FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on November 05, 2012, 12:37:44 PM
-
பச்சரிசி அல்லது சீரகசம்பா- ஒரு டம்ளர்
கல்கண்டு - ஒரு கப்
பால் - மூன்று டம்ளர்
நெய் - தேவையான அளவு
ஏலக்காய் - இரண்டு
திராட்சை - ஐந்து
சீனி - தேவையானால்
துருவிய தேங்காய் - இரண்டு தேக்கரண்டி
பாலை நன்றாகா காச்ச வேண்டும் அதனுடன் அரிசியை சேர்த்து சிம்ல கொதிக்க விடவும்.பாதி வெந்ததும் கல்கண்டை சேர்க்கவும்.
சாதத்துடன் நன்றாக வெந்தவுடன் இறுக்கி வைக்கவும்.
வாணலில் நெய் விட்டு ஏலக்காய் ,திராட்சை சேர்த்து வாசம் வந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து சாதத்துடன் கொட்டி கிளறவும்.
இனிப்பு இன்னும் வேண்டும் என்றால் சீனியை மேலாக தூவி மூடி வைக்கவும்.
இனிப்பான சுவையான கல்கண்டு சாதம் ரெடி.