Recent Posts

Pages: 1 ... 8 9 [10]
91
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on January 25, 2026, 12:11:42 PM »
92
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on January 25, 2026, 06:35:51 AM »
93
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on January 25, 2026, 05:43:59 AM »
94
SMS & QUOTES / Re: Words that HIT ! ✨
« Last post by சாக்ரடீஸ் on January 25, 2026, 12:22:26 AM »
Goodness doesn’t need witnesses !

95
Part - 2

96
Audio part -1

97
GENERAL / Re: The Minds Journal
« Last post by சாக்ரடீஸ் on January 24, 2026, 12:44:52 PM »
98
SMS & QUOTES / Re: Just A Reminder For You 🫰
« Last post by MysteRy on January 24, 2026, 09:31:26 AM »
99
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on January 24, 2026, 05:43:51 AM »
100


திருவிழா : தேர்த்திருவிழா
==================

திருவிழான்னு சொன்னதும் எனக்கு எங்க ஊரு தேர்த்திருவிழா தான் நினைவுக்கு வருகிறது.

அது சிவசைலநாதருக்கும் பரமகல்யாணி தாயாருக்கும் நடக்கும் திருமணவிழா தான். 3 ஊருக்குள் நடக்கும் திருவிழா அது. மாப்பிள்ளை ஊரு சிவசைலம். பெண் ஊரு கீழ ஆம்பூர் ன்னு ஒரு சிறிய கிராமம். திருமணம் நடப்பதோ ஆழ்வார்குறிச்சி என்ற கிராமம்.

மாப்பிளை அழைப்பு, பெண் அழைப்பு, திருமணம். பெண் மறுவீட்டுக்கு போவது என்று பல நாட்கள் நடக்கும். எனக்கு என்னமோ சாமீ கூட்டம் எல்லாம் கண்ணுக்கு தெரியாது. என்னுடைய தாத்தா  வருடத்திற்கு 2 முறை புதிய உடுப்பு எடுத்து தருவாங்க. ஒன்று தை பொங்கல், மற்றும் ஒன்று இந்த தேரோட்டத்துக்கு தான். அதிலும் இந்த திருவிழா நமது பள்ளிக்கூடம் கோடை விடுமுறையில் தான் வரும். அதனாலே செம மகிழ்ச்சிய இருக்கும்.

எனக்கு அந்த தேரோட்டத்தில் நிறைய பிடிக்கும். அதிகாலையில் 6.30 எழுந்து, புது ஆடை எல்லாம் போட்டுட்டு  ஓடுவோம். எங்கள் வீட்டுக்கும் கோவிலுக்கும் குறைந்தது 2 km இருக்கும்.  ஓடி போய் சாமி எல்லாம் கும்பிடுறோமோ இல்லையோ. ஆண்டு முழுவதும்.. பள்ளி சீருடையில் பார்த்த என் சக தோழியர்களை வண்ண வண்ண உடையில் பார்க்க போறேன்ன்னு வானளாவிய சந்தோசம் இருக்கும் .

4 தேரடி வீதியில் நிறைந்து வழியும் கூட்டத்தில், என்னோட நண்பர்கள் ஒருவர் ஒருவராக தேடி கண்டு பிடித்து பேசுவதில் அப்படி ஒரு திருப்தி இருக்கும். அதிலும் என் கண்கள், எப்போதுமே படிப்பை பாதியில் விட்டு போன தோழியர்களை தான் அதிகம் தேடும். எங்கள் ஊருல  பொண்ணுகளை அவ்ளோவா படிக்க வைக்கமாட்டாங்க. சிறுவயதிலே திருமணம் செஞ்சு வச்சுருவாங்க.  அப்படி திருமணம் ஆனா என் தோழிகள் அவளின் குழந்தையை என் கையில் கொடுத்து அத்தை பார் அத்தை பார்ன்னு சொல்லும் போது, சிரிப்பாகவும் லேசாக மனமும்   கனத்துதான் போகும்.

