FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on November 05, 2012, 12:32:58 PM
-
கடலைப் பருப்பு - ஒரு கப்
வெல்லம் - 2 கப்
தேங்காய் - ஒரு மூடி
மைதா மாவு - 1 1/2 கப்
ஏலக்காய் - 10
கேசரி பௌடர் - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - சிறிதளவு
நெய் - போளிகளில் தடவ தேவையான அளவு
தேங்காயை மிருதுவாகத் துருவிக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்யவும்.
மைதாமாவுடன் கேசரி பௌடர், உப்பு சேர்த்து 4 தேக்கரண்டி நல்லெண்ணெய், தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து வைக்கவும்.
கடலைப் பருப்பை கால் மணி நேரம் நீரில் ஊற வைத்து, கையால் நசுங்கும் பதத்துக்கு வேக விடவும். வாணலியை அடுப்பில் வைத்து அதில் வேக வைத்த கடலை பருப்பு, தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து கிளறவும்.
வெல்லம் கரைந்து எல்லாம் ஒன்று சேர்ந்து கெட்டியானதும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைக்கவும். ஏலப்பொடியை கலந்து நன்கு பிசையவும்.
பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவையும், பூரணத்தையும் சரி அளவாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
வாழை இலை அல்லது திக்கான ப்ளாஸ்டிக் பேப்பர் எடுத்து நல்லெண்ணெயை நன்கு தடவி, அதன் மேல் ஒரு மைதா உருண்டையை வைத்து கையால் சிறிய வட்டமாக்கவும். அதில் ஒரு பூரண உருண்டையை வைக்கவும்.
பூரணத்தை நடுவில் வைத்ததும் நான்கு புறமும் மைதா மாவைக் கொண்டு நன்கு மூடவும்.
இந்த உருண்டையை வட்ட போளிகளாகத் தட்டவும்.
தவாவை அடுப்பில் வைத்து எண்ணெயைத் தடவி தட்டிய போளியை அதில் போடவும்.
சற்று வெந்தபின் திருப்பிப் போட்டு வேக விடவும். இரு பக்கமும் நெய்யைத் தடவி எடுத்து வைக்கவும். கேஸை சிம்மில் வைக்கவும். பெரிதாக வைத்தால் தீய்ந்து விடும்.
சூடாகவும், ஆற வைத்தும் சாப்பிட சூப்பர் போளி தயார்.