Recent Posts

Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 10
41


இது கதை அல்ல, நிஜம்!

பொறுமைக்கு நிறைய உதாரணங்கள் இருக்க, மூங்கிலை உதாரணமாய்க் கூறுவதால் வியப்பில் ஆழ்ந்திருப்பீர்கள் அல்லவா! வியப்பாக இருந்தாலும் உண்மை இதுதான். பொறுமையின் அவசியத்தை எடுத்துரைக்கும் மூங்கிலின் வளர்ச்சியை ஆராய்கிறது இந்தப் பதிவு.

“பொறுமை கடலினும் பெரிது” என்ற திருவள்ளுவரின் வாக்கு இங்கு எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது என்றே தெரியவில்லை. ஏனெனில் இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் எதைச் செய்தாலும் பொறுமையின்றி மிகவும் அவசர அவசரமாகச் செய்கின்றனர். ஆனால், பொறுமை வெற்றியைப் பெற்றுத் தரும் என்கிற உண்மையை உணர மறுப்பது, தோல்வியை ஒப்புக் கொள்வதற்கு சமம். இவ்வுலகில் பொறுமையை ஆயுதமாக்கி வெற்றி கண்டவர்கள் பலபேர் இருக்கிறார்கள்.

வெற்றி கண்ட மனிதர்கள் மட்டுமல்ல தாவரங்களும் பொறுமையை நமக்கு சொல்லிக் கொடுக்கின்றன. அவ்வகையில் பொறுமைக்கு மிகச் சிறந்த உதாரணமாக கருதப்படுவது மூங்கில்தான். புல் வகைகளில் மூங்கில் மிகவும் உயரமாக வளரக் கூடியது. எந்தத் திசையில் இருந்து காற்று வீசினாலும், மூங்கில் ஒரே மாதிரி எதிர்கொள்ள முடியும். மூங்கில் விதைகளை நட்டு தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்த பிறகு முதல் ஆண்டில் வெளியில் நமக்கு எந்தவித மாற்றமும் தெரியாது. ஆனால், மற்ற தாவரங்கள் நன்றாக வளர்ந்து கொண்டிருக்கும். பருவங்கள் மாறிக் கொண்டே இருந்தாலும் முதல் நான்கு ஆண்டுகள் வரை மூங்கில் வளரவே வளராது. மூங்கிலை வளர்ப்பவர் நான்கு ஆண்டுகளுக்கு பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
ஐந்தாவது ஆண்டின் தொடக்கத்தில் மூங்கில் மெல்ல முளைக்கத் தொடங்கும். பிறகு ஒரே ஆண்டில் 80 அடி உயரம் வரை வளர்ந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ஆம், இத்தனை காலம் வளராத மூங்கில் எப்படி ஐந்தாம் ஆண்டில் இவ்வளவு உயரம் வளர்ந்திருக்கிறது என்று ஆச்சரியமாக உள்ளதல்லவா! இதற்கெல்லாம் காரணம் மூங்கிலின் பொறுமையும், அது தன் வேர்கள் மீது கொண்ட நம்பிக்கையும் தான். முதல் நான்கு ஆண்டுகளில் பூமிக்கு வெளியில் மூங்கில் வளரவில்லையே தவிர, பூமிக்கு உள்ளே தனது அடித்தளத்தை மிகவும் வலிமையாக அமைத்துக் கொண்டது.

விதை விதைத்து தண்ணீர் ஊற்றியதும் சடசடவென வளர்ந்து விட்டால், இதன் உயரத்தை வேர்களால் தாங்க முடியாதல்லவா! அதனால் தான் வேர்களை முதலில் பலப்படுத்திக் கொண்டது மூங்கில். வேர்கள் பலமானதும், இனி எவ்வளவு உயரம் வளர்ந்தாலும் தாங்கிக் கொள்ள நான் தயார் என்று வேர்கள் தன் பிடிமானத்தை பூமிக்குள் இறக்கியிருக்க, அசுரத்தனமாக வளர்ச்சியை நோக்கி மூங்கில் பயணிக்கும்.

நான்கு ஆண்டுகள் பொறுமை காத்ததால் தான் ஐந்தாவது ஆண்டில் மூங்கிலின் வெற்றி நிச்சயமானது. இந்தப் பொறுமை தான் மூங்கிலை தடம் புரளாமல் பாதுகாக்கிறது.

