FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on November 20, 2012, 12:06:05 AM

Title: மசாலா பாத்
Post by: kanmani on November 20, 2012, 12:06:05 AM
தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கப்
கத்தரிக்காய் - 2 (நீளமாக நறுக்கியது)
கோவைக்காய் - 5 (நறுக்கியது)
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
வர மிளகாய் - 2
மல்லி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 3 கப்

செய்முறை:

முதலில் பாசுமதி அரிசியை தண்ணீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அரிசியை கழுவி, நீரை வடிகட்டிவிட வேண்டும்.

பின் கத்தரிக்காய் மற்றும் கோவைக்காயை நீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அவ்வாறு ஊற வைக்கும் போது சிறிது உப்பு சேர்க்க வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வர மிளகாய், மல்லி, துருவிய தேங்காய் மற்றும் சீரகத்தை போட்டு நிமிடம் வறுத்து இறக்கி, பின் குளிரை வைத்து, பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் கறிவேப்பிலை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

அடுத்து ஊற வைத்துள்ள காய்கறிகள் மற்றும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் கிளறி வேக வைக்க வேண்டும்.

நன்கு வதக்கியதும், தீயை சற்று உயர்த்தி, கழுவி வைத்துள்ள அரிசி, உப்பு மற்றும் 3 கப் தண்ணீரை ஊற்றி, 2-3 நிமிடம் கொதிக்க விட்டு, குக்கரை மூடி 1-2 நிமிடம் விசில் விட்டு இறக்க வேண்டும்.

இப்போது அருமையான மசாலா பாத் ரெடி!!! இதனை கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.