அடுத்து என் மனம் அலைந்து தேடுவது.. நீர் மோர் தான்... மோர் எங்கே பெரிய பெரிய அண்டாவில் வச்சு கொடுக்கிறாங்கன்னு தேடி தேடி போய்.. ஒரு செம்பு நிறைய வாங்கி குடிச்ச தான் தேரோட்டம் வந்த திருப்தி வரும்.  அதுக்கு பிறகு. என்னோட தாத்தாவின் கல்லூரி. எனது தாத்தா வேலைபார்க்கும் கல்லூரி இந்த ரதவீதியில் தான் இருக்கிறது.

அங்கே குடுகுடுன்னு ஓடி போய். college canteen ல லட்டு பாதுஷா எல்லாம் வச்சு இருப்பாங்க.. கைக்கு இரண்டு எடுத்துட்டு.. ஓடிருவோம்.. காசு எல்லாம் கொடுக்க மாட்டோம்.. அப்படி ஓடுவதில் ஒரு சந்தோசம். அதன் பிறகு ஒரு ஒரு வகுப்பாக போய் எங்களின் பெயர்களை.. அங்கே இருக்கும் கரும்பலகையில் முத்திரை பதித்து விட்டு மறுபடி.. கோவிலுக்கு திரும்புவோம்.

அதற்குள் சாமீ தேர் நிலைக்கு வந்து இருக்கும். அம்மன் தேர் இழுக்க பெண்கள் எல்லாம் வரிசை கட்டி நிப்பாங்க.  நானும் கூட்டத்துக்குள் நுழைத்து தேரின் வடத்தை பிடித்துக்கொள்வேன் ரொம்ப பெருமையாக. ஆனால் இந்த போலீஸ்காரர்  போ போ சின்னப்புள்ளையெல்லாம் பிடிக்க கூடாது ஓடி ஓடி ன்னு விரட்டிருவாங்க..

நானும், சரி போங்க போலீஸ் அண்ணா ன்னு சொல்லிட்டு ஓடி போய் அடுத்த வேலை பார்க்க போயிருவேன். அது வேற ஒன்னும் இல்லை..  தேர் நிலைக்கு வரும் போது அதே பார்த்து ஓஒ ன்னு கைகள் தட்டி ஆரவாரம் பண்ண.. ஒரு வசதியான இடம் தேடுற வேலை  தான்.

தேர் நிலையத்தில் சரியாக கொண்டு வந்து தேரை நிறுத்தவும்.. பூ போட்டு கைதட்டி முடித்தவுடன். அடுத்து எங்கே ஓடுவோம் தெரியுமா? மிட்டாய் பெட்டி வாங்க தான். தாத்தா கைய பிடிச்சுட்டு..   தாத்தா சீவல் 1kg தாத்தா பூந்தி 1 kg கைநிறைய பலகாரம் வாங்கிட்டு வீறுநடை போட்டு வீடு வந்து சேர்வோம்.  தேர்த்திருவிழா மறுநாள் சித்திரை விஷு... அதற்குரிய பூ பழங்கள் எல்லாம் அங்கேயே என்னுடைய ஆச்சி அங்கேயே வாங்கிட்டு வருவாங்க.. எல்லோரும் சந்தோசமாக வீடு வருவோம்.

வருடங்கள் பல கடந்தாலும், அந்த தேரோட்டம் கூட்டத்தின் சந்தோச கூச்சல், தேரினை இழுப்பவர்களுக்கும், பின் சக்கரத்துக்கு பெரிய தடி.. போடுபவர்களை உற்சாக படுத்தும் விதமாக எழுப்பப்படும் "நகரம்(முரசு)" ஒலியும் சரி.. இன்றும் என் நினைவில் நீந்தி கொண்டு தான் இருக்கின்றது..

Pages: 1 ... 8 9 [10]