*பொறுமையாக இருப்பது ஒரு தவம். இத்தவத்தைப் பின்பற்றிய மூங்கிலை பொறுமைக்கு மிகச் சிறந்த உதாரணமாக கூறுவதில் தவறே இல்லை. நாமும் மூங்கிலைப் போல் பொறுமையாக இருந்து, நமக்கான வெற்றியை நிலையானதாகப் பெற வேண்டும்*
42
GENERAL / Re: Did you know that 🤔🤔🤔
« Last post by MysteRy on June 24, 2025, 05:33:13 AM »

“I wasn’t born strong like Popeye… but I learned to fight every day with whatever I had.” 💪🎨

I grew up in a poor family in Illinois. As a kid, I loved to draw—but surviving came first. By the age of 12, I was cleaning a local theater just to afford pencils and paper. I dreamed of creating a character that would give hope to people like me. But no one believed in me. They said drawing cartoons wouldn’t pay the bills. ✏️💔

I didn’t go to any fancy art school. I taught myself—sketching in the back of the movie house until I got a small job at a local newspaper. That’s where my first comic strips were born. One day, in the middle of a sailor story, a rough guy with one squinty eye and superhuman strength appeared… that’s how Popeye was born. ⚓📰

But success came at a cost. As Popeye’s popularity grew, so did the pressure. I worked around the clock, slept at the studio, ate poorly, and pushed through illness. I remember coughing up blood into a napkin while still drawing. But I kept going—because Popeye wasn’t just a character. He was a symbol for every underdog who kept pushing. 🩺😓

Sadly, my body didn’t last. I died young, at just 43, never seeing how far Popeye would go. But I left this world knowing my pain turned into strength and laughter for millions. ✨🕊️

“Sometimes, the weakest among us create the strongest characters—because we know what it means to fight with nothing but hope.” 🥬🖤
— E.C. Segar
43
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on June 24, 2025, 05:26:12 AM »
44
தூரத்தில் நீ இருந்தாலும்,
துணையாக என் நினைவில் நின்றாய்.
தொலைவுகள் எல்லாம் வெறும் எண்ணம்,
உன் பெயர் மட்டும் தான் என் சொந்தம்.
தூரம் ஒரு எண்ணம் மட்டுமே,
மனதின் பாலம் எல்லாவற்றையும் கடக்கும்.


அடுத்த தலைப்பு 💫 தேடல்
45
POEMS / Re: 🌹Padithathil pidithatu 🌹
« Last post by Jithika on June 23, 2025, 11:54:27 PM »
🌹Your Eye's Tell Me That
       You'll Love Me, Everyday
      No Matter What May Come
     You'll be There To Story 🌹
46
🌹நீயே உனக்கு என்றும் நீங்கா துணை🌹
47
அந்த ஊரிலிருந்து
புறப்படும் கடைசிப் பேருந்து அது,

எங்கு போகும், எப்போது போய்ச்சேரும் எனத் தெரியாது,

வாழ்வின் பயணத்தை நீட்டிக்க கிடைத்த கடைசி வாய்ப்பு அது,

ஓடுவதற்கு ஒரு தூரமோ,

தேடுவதற்கு ஒரு தொலைதலோ இல்லாத அக்கணத்தில் ஆரம்பிக்கிறது முன்பதிவு செய்யப்படாத ஒரு பெரும் பயணத்தின் தொடக்கம்…

NEXT 🌹தூரம்🌹
48
சமையல் கலசம் / Kathirikai Karamani Kulambu
« Last post by MysteRy on June 23, 2025, 08:28:41 PM »
49
⚖️ இறைவனின் தராசில் ⚖️

இறைவனின் தராசில்
எடை போடும் நேரம்..
நல்லெண்ணமும் நற்செயலுமே
நம் கணக்கில் சேரும்..

சாம்ராட்டும் சாமானியனும் ஒன்றென்பதே
அவர் வேதம்..
பொன் பொருளுக்கும் தூசிக்கும் அவர் மேடையில்
இல்லை பேதம்..

தோற்றமும் தொழிலும் கண்டு
அவர் எடை போடுவதில்லை..
பொன்கிரீடத்திற்கும் பூமாலைக்கும்
அவர் வேற்றுமை பார்பதில்லை..

