FTC Forum
தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: kanmani on October 29, 2012, 11:37:19 AM
-
காது கேட்காதவர்களுக்கும் செல்போனை பயன்படுத்த புதிய தொழில்நுட்பம்
(New cellphone technology for Deafness person)
காது கேட்காதவர்களும் தற்போது செல்போனைப் பயன்படுத்த முடியும் என்று புதுக்கோட்டை மாணவர்கள் கண்டுபிடித்த கருவியின் மூலம் நிரூபித்து வருகின்றனர்.
இவர்கள் கண்டுப்பிடித்த கருவியின் காதுகேட்காதவர்களும், செல்போனை பயன்படுத்தி கேட்க முடிவதோடு மட்டுமல்லாமல், பாடல்களையும் கேட்க முடியும் என்பது கூடுதல் தகவல்...
இக்கருவி இயங்குவிதம்:
Head Phone போலவே தோற்றமளிக்கும் இக்கருவியானது, ஒரு சிறிய மோட்டாரைக் கொண்டுள்ளது. இக்கருவியை செல்போனுடன் இணைத்து பேசும்போதே ஏற்படும் அதிர்வுகளால் காதுகேட்காதவர்களுக்கும் பேச்சை கேட்க முடியும் என்ற அடிப்படையில் இந்த கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
சாதாரணமாகவே மனிதனின் காது, மூக்கு, தொண்டை ஆகிவயைகள் ஒரே நரம்புத் தொகுப்புகளால் பிணைக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் இணைக்கும் பல் இத்தொழில்நுட்பத்திற்கு உதவுகிறது. அதாவது கருவியில் உள்ள Stick போன்ற அமைப்பு தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. இதனால் காது கேட்காதவர்கள் ஒலியை கேட்க முடிகிறது.
இக்கருவியை எந்த வகையான Cellphone உடனும் இணைத்துப் பயன்படுத்தலாம் என்று கூடுதல் வசதி. பேட்டரியில் இயங்க கூடிய இக்கருவிக்கான காப்புரிமை (Patent) வாங்க தற்போது முயற்சிகள் செய்துவருகின்றன. காப்புரிமை கிடைத்துவிட்டால் குறைந்த விலையில் இத்தயாரிப்பு கிடைக்கும். காதுகேட்காத நண்பர்களுக்கும் இது மிகச்சிறந்த மாற்று உபகரணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை..