Author Topic: ஒரு வாய்ப்பு கொடு  (Read 835 times)

Offline Global Angel

ஒரு வாய்ப்பு கொடு
« on: December 18, 2012, 04:13:16 AM »
அந்த மாடிக்கு பால்கனிக்கு
அன்றுதான் வந்தாள் ...
இல்லை அதற்க்கு முன்
வந்திருகிறார்கள் ...
இன்றுதான் தனியே  ...


இரவு  தன்  செறிவை
ஒவொரு பார்வையிலும்
உணர்திகொண்டிருந்தது ...
முன்னே ஆடிய
மகிழ மரத்தின் கிளைகளில்
மறைவில் இருந்து
அந்த அகால வேளையிலும்
பாடி கொண்டிருந்தது குயில் ...
குயில் பாடுவது இன்று புதிதல்ல
காதலால் குயில்
கணவனை காதலனை
நாடி பாடுவாதாக தோன்றியது அன்று
இன்று ஏங்குவதாய் தோன்றியது ..

நிலவு நெடு நேரமாய் நகராது நின்றது
அவள் நினைவுகளும் நகர மறுத்தது ..
எதற்காக நிலவின் காத்திருப்பு
தன் காதலிகாகவோ ...?
நிலவே நீயும் ஒருநாள்
எனைப்போல் நிலை குலைவாயோ ?
மணந்தவர் கைகளில்
மழலையாக தவிப்பாயோ ...?

ஆசை அறுபது மோகம் முப்பது
இதுதானோ
நம்பமறுக்கும் மனதுக்கு
மரமாய் நீண்டு கிடக்கும்
மன்னவனின் நடத்தை சான்று பகிர்ந்தது ...

எங்கே தவறு ...
கை கோர்த்த நிமிடத்தில் இருந்து
கரைந்து கிறங்கிய மனது
கலங்கி தவிப்பது புரியாத ஜடமாய் என்று ஆனாய் நீ ...?
அள்ளி அணைத்த அத்தனை தடவையும்
அலுக்காமல் இணைந்தவள்
வெறும் ஆசைகளுகாய் மட்டுமல்ல 
கொண்ட அடங்காத அன்புகாகவும்தான் ...

அன்பாய் அணைத்த கைகள்
வம்பாய் பேசிய உதடுகள்
அரவமாய் தீண்டியதேன் ...
மரிக்க துடிக்கும்  ஆசைகளுக்கு
மரண பயத்தை கொடுத்து
மரணத்தை தள்ளி போடுகின்றேன் ..

என்னை புரியாதவனா நீ
என்னுள் வசிகாதவனா நீ
என்னை சுவாசிகதவனா நீ
என்னுள் அடங்காதவனா நீ ..
எல்லாமாய் ஆனவவன் நீ
என்னவனே எங்கு சென்றாய் ..

தளர்ந்திடும் என் உணர்வுகளுக்கு
உன் தழுவல்கள் வேண்டும்
மயங்கிடும் என் மனதுக்கு
உன் மந்தகாச புன்னகை வேண்டும்
கசந்திடும் என் நினைவுகளை அளிக்க
மனம் திறந்து ஒரு வாய்ப்பு கொடு
உன் மடி சாய்ந்து ஒரு துளி நீர் சிந்த
உரிமை கொடு ... நான் உன்னவள் அல்லவா ..?
                    

Offline Gotham

Re: ஒரு வாய்ப்பு கொடு
« Reply #1 on: December 18, 2012, 10:33:28 AM »
விட்டுச் சென்ற மணாளன்
காணா இவளைக்
கொண்டதோ பசலை..


இறைஞ்சுவதற்கும்
வாய்ப்பு கேட்கும் கவிதை
நன்று..


சிலநேரம் நிலவே காதலி
சிலநெரம் நிலவுக்கும் காதலிகள்


மதி இருபால்பெயர்க் காரணம் புரிகிறது..  8)

Offline Global Angel

Re: ஒரு வாய்ப்பு கொடு
« Reply #2 on: December 18, 2012, 02:10:12 PM »
இது ஆதி கொடுத்த கான்செப்ட் ... அதுக்கு கிறுக்கினேன் கோதம் ... நல்லா வந்திருந்தா சந்தோசம் . பாராட்டுக்கு நன்றிகள்  :D
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: ஒரு வாய்ப்பு கொடு
« Reply #3 on: December 24, 2012, 01:35:05 PM »
ஒரு நுட்பமான தருணத்தை கொண்ட கரு இந்த கவிதையுடையது, இது போன்ற கவிதைகளை எப்படி துவங்குகிறோம் என்பதில் இருக்கிறது அதன் கனம்

கருவை சொல்லிவிட்டு ரொம்ப ஆவலாய் காத்திருந்தேன், எப்படித்தான் எழுதுறீங்கனு பார்க்க‌

நீங்க எழுதி முடித்துவிட்டு வாசிக்க சொன்ன போது முதல் பத்திலையே அசந்து போனேன்

//அந்த மாடிக்கு பால்கனிக்கு
அன்றுதான் வந்தாள் ...
இல்லை அதற்க்கு முன்
வந்திருகிறார்கள் ...
இன்றுதான் தனியே  ...
//

இது ஒரு இறுக்கமான சூழல், கவிதையை வாசிக்க துவங்கும் போதே ஒரு விடயம் புரிந்துவிடும், ஏதோ ஒரு பிரச்சனை என்று, இன்றுதான் தனியே இதுதான் முதல் பத்தியை அதிகமாய் கனமாக்குகிறது

//கை கோர்த்த நிமிடத்தில் இருந்து
கரைந்து கிறங்கிய மனது
கலங்கி தவிப்பது புரியாத ஜடமாய் என்று ஆனாய் நீ ...?
//

மிக தெளிவாக பதிவு செய்திருக்குறீர்கள் புதுமன/ண தம்பதியர் நடுவில் நடந்த சண்டையென்று

//என்னை புரியாதவனா நீ
என்னுள் வசிகாதவனா நீ
என்னை சுவாசிகதவனா நீ
என்னுள் அடங்காதவனா நீ ..
எல்லாமாய் ஆனவவன் நீ
என்னவனே எங்கு சென்றாய் ..
//

மிக கனமான கேள்விகள், என்னும் அடக்காதவனா ? எனும் கேள்வி உரத்து ஒலிக்கிறது

மிக நுட்பமான ஒரு கவிதைக்கு வாழ்த்துக்கள்ங்க‌

இது போன்ற கவிதைகளை இன்னும் இன்னும் எதிர்ப்பார்க்கிறேன்
அன்புடன் ஆதி