
$$LoVE IS GoD$$
கிராமம்
«
on:
January 07, 2013, 08:51:39 PM »
இந்தியாவின் முன்னேற்றம்
கிராமங்களில் !
ரூபாய் நோட்டில் சிரித்து
நம்மை ஏளனம் செய்தபடி
கூறிச்சென்ற பொன்மொழிகள் !
'கிராமம்"
பலருக்கு அவமானம் !
சிலருக்கு அருவறுக்கத்தக்கச்சொல் !
என்ன பாவம் செய்தது ?!
உண்டு உயிர்த்து வாழ
உணவினை சுத்தமான காற்றினை
கேட்காமல் ஈந்துகொண்டிருக்கிறதே..
அதுதான் பாவமா?
காலிடையில் கிழித்துக்கட்டியதை
கழுத்தை இறுக்கி சுற்றிக்கொண்டு
கவுரவம் என கானல்நீரைத்தேடி
ருசித்திட அலைகிறார்கள் !
ஆறறிவுபெற்ற அறிவிலிகள் !
பிணம் தின்னும் கழுகுகள் !
தனக்கு ஈந்திட்ட மாந்தர்தம்
நன்றிதனை மறந்தாய் ..
ஏனடா !
அவர்தம் உயிர்வாழ
வழிவகை செய்திட மறுக்கின்றாய் !
கிராமம் அளித்திட்ட
உயர் பண்பாட்டை அழித்தாய் !
பண்பாட்டிற்கு புதியசாயம் பூசினாய் !
நாகரிகபோதையில் தடமாறினாய் !
பெண்மையின் இலக்கணம் மறந்தாய் !
நன்றிக்கு அர்த்தம் தெரியவில்லை !
ஏனோ !
தமிழன் என மார்தட்டுகிறாய்..
தமிழனை மட்டம்தட்டுகிறாய்..
முலைக்காம்பில் முட்டிமோதி பசியாறும்
அஃறிணை உயிர்கூட
தன் இனத்திற்கெனவே வாழ்ந்திடும் !
ஆறறிவு பெற்ற ஆணவமோ !
புத்திகெட்டு
அஃறிணையைவிட கீழாய்..
பாழாய் போகிறாய் !
தமிழின பண்பாட்டை அறிவாயோ ?
அற்பப்பதரே !
விருந்தோம்பலுக்கு இலக்கணம்
அமைத்தவர்கள் நாம்
அறிவாயோ ?
விருந்தோம்பலை உயிரினும் மேலாய் கருதியவர்கள் நாம்
அறிவாயோ ?
தவறிழைத்ததற்கு தன்னுயிர்
ஈந்தவனை பற்றி அறிவாயோ ?
அறிந்துகொள்
அப்பொழுது புரியும்
தமிழனின் பண்பாடும் வாழ்வும் !
கிராமத்தின் பண்பும் பயன்பாடும் !
அதன்பின்
ஊரறிய உரக்கக்கூறு
நான் தமிழன் என்று !
நான் தமிழன் என்று !
Logged
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 593
Total likes: 593
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
Re: கிராமம்
«
Reply #1 on:
January 09, 2013, 03:18:19 AM »
அழகிய அர்த்த செறிவுள்ள கவிதை .... கிராமங்கள்தான் இன்னும் நம் பண்பாட்டு விழுமியங்களை காக்கின்றது .... நன்றாக சொல்லி இருக்கீங்க நன்று ஜாவா
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
கிராமம்