//இப்படி குளிர் எனின் ...
அவசரத்து உதவும் கணப்பு இணை தானே ..
அன்பில் ஒன்றலா ... அவசியத்தின் ஒன்றலா
ஒன்றியவர் கண்டிலர் ...
//
ஒன்றியவர் கண்டிலர்
ரொம்ப சாதாரணமா ஒரு பெரிய விடயத்த சொல்லிட்டீங்க உண்மைதான் இல்லையா
//ஆரம்பத்தில் உலக
அதிசயம்போல் பார்த்தவள்தான்
இன்றோ ... இந்த நாட்களை கடக்க
என் பிந்த நாட்டை நாடுகின்றேன்
வாழ்க்கை தரமென்று உயர்ந்தாலும்
வனப்பான வாழ்க்கை எனினும்
என் நாட்டின்
மர நிழல் ஈணும்
குளிர் தென்றல் போதுமடா ...
//
பனி உதிர்வை வர்ணித்த விதம் அழகு, தேங்காய் பூ அட இப்படி நமக்கு தோன்றாம போச்சேனு யோசிச்சுட்டு இருக்கேன், பிரமாதம்
//பூப்போல .. தேங்காய் பூப்போல
பூலோக தேவதைகாய்
வான் மன்னவன் உதிர்க்கும்
வெண் மல்லி பூ போலே
மென்மையும் சுத்தமுமான
பனி பூக்களின் தழுவலை
ரசிக்காதோர் யாருமல்லர் ....
//
பூலோக சொர்க்கம், இன்பத்தின் ராஜாங்கம்னு என்று எல்லாம் மிகை உணர்ச்சி பாடமல் எதார்த்தம் பேசி முடிச்சீங்க பாருங்க அதுதான் சிறப்பு, உண்மை என்னவோ அதை பதிவு செய்யும் போது வாசகன் கவிதையோடு மேலும் ஒன்றிவிடுகிறான், வாழ்த்துக்கள்ங்க