FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on November 01, 2012, 12:32:47 AM

Title: ரவை சேமியா இட்லி
Post by: kanmani on November 01, 2012, 12:32:47 AM
காலையில் சீக்கிரமாக சமைக்க வேண்டும், அதுவும் குழந்தைகள் இட்லி வேண்டுமென்று கேட்டால், அப்போது வீட்டில் இருக்கும் ரவை மற்றும் சேமியாவை வைத்து சூப்பராக 20 நிமிடத்தில் இட்லி செய்து தரலாம். இப்போது அந்த ரவை சேமியா இட்லிவயை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்
சேமியா - 1/4 கப்
சற்று புளித்த தயிர் - 1 கப்
தேங்காய் - 2 டீஸ்பூன் (துருவியது)
கொத்தமல்லி - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
இஞ்சி - சிறிது (நறுக்கியது)
நெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சேமியா மற்றும் ரவையை வறுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், மிளகு தூள், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி, வறுத்து வைத்துள்ள ரவை மற்றும் சேமியாவுடன் சேர்க்க வேண்டும்.

பிறகு அதோடு தயிர், தேங்காய் துருவல், கொத்தமல்லி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை இட்லிகளாக ஊற்றி எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான ரவை சேமியா இட்லி ரெடி!!! இதனை தேங்காய சட்னியுடனோ அல்லது அப்படியே வேண்டுமானாலும் சாப்பிடலாம்.