கபடற்ற உள்ளத்தினரையே
பரமிடத்தில் தேவன் சேர்ப்பதுண்டு..
புகழ் , தன்னலமற்ற உள்ளங்களே
புனித வாசல் நோக்கி செல்வதுண்டு..

பூவுலகின் கோடீஸ்வரர்களுக்கும் தேவன்
சொர்க்க வாசலடைப்பதுண்டு..
பூ விற்கும் அம்மாவின் கருணை கண்டு
தன்னருகில் அடைக்கலம் கொடுப்பதுண்டு..

கருணையும் சமத்துவமுமே நாமறிந்த
கடவுளின் கோலமாகும்..
நெஞ்சார்ந்த நீதியும் நேர்மையுமே நித்திய வாழ்வில்
சொர்க்கத்திற்கான திறவு கோலாகும்.
.
50
முதலாளி தொழிலாளி உறவு
கணவன் மனைவிக்கு இணையான
நம்பிக்கையும் நேர்மையும் ஊசலாடும்
உணர்வின் பாலம் போல
ஒன்றாயிருத்தல் வேண்டும்.

முதலாளி தொழிலாளி
இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்
ஒன்றில் நம்பிக்கை மற்றொன்றில் நியாயம்
இரண்டும் சேர்ந்தால் தான் மதிப்பு பெறும்

முதலாளி தொழிலாளி வேலைக்கு
தகுந்த ஊதியம் தர வேண்டும்
அவனை ஒரு இயந்திரம் போல
இயக்கக் கூடாது.

அதேபோல தொழிலாளி
வாங்குற சம்பளத்துக்கு ஏற்ப
விசுவாசத்தோடும் மனசாட்சியோடும்
வேலை செய்ய வேண்டும்.

இங்கு வேர்வை தான் மூலதனம்
வேர்வை சிந்தாமல் இங்கு எவராலும்
தொழிலாளியாகவோ இல்லை
முதலாளியாகவோ ஆக முடியாது

முதலாளி ஆனவுடன்
"நான் தான் எல்லாம்"ன்னு
ஒரு கர்வம் தலையில் வைக்க கூடாது
தொழிலாளியின்
துன்பம் புரிந்து கொள்ள வேண்டும்
அவர்களுக்கும் குடும்பம் இருக்கும்
என்பதை உணர வேண்டும்

"நான் இல்லாம நீயே இல்ல"ன்னு.
ஒரு தொழிலாளி ஒரு போதும்
இப்படி நினைக்க கூடாது
நியாயமான உரிமைகளையும் கோரிக்கைகளும் கேட்டுப் பெற வேண்டும்.
அதில் அறம் இருக்க வேண்டும் தவிர
திமிர் இருக்கக் கூடாது.

கார்ல் மார்க்ஸ் சொன்னார்
உழைப்பின் மதிப்பை

"உழைப்பாளி தான் உலகம் நகர வைக்கும் சக்தி"ன்னு.
ஆனால்
அந்த சக்தி புத்திசாலித்தனமா
இருக்க வேண்டும்
வெறுப்பாக இல்லாமல் விழிப்புணர்வோடு
இருக்க வேண்டும்

பில்கேட்ஸ் சொன்னார்
பொறுமையின் பாடம்

"மூன்று வருடமாக
ஒரு தொழிலை உருவாக்குவதற்கான பொறுமை மக்களிடம் இல்லை.
ஆனால்
நாற்பது வருடமாக வேலைக்கு
செல்லும் பொறுமை அவர்களுக்கு உண்டு"
சிறந்த முதலாளி ஆவதற்கு
பொறுமையாக இருக்க வேண்டும்

பணம் மட்டும் வாழ்க்கை அல்ல
உணர்வும் ஒற்றுமையும் தான் வாழ்க்கை
முதலாளியும் தொழிலாளியும் ஒன்று சேர்ந்தால்,
தொழிலும் வளரும் நாடும் வளரும்

தராசு போன்ற வாழ்க்கை சூழலில்
முதலாளி தொழிலாளி இருவரும் சமமாக
தங்கள் பங்கை தர வேண்டும்.

உழைப்பும் நியாயமும் ஒன்று சேர்ந்தால்
முதலாளி தொழிலாளி உறவு பொன் ஆகும்.


Pages: 1 ... 3 4 [5] 6 7 ... 10