மோதலால் கூர் மழுங்கி
மேனி வளுவளுப்பான பாறைகளிடம்
விழுதலின் களிப்பின் அலாதியை
சலசலத்தும்
முணுமுணுத்தும்
லயிக்கும்
மாட்டுத்தொழுவத்தில் பிறந்தவனை போல
அழுக்கான மனதிலும் பிறக்கிறான் புத்தன்
எனினும்
அவனை சிலுவையில் அடிப்பதில்தான்
குறியாக இருக்கிறது அகம்