FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on November 06, 2012, 09:25:32 AM
-
கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. இதனை அதிகம் சாப்பிட்டால், கண்ணில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கலாம். அத்தகைய ஆரோக்கியத்தை தரும் கேரட்டை வைத்து ஒரு கலவை சாதம் செய்தால், கேரட் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் இந்த சாதத்தை காலை வேளையில் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கோ அல்லது அலுவலகத்திற்கு செல்லும் போதோ, விரைவில் சமைப்பதற்கு ஏற்ற சிறந்த உணவாக இருக்கும். இப்போது இந்த கேரட் சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
சாதம் - 1 கப்
கேரட் - 1 கப் (துருவியது)
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 1
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, அதில் துருவிய கேரட்டை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பின்னர், கேரட் ஓரளவு வெந்ததும், அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கேரட் வேகும் வரை வதக்கி இறக்க வேண்டும்.
பிறகு அதனை சாத்துடன் சேர்த்து, கிளறி பரிமாறவும்.
இப்போது சுவையான கேரட் சாதம் ரெடி